10-09-2005, 08:25 AM
Thala Wrote:[quote=Mind-Reader]
அரைச்ச மாவை இனியும் எத்தனை தரம் அரைக்கிறது. புலிகளுக்கு மட்டும் அல்ல தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும் சிங்கள தலைமை எதுவும் எமக்கு விடிவு தராது என்பது.
ஆகவே சிங்கள தேச தேர்தல் என்னது தமிழர் தரப்பு விடுதலைப் போராட்டத்திற்கான இன்னுமொரு காய் நகர்த்தல் அன்றி இதில் வேடிக்கை பார்க்க ஒன்றும் இல்லை. எமது விடுதலை யுத்தத்தில் சிங்கள தேச தேர்தல் என்பது யுத்தத்தில் நாம் வகிக்கும் தந்திரோபாய நடவடிக்கையின் ஒரு அம்சம் அன்றி வெறும் பார்வை பொருள் அல்ல.
உண்மையா நீங்க என்ன சொல்ல வாறீங்க எண்டு விளங்கவே இல்லை.. தயவு செய்து விபரமாச் சொன்னால் விளங்கிக்கொள்ள உதவியாய் இருக்கும்
Thala Wrote:[quote=இவோன்]தல, நீங்கள் சொல்ல வந்ததும் எனக்குக் குழப்பமாகிவிட்டது.
நான் சொன்னதுக்கு மறுப்பது போல் சொல்லத் தொடங்கி, பிறகு நீங்களும் தேர்தல் புறக்கணிப்புத்தான் இப்போது புலிகளால் சொல்லக்கூடியது என்று மீண்டும் நான் சொன்தையே திருப்பிச் சொல்லியுள்ளீர்கள்.
--------------------------------------------------------
நான் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பை மட்டும் சொல்லவில்லை. இன்னாருக்குப் போடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுறுத்திய கடந்த காலத்தையும்தான் சொல்கிறேன். சிங்களத் தலைமையில் யாரை வெல்ல வைக்க வேணுமென்று புலிகள் அறிவித்ததையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
இல்லை நான் மறுக்க இல்லை... புலிகள் நிலைப்பாடு சொல்லாத்துக்கு காரணமாய் என்ன இருக்கும்...??? எண்று தான் முதலில் சொல்லிப் பின் அடுத்ததாய் எனது கருத்தயும் சொல்லி இருந்தேன் அவ்வளவுதான்....
ஆனால் புலிகள் சொல்வது போல் தமிழ் மக்கள் சுயமாய் முடிவு எடுக்க வேண்டி வரலாம்
தமிழ் மக்களின் தேச விடுதலைக்காக தலைமை தாங்கி நிற்கும் புலிகள் யுத்தத்தில் மட்டும் அல்ல தேர்தல் களத்திலும் மக்களை வழிநடத்தி விடுதலைப் போராட்டத்தை மேலும் முன்நோக்கி நகர்த்த வேண்டிய தருணத்தில் நீங்கள் குறிப்பிடுவது போல் ''தமிழ் மக்கள் சுயமாய் முடிவு எடுக்க வேண்டி வரலாம்'' என்பது தேச விடுதலை போரை மட்டும் அல்ல தமிழ் மக்களையும் ஆபத்தில் தள்ளிவிடும்.

