10-10-2005, 07:05 PM
முறத்தால் புலியை அடித்து தமிழ் பெண் துரத்தினாள்.என்று சங்கால பாடலில் மட்டும் காணுகிறோம்.கொல்லைபுறத்துக்கே துணையின்றி போக பயந்த சுபாவமாக பழக்கிய சமுகத்தில் தனது புலியாக போராடி சக்தியை காட்டினாள் . வியந்தார்கள் பாராட்டினார்கள்...பெண்களிடையே பெண்கள் விடுதலை பற்றி சிந்தனை வளர்ந்தது..ஆனால் சமூகத்தில் சிந்தனையில் பெரிய மாற்றத்தைக்காணவில்லை பெண்கள் எதிரான பழைவாத கட்டுமான அமைப்பை உடைப்பதற்க்கான போராட்டங்களை மற்ற தொழிலாளர்கள் மாணவர்கள் புத்திஜீவிகளுடன் இணைந்து சமூக மாற்றத்திற்க்கான பணியை செய்வதன் மூலம் தான் பெண்களுக்கான முழு ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெற முடியும்

