Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெ.கரிகாலனின் கவிதைகள்
#1
என் நண்பர் ஜெ.கரிகாலனின் கவிதைகள் இங்கே தருகிறேன்.(நான் சா.கரிகாலன்)
ரசித்து மகிழுங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இருண்ட வெளிகள்

கால அருவியின் சீரான இயக்கம்.
இருண்டவெளிகளுக்குள்
இரைச்சல்களில் நசியும் இசை.

ஆதி இசை அறுந்து
கூச்சல்களின் கரு அழிந்தது.
பூமியெங்கும் மனிதக் கால்களுக்குள்
மண்ணின் தொடு உணர்வு கொதித்தது.

எல்லாக் கால்களும் சேர்ந்து -
ராட்சத ரயில்பூச்சி நகர்ந்தது.
மனிதம் செத்துப் பிழைக்கிறது.

ரயில்பூச்சியின் கழிவுகளில்
நாகரிகம் நாறியது.
நாற்றம் நகரங்களில் உற்பத்தியாகி
குப்பிகளில் விற்கப்படுகிறது.

முடைநாற்ற வீதிகளில்
மூக்கைப்பொத்தி மனிதனை சபித்து
ஓடித்திரிகிறேன்.



நன்றி : ஜெ.கரிகாலன்


மேலும் தொடரும்................


----- -----
Reply


Messages In This Thread
ஜெ.கரிகாலனின் கவிதைகள் - by கரிகாலன் - 10-11-2005, 01:42 PM
[No subject] - by shanmuhi - 10-12-2005, 06:07 PM
[No subject] - by inthirajith - 10-12-2005, 07:33 PM
[No subject] - by கரிகாலன் - 10-13-2005, 01:03 AM
[No subject] - by இளைஞன் - 10-14-2005, 07:06 AM
[No subject] - by கரிகாலன் - 10-17-2005, 02:52 AM
[No subject] - by RaMa - 10-17-2005, 04:27 AM
[No subject] - by kuruvikal - 10-17-2005, 06:33 AM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 01:40 PM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 01:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)