Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைகள் சரியான வழியில் தான் வழிநடத்தப்படுகிறார்களா?
#1
<img src='http://first-year.adoption.com/img/child.jpg' border='0' alt='user posted image'>

எந்தக்குழந்தையும்
நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவை நல்லன ஆவதும்
தீயன ஆவதும் அன்னை வளர்ப்பினிலே

எம் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படுகிறார்களா? சின்னச்சந்தேகம்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படித்தபின்தான் முழுக்கால்சட்டை அணிந்ததோம். பன்னிரண்டு முடித்தபோது தான் கைகளில் கடிகாரம் கட்டிமகிழ்ந்தோம். பெரியவர்களுடன் இணையாக நின்று பேசியது இல்லை. இதுவெல்லாம் இன்றை சந்திததியிடம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் குறைந்த பட்ச்சம் பண்பாடு கற்றுத்தரப்படுகிறதா? கேள்விக்குறியாக உள்ளது.

அன்று ஒரு திருமணவீட்டிற்குச்சென்றிருந்தேன் எல்லோரும் அரட்டை அடித்தபடி இருந்தனர். முதல் நாள்தான் திருமணம் நடந்திருந்தது. என்னால் அன்று போக முடியவில்லை. மறுநாள் போயிருந்தேன். அங்கே பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞி புதிதாய் திருமணமான தம்பதியினரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள். "என்ன நேற்றுத்தானே முதல் தடவை இதுக்கு முன்னாடி தனியா ஏதும் செய்யவில்லையே?" பாவம் புதுத்தம்பதிகள் வாயடைத்துப்போனார்கள். என்னவென்று சொல்லுவார்கள். இப்படி ஒரு கேள்வி சின்னப்பெண்ணிடம் இருந்து வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அந்தப்பதினாறு வயது இளம் குமரியின் தாய் தந்தை இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தம் குழந்தை ஏதோ சாதனை செய்தது போலவும் ஏதோ அந்த புது ஜோடியை பேசமுடியாது வாயடைக்கசெய்தது பெரிய திறமை போலவும். பெருமையாகப்பேசினார்கள்.
பல குழந்தைகள் இப்படித்தான் இன்று எதை எங்கு யாரிடம் பேசுவது என்று தெரியாமல் பேசுகின்றார்கள்.

சிலர் வீட்டுக்குச் சென்றால் குழந்தைகளிடம் பேசவே பயப்பிட வேண்டி உள்ளது. ஏனென்றால் அவைகள் ஏடாகுடாமா பேசிவிட வாய்புள்ளது. ஒரு நன்பன் இப்படித்தான் விருந்தொன்றிற்குச்சென்ற போது அந்தவீட்டு குழந்தைகள் இவனை கருங்குரங்கு என்று தமக்குள் பேசி சிரித்துள்ளார்கள். பாவம் நன்பன் அவன் கொஞ்சம் கறுப்புத்தான் அதற்காக இப்படி குழந்தைகளிடம் எல்லாம் அவமானப்பட வேண்டுமா?. வெளிநாட்டில் மட்டுமல்;ல உள்ளுரிலும் சில வீடுகளில் பெற்றோரே குழந்தைகளிடம் பேச பயப்படுகின்றனர். அவர்கள் பெரிய புகழ்பெற்ற பாடசாலைக்;குச்சென்று எல்லா கெட்டவார்த்தைகளையும் கற்றுவைத்திருக்கின்றன. அது மட்டுமல்ல சில சமிக்கைகள் கூட செய்கின்றன. குழந்தைகளைப்பார்த்தால் பெரியவர்களைவிட கொஞ்சம் அதிக மரியாதை கொடுக்கவேண்டும் போல் உள்ளது. இல்லை என்றால் அவமானம்தான்.

குழந்தைகள் தமிழ் பேச வேண்டும் தமிழில் எழுத வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல நல்ல பண்பாடு உடையவர்களாய் இருக்கவும்வேண்டும். உங்கள் குழந்தைகள் தலைவாருவது இல்லையா?. முடிக்கு வண்ணம் புூசுகிறார்களா? அடிக்கடி ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை பயன்படுத்துகிறார்களா? கால்சட்டையை கிழித்துவிட்டு நாகரிகம் என்கிறார்களா? சாமி கும்பிடுவதை கிண்டல் செய்கின்றனவா? அப்படி யென்றால் உங்கள் குழந்தை நாளை உங்களுக்கே தலைவலியாய் அமையலாம்.

குழந்தைகள் சரியான வழியில் தான் போகிறார்களா? என பெற்றோர் கண்காணிக்கவேண்டும். தவறாக இருப்பின் நல்வழிப்படுத்த முனைய வேண்டும். நல்ல சமுதாயம் அமைய பெற்றோரின் பங்கு இன்றியமையாதது.
Reply


Messages In This Thread
குழந்தைகள் சரியான வழி - by aathipan - 11-15-2003, 06:34 PM
[No subject] - by aathipan - 11-16-2003, 02:16 PM
[No subject] - by Ilango - 11-16-2003, 02:23 PM
[No subject] - by aathipan - 11-16-2003, 03:13 PM
[No subject] - by vanathi - 11-16-2003, 05:26 PM
[No subject] - by veera - 11-17-2003, 01:12 PM
[No subject] - by sOliyAn - 11-17-2003, 01:19 PM
[No subject] - by aathipan - 11-17-2003, 05:49 PM
[No subject] - by kuruvikal - 11-17-2003, 05:51 PM
[No subject] - by aathipan - 11-17-2003, 05:54 PM
[No subject] - by aathipan - 11-17-2003, 06:05 PM
[No subject] - by aathipan - 11-17-2003, 06:21 PM
[No subject] - by aathipan - 11-17-2003, 06:50 PM
[No subject] - by kuruvikal - 11-17-2003, 10:34 PM
[No subject] - by sOliyAn - 11-18-2003, 02:52 AM
[No subject] - by aathipan - 11-18-2003, 04:22 AM
[No subject] - by kuruvikal - 11-18-2003, 09:05 AM
[No subject] - by veera - 11-18-2003, 10:33 AM
[No subject] - by aathipan - 11-18-2003, 04:59 PM
[No subject] - by kuruvikal - 11-18-2003, 05:27 PM
[No subject] - by aathipan - 11-18-2003, 06:02 PM
[No subject] - by vanathi - 11-19-2003, 10:13 AM
[No subject] - by vanathi - 11-19-2003, 10:16 AM
[No subject] - by kuruvikal - 11-19-2003, 12:43 PM
[No subject] - by veera - 11-19-2003, 12:55 PM
[No subject] - by aathipan - 11-19-2003, 01:13 PM
[No subject] - by kuruvikal - 11-19-2003, 01:27 PM
[No subject] - by vanathi - 11-20-2003, 10:33 AM
[No subject] - by kuruvikal - 11-20-2003, 01:07 PM
[No subject] - by aathipan - 11-22-2003, 04:10 AM
[No subject] - by kuruvikal - 11-22-2003, 11:12 AM
[No subject] - by sOliyAn - 11-22-2003, 01:27 PM
[No subject] - by nalayiny - 11-22-2003, 03:52 PM
[No subject] - by aathipan - 11-22-2003, 06:03 PM
[No subject] - by shanmuhi - 11-22-2003, 09:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)