11-17-2003, 05:49 AM
<img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/kajol246.jpg' border='0' alt='user posted image'>
நேரம் ஆகிக்கொண்டே இருந்தது
இருள் சூழஆரம்பித்துவிட்டது..
தெருவில்
ஆட்கள் நடமாட்டம்
கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்துவிட்டது..
போகும் ஓரிரண்டு பேரும்
என்னை கேள்வியோடுபார்த்தார்கள்...
இன்னும் எத்தனைநேரம் காத்திருப்பது?...
நீ வருவாய்என்றால்
காத்திருப்பது ஒன்றும்
கஸ்டமில்லை
தூரத்தில் இரண்டுபிள்ளைகள்
சைக்கிளில் வருவது
தெரிந்தது.... அதில் ஒன்று நீதான்
உள்மனம் சொன்னது...
வலது புறம் வந்த பிள்ளை
இடதுபுறம் இருந்த குறுகிய ஒழுங்கையில்
சென்றுவிட
நீ மட்டும் நேராய் வந்தாய்..
".............." உன்பெயர்சொல்லி அழைத்தேன்....
தினமும் உன் பெயரை மனதுக்குள் மட்டும்
உச்சரித்துபழகியிருந்தேன்...
இன்றுதான் வாய்ப்புவாய்த்து
உன் பெயர்சொல்லி அழைக்க
உன் பெயர்கேட்டு திடுக்கிட்டுவிட்டாய்.
வெடவெடத்துப்போய் நின்றுவிட்டாய்...
"நான்தான் ..............."
"ஐயோ என்ன செய்யுறீங்கள் இங்கே" கோபம் தெறித்தது வார்த்தைகளில்.
உனக்கில்லாத உரிமையா?
"உங்களைப்பார்க்கத்தான் வந்தன்"
"ஐயோ என்னால இங்கு நின்று கதைக்க முடியாது. கோயிலுக்குத்தானே வரச்சொன்னனான்"
"மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..................... "
"சரி நேரம் போச்சு நான் போறன். அம்மா ஏசுவா"
ஆனாலும் நீ அங்கு தான் நின்றிருந்தாய்.
நான் விடைகொடுக்க காத்திருந்தாய்
"போகிறேன் என்று சொல்லாதுங்கோ
பொயிற்றுவாறன் என்று சொல்லுங்கோ"
விடைகொடுத்தேன்...
நீ புன்னகைப்பது தெரிந்தது.
விடைபெற்றுக்கொண்டாய்.
அன்று கொஞ்சம் நிம்மதி
கொஞ்சம் சுவாசித்துக்கொண்டேன்
நேரம் ஆகிக்கொண்டே இருந்தது
இருள் சூழஆரம்பித்துவிட்டது..
தெருவில்
ஆட்கள் நடமாட்டம்
கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்துவிட்டது..
போகும் ஓரிரண்டு பேரும்
என்னை கேள்வியோடுபார்த்தார்கள்...
இன்னும் எத்தனைநேரம் காத்திருப்பது?...
நீ வருவாய்என்றால்
காத்திருப்பது ஒன்றும்
கஸ்டமில்லை
தூரத்தில் இரண்டுபிள்ளைகள்
சைக்கிளில் வருவது
தெரிந்தது.... அதில் ஒன்று நீதான்
உள்மனம் சொன்னது...
வலது புறம் வந்த பிள்ளை
இடதுபுறம் இருந்த குறுகிய ஒழுங்கையில்
சென்றுவிட
நீ மட்டும் நேராய் வந்தாய்..
".............." உன்பெயர்சொல்லி அழைத்தேன்....
தினமும் உன் பெயரை மனதுக்குள் மட்டும்
உச்சரித்துபழகியிருந்தேன்...
இன்றுதான் வாய்ப்புவாய்த்து
உன் பெயர்சொல்லி அழைக்க
உன் பெயர்கேட்டு திடுக்கிட்டுவிட்டாய்.
வெடவெடத்துப்போய் நின்றுவிட்டாய்...
"நான்தான் ..............."
"ஐயோ என்ன செய்யுறீங்கள் இங்கே" கோபம் தெறித்தது வார்த்தைகளில்.
உனக்கில்லாத உரிமையா?
"உங்களைப்பார்க்கத்தான் வந்தன்"
"ஐயோ என்னால இங்கு நின்று கதைக்க முடியாது. கோயிலுக்குத்தானே வரச்சொன்னனான்"
"மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..................... "
"சரி நேரம் போச்சு நான் போறன். அம்மா ஏசுவா"
ஆனாலும் நீ அங்கு தான் நின்றிருந்தாய்.
நான் விடைகொடுக்க காத்திருந்தாய்
"போகிறேன் என்று சொல்லாதுங்கோ
பொயிற்றுவாறன் என்று சொல்லுங்கோ"
விடைகொடுத்தேன்...
நீ புன்னகைப்பது தெரிந்தது.
விடைபெற்றுக்கொண்டாய்.
அன்று கொஞ்சம் நிம்மதி
கொஞ்சம் சுவாசித்துக்கொண்டேன்

