10-10-2005, 07:03 PM
அங்கென்றும் இங்கென்றும்
எங்கும் நிறைந்திருக்கும்
இறைவனுக்கடுத்து
இன்று தமிழினமே...
ஒரு குட்டித்தீவை மட்டுமே
துளைத்துக் கொண்டிருந்த வேர்கள்
இன்று பூமிப்பந்தின்
சகல எல்லைகளையும் குடைகிறது.
எங்குமே சிக்காமல் போவதில்லை
வியர்த்து நிற்கும் வேர்களுக்கு - நீர்.
எந்த ந்திக்கரையிலும் இளைப்பாறிடாது
இந்த வேர்கள் பயணிக்கட்டும்
மகா சமுத்திரங்கள் வழியே
குட்டித்தீவின் கரைகள் தொட்டு
கிளர்ந்தெழும் புது கிளை இலை கொண்டு
புதுப்புது வாசனை கொண்ட
பூக்களை காற்றிலாட வைக்கும் வரையிலும்
வேர்கள் வேர்க்கட்டும் ஓய்வின்றி...
எங்கும் நிறைந்திருக்கும்
இறைவனுக்கடுத்து
இன்று தமிழினமே...
ஒரு குட்டித்தீவை மட்டுமே
துளைத்துக் கொண்டிருந்த வேர்கள்
இன்று பூமிப்பந்தின்
சகல எல்லைகளையும் குடைகிறது.
எங்குமே சிக்காமல் போவதில்லை
வியர்த்து நிற்கும் வேர்களுக்கு - நீர்.
எந்த ந்திக்கரையிலும் இளைப்பாறிடாது
இந்த வேர்கள் பயணிக்கட்டும்
மகா சமுத்திரங்கள் வழியே
குட்டித்தீவின் கரைகள் தொட்டு
கிளர்ந்தெழும் புது கிளை இலை கொண்டு
புதுப்புது வாசனை கொண்ட
பூக்களை காற்றிலாட வைக்கும் வரையிலும்
வேர்கள் வேர்க்கட்டும் ஓய்வின்றி...
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

