10-09-2005, 07:22 PM
Mathan Wrote:MUGATHTHAR Wrote:tamilini Wrote:தொலைஞ்சினம். இனி ஆண்களே குழந்தைகளை பெற்றெடுக்கும் வசதியையும் கண்டு பிடிச்சா போச்சு. பெண்களுக்கு நின்மதி. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்பவும் இதையொண்டைத்தான் செய்யிறியள் அதையும் எங்கடை தலையிலை கட்ட ஆசையைப் பாருங்கோ....
(ஆனா அந்த 10மாசமும் நீங்க படுத்தும் பாட்டிலும் பார்க்க நாங்களே பிள்ளையை சுமந்தா தேவலையப்பா....)
என்ன முகத்தார் அனுபவமுள்ள நீங்களே இப்படி சொல்றீங்க? அண்மையில் என்னுடைய கசின் ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு வீட்டில் அவர் பட்ட வேதனையும் வலியும் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை. பின்பு கசின் அவரை Hospitalக்கு அழைத்து சென்ற போது அவரின் மாமியாரை அழைத்து கொண்டு நானும் கூட சென்றிருந்தேன். அங்கு கசினையும் மனைவியையும் Labour ward room க்குள் அழைத்து சென்றதும் நாங்கள் அந்த வராந்தாவில் காத்திருந்தோம், அப்படி காத்திருந்த நேரம் வெவ்வேறு அறைகளில் இருந்து அலறல் சத்தங்களும் பிரசவ வேதனை குளறல்களும் கேட்டன, ஒவ்வொரு குழந்தையும் பெற்றெடுக்க அவர்கள் தம்மை எந்த அளவிற்கு வருத்த வேண்டி இருக்கின்றது என்பதை நேரடியாக அறிந்த போது உண்மையிலேயே தாங்க முடியவில்லை, இந்த அனுபவம் நான் இனி ஒருவரை திருமணம் செய்து அதன் பின்பு குழந்தைக்காக இப்படி ஒரு கஷ்டத்தை அவருக்கு கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியை மனதில் எழுப்பியது. நாம் என்னதான் எப்படிதான் செய்தாலும் அந்த 10 மாதம் குழந்தையை சுமந்து பெறுவதற்கு எதுவுமே ஈடாகாது என்றுதான் சொல்வேன்,
நீங்கள் ஒன்றைப் பாத்திட்டே சா... கேட்டிட்டே இப்படிச் சொல்லுறீங்க... இவற்றைப் படிச்சவைக்கு எப்படி இருக்கும்...! பெண் எப்படியானவளாகத் தெரிவாள்...??! இப்ப புரியுதா... களத்தில கொட்டுறதுகளில எத்தினை குப்பை எண்டு...! ஆனா எல்லா மனிதருக்கும் எல்லா அனுபவமும் இருப்பதில்லை...அவையவை கிடைக்கும் போது அவரவர் பார்வைகளும் தெளிவு பெறும்...! மேற்கில் குழந்தை பிறக்கும் ஒவ்வொரு தடவையும் கணவனை லேபர் றூமுக்கு அழைப்பார்கள்... நீ உன் மனைவியை எவ்வளவு கஸ்டப்படுத்துகிறாய்...எவ்வளவு கஸ்டத்துடன் குழந்தையைத் தருகிறாள்...அவள் மீது நீ காட்ட வேண்டிய அன்பு பாசம் எவ்வளவு என்பதைப் புரிய வைக்கத்தான்....! எத்தனை பேர் புரிஞ்சுக்கிறாங்க...???! விட்டிட்டு அடுத்த கலியாணமும் முடிக்குதுகளே...???! அதுக்கு விமர்சனம் வேற... கவிதை வேற...ஆத்திரம் தான் வரும்...இப்படியானதுகளை பார்க்கும் போது..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

