10-10-2005, 05:49 PM
Karikaalan Wrote:ஜென் கவிதை தொடர்கிறது.............
மலை சிகரத்தின் உச்சியில்
முடிவின்மை விரிந்திருக்கிறது
எல்லாத் திசைகளிலும் ! தனது
நள்ளிரவு பரணிலிருந்து எட்டிப்
பார்க்கும் தனிமை நிலா, பனியடர்ந்த
குளத்தில் தெரியும் தன்
பிம்பத்தை வியக்கிறது.
நடுநடுங்கியவாறு,
நிலவை நோக்கி
காதல்பாடல் இசைக்கிறேன்.
காட்டு வாத்துகளுக்குத்
தம் பிம்பத்தைப்
பதிய வைக்கும் உத்தேசமில்லை.
நீரும்
அவற்றின் பிம்பத்தைப்
பெற
மனம் கொள்ளவில்லை.
ஜென் கவிதைகள் தொடரும்...............
கவிதை உத்திகளில் ஒன்று படிமங்களை உபயோகம் செய்வது. நிலவின் பிம்பம் நீரில் வீழ்கிறது. நீரில் உள்ள சிறு அலைகளினால் நடுக்கம் ஏற்படுகிறது. ஆனால் அருகில் உள்ள வாத்துகளால் நீரில் எந்த ஒரு பிம்பத்தையும் ஏற்படுத்த முடிவதில்லை. அதைப் பற்றி அவை கவலை கொள்ளவுமில்லை. தன்னுள் வாத்துகளின் பிம்பம் விழவில்லை என்று நீரும் கவலை கொள்ளவில்லை.
ஆமாம் - ஒரு மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ளும் பொழுது அவனுடைய புகழ் எங்கும் பரவுகிறது - விரிகிறது. அதைக் கண்டு அவனே நடுக்கத்துடன் பார்க்கிறேன்.
அதே சமயம் - அற்பர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படி ஒரு புகழ் வாழ்க்கை தேவை என்றும் அற்பர்கள் முனைவதில்லை.
நன்றி கரிகாலன் - நல்லதொரு கவிதையை பதிப்பித்தமைக்கு.
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

