10-09-2005, 06:11 PM
<b>மனமே கோயில் ! மனிதனே தேவன் !
இந்தியனே ! இந்தியனே !
முதலில்
நீ இருக்க ஒரு
இடம் தேடு
ஆண்டவனுக்கு
வேண்டிய இடத்தை
அவன் தேடிக் கொள்வான் !
பாவம்!
கடவுளைப் பற்றி அதிகம் தான்
கவலைப் படுகிறீர்கள்....
கடவுளோ
மனிதர்களை எண்ணியன்றோ
மனம் வருந்துகிறான்....
பக்தியை காட்டினால்
பரமன் மகிழ்வான் !
நீங்களோ உங்கள்
சக்தியை காட்டுகிறீர்கள்....
ஆண்டவன்
சங்கடப் படுகிறான்...
உடலில் ரத்தம்
ஓட வேண்டும் என்பதுதான்
இறைவன் நமக்கு
இட்ட கட்டளை !
தெருவில் அதனை
ஓட விடுவது
தெய்வ நிந்தனை !
எந்த மதக் கொடியையும்
ஏற்றிக் கொள்ளுங்கள் !
ஆனால் அதை
ரத்தத்தில் கழுவி
அழுக்காக்காதீர்கள் !
அவரவர் மதக் கொடிகள்
அசையட்டும் அழகாய்...
வெறியுன்னும் நெருப்புக்கு
விசிறியாய் அல்ல...
களைத்தவர் வாழ்விற்குக்
கலங்கரை விளக்காய் !
ஒவ்வொரு மதமும்
உபதேசிப்ப தென்ன ?
அன்பை அல்லவா ?
அந்த
அன்பை அடகு வைத்த
ஆயுதம் வாங்குவது ?
இன்னொரு நவகாளியை
இந்தியா தாங்குமா ?
அவரவர் விருப்பபடி
அனைவருக்கும் உரிமையுண்டு..
கோவில்களில் கும்பிடலாம்
தேவாலயங்களில் தியானிக்கலாம்
மசூதிகளில் தொழலாம்
ஆனால்
எவனது விருப்பப்படியும்
எவனுக்கும் உரிமையில்லை
மதவெறி வாளால்
மற்றவரைக் கொல்வதற்கு !
கங்கையும் காவிரியும்
கை கலந்து கொள்வதில்லை
கடலில் தான் கலக்கின்றன !
மதங்கொண்ட யானைகள்
மோதிக் கொண்டன...
நடுவில் அகப்பட்டு
நசுங்கிப் போனது
எளிய மக்களின்
வாழ்க்கை யல்லவா ?
இந்துவே திரண்டு வா !
என்றோ
கிறிஷ்தவனே கிளம்பி வா !
என்றோ
இஷ்லாமியனே எழுந்து வா !
என்றோ
எழுப்பாதீர்கள் முழக்கம்....
மனிதனே இணைந்து வா !
என்று முழங்கி
மானுடத்தை இனியெனும்
மகத்துவப் படுத்துங்கள்
தீபங்களே !
நீங்கள்...
தெரிந்து கொள்ளுங்கள்
திரிகள் மட்டுமே
கருகிக் கொண்டிருக்கின்றன.....
தூண்டு கோல்கள்
சுகமாய் தூங்குகின்றன !
இந்தியனே ! இந்தியனே !
முதலில்
நீ
இருக்க ஒரு
இடம் தேடு !</b>
இந்தியனே ! இந்தியனே !
முதலில்
நீ இருக்க ஒரு
இடம் தேடு
ஆண்டவனுக்கு
வேண்டிய இடத்தை
அவன் தேடிக் கொள்வான் !
பாவம்!
கடவுளைப் பற்றி அதிகம் தான்
கவலைப் படுகிறீர்கள்....
கடவுளோ
மனிதர்களை எண்ணியன்றோ
மனம் வருந்துகிறான்....
பக்தியை காட்டினால்
பரமன் மகிழ்வான் !
நீங்களோ உங்கள்
சக்தியை காட்டுகிறீர்கள்....
ஆண்டவன்
சங்கடப் படுகிறான்...
உடலில் ரத்தம்
ஓட வேண்டும் என்பதுதான்
இறைவன் நமக்கு
இட்ட கட்டளை !
தெருவில் அதனை
ஓட விடுவது
தெய்வ நிந்தனை !
எந்த மதக் கொடியையும்
ஏற்றிக் கொள்ளுங்கள் !
ஆனால் அதை
ரத்தத்தில் கழுவி
அழுக்காக்காதீர்கள் !
அவரவர் மதக் கொடிகள்
அசையட்டும் அழகாய்...
வெறியுன்னும் நெருப்புக்கு
விசிறியாய் அல்ல...
களைத்தவர் வாழ்விற்குக்
கலங்கரை விளக்காய் !
ஒவ்வொரு மதமும்
உபதேசிப்ப தென்ன ?
அன்பை அல்லவா ?
அந்த
அன்பை அடகு வைத்த
ஆயுதம் வாங்குவது ?
இன்னொரு நவகாளியை
இந்தியா தாங்குமா ?
அவரவர் விருப்பபடி
அனைவருக்கும் உரிமையுண்டு..
கோவில்களில் கும்பிடலாம்
தேவாலயங்களில் தியானிக்கலாம்
மசூதிகளில் தொழலாம்
ஆனால்
எவனது விருப்பப்படியும்
எவனுக்கும் உரிமையில்லை
மதவெறி வாளால்
மற்றவரைக் கொல்வதற்கு !
கங்கையும் காவிரியும்
கை கலந்து கொள்வதில்லை
கடலில் தான் கலக்கின்றன !
மதங்கொண்ட யானைகள்
மோதிக் கொண்டன...
நடுவில் அகப்பட்டு
நசுங்கிப் போனது
எளிய மக்களின்
வாழ்க்கை யல்லவா ?
இந்துவே திரண்டு வா !
என்றோ
கிறிஷ்தவனே கிளம்பி வா !
என்றோ
இஷ்லாமியனே எழுந்து வா !
என்றோ
எழுப்பாதீர்கள் முழக்கம்....
மனிதனே இணைந்து வா !
என்று முழங்கி
மானுடத்தை இனியெனும்
மகத்துவப் படுத்துங்கள்
தீபங்களே !
நீங்கள்...
தெரிந்து கொள்ளுங்கள்
திரிகள் மட்டுமே
கருகிக் கொண்டிருக்கின்றன.....
தூண்டு கோல்கள்
சுகமாய் தூங்குகின்றன !
இந்தியனே ! இந்தியனே !
முதலில்
நீ
இருக்க ஒரு
இடம் தேடு !</b>
....

