10-08-2005, 11:50 PM
Thala Wrote:Quote:ஏன் முன்பு புலிகள் ஏதும் சொன்னதில்லையா? எத்தனை தேர்தல் புறக்கணிப்புக்களைச் செய்தார்கள்?
இன்று முழுக்க முழுக்க புலிகளின் தலைமையை நம்பியுள்ள தமிழர்க்கு ஒரு முடிவுமில்லாமல் இப்படி விடுவது சரியன்று.
தேர்தல் புறக்கணிப்புச் செய்த காலங்கள் போர் உக்கிரமாக நடந்த காலங்கள் அப்போது போராட்டம் தமிழீழத்தை நோக்கியதாய் இருந்தது..... இப்போ சுயநிர்ணயம் வேண்டி பேச்சில் ஈடுபடும் காலம்........ இப்போ முக்கியமாய் மக்களுக்கு புலிகளால் விரும்பிச் சொல்லக்கூடியது தேர்தல் புறக்கணிப்புத்தான்... தமிழ்மக்களுக்கு சிங்களத்தலைமையில் நம்பிக்கை இல்லை எண்ட செய்தியை... ஆனால் விரும்பியோ விரும்பாமலோ.. தமிழர் சர்வதேசத்தின் அனுசரனை வேண்டி நிக்கின்றோம்... எமது போராட்டத்தின் நியாயத்தன்மை... வெளியுலகுக்கு காட்ட வேண்டிய தேவை உள்ளது..... அவர்களின்(சர்வதேச) விருப்பு கடந்த தடவை நோர்வே ஊடாக புலிகளிடம் சொல்லப்பட்டது.... அது சுயாதீனமான தேர்தல் வர வேண்டும் என்பதுதான்.... (எதிர்ப்புக்கள் அற்ற) அதற்காகத்தான் தமிழ்ச்செல்வன் அவர்கள் பதிலாக தமிழ்மக்கள் சுயமாக முடிவு எடுப்பார்கள்..! எண்று தனது செவ்வியில் சொல்லி இருந்தார்..
அந்தச் செய்திக்கு தமிழ் ஊடகங்கள் பெரிதாய் முன்னிலைப் படுத்தி வெளியிடவில்லை.... அதற்கு அவர்கள் கொடுக்காத முக்கியத்துவம் தான் காரணம் தமிழ்க்கூட்டமைப்பு முதலின் தங்களின் ஆதரவு யாருக்கும் இல்லை எண்டு அறிவித்திருந்ததுதான்.......... ஆனால் BBc ஆங்கில, தமிழ்ச் சேவைகள் இந்தச் செய்திக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்திருந்தன....... காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு அப்படி (BBC,CNN, என்பது செய்தி ஊடகம் மட்டும் இல்லை.. நாட்டின் கருத்துக்களை விதைக்கும் சாதனமாகப் பயன் படுவது)...
இப்போ புலிகளால் நம்பிக்கை அற்ற ஒருவருக்கு வாக்களிக்கச் சொல்ல முடியாத நிலை..! அவர்களுக்காக தமிழ்க்கூட்டமைப்பு தான் தன் கருத்துக்களை சொல்ல வேண்டும்.... இது அவர்களுக்கான வேலை...
அரைச்ச மாவை இனியும் எத்தனை தரம் அரைக்கிறது. புலிகளுக்கு மட்டும் அல்ல தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும் சிங்கள தலைமை எதுவும் எமக்கு விடிவு தராது என்பது.
ஆகவே சிங்கள தேச தேர்தல் என்னது தமிழர் தரப்பு விடுதலைப் போராட்டத்திற்கான இன்னுமொரு காய் நகர்த்தல் அன்றி இதில் வேடிக்கை பார்க்க ஒன்றும் இல்லை. எமது விடுதலை யுத்தத்தில் சிங்கள தேச தேர்தல் என்பது யுத்தத்தில் நாம் வகிக்கும் தந்திரோபாய நடவடிக்கையின் ஒரு அம்சம் அன்றி வெறும் பார்வை பொருள் அல்ல.

