10-06-2005, 06:07 AM
<b>ஆறாவது கவிதை....</b>
<b>
ஆனந்தமாயிருப்பேன்
உன் நினைவுகளால்
உணர்வுகள் நிறைந்தால்..
எனக்கோ
இயக்கமே நின்றல்லவாபோகிறது!
விழியின் ஓரவீச்சிலே
பிரபஞ்ச இடைவெளி
எனக்குள்.
உன் விழித் தடைகளை
தாண்ட முடியாத
என் நேசம்
இதயத்துள் கரைவது
எப்போதோ?
மணந்ததா? இல்லையா?
உன் கூந்தல் மலருக்காக
அனுப்பிய
என் மூச்சுக்காற்று.
பதில் சொல்லாத
உன் மெளனமும்
அழகுதான்
நீ தொட்ட பூவில்
பதிந்த ரேகையில்
என் விலாவின் வாசம்
தெரிகிறதா எனத்
தொடர்கிறதென்
தேடல்</b>
<b>
ஆனந்தமாயிருப்பேன்
உன் நினைவுகளால்
உணர்வுகள் நிறைந்தால்..
எனக்கோ
இயக்கமே நின்றல்லவாபோகிறது!
விழியின் ஓரவீச்சிலே
பிரபஞ்ச இடைவெளி
எனக்குள்.
உன் விழித் தடைகளை
தாண்ட முடியாத
என் நேசம்
இதயத்துள் கரைவது
எப்போதோ?
மணந்ததா? இல்லையா?
உன் கூந்தல் மலருக்காக
அனுப்பிய
என் மூச்சுக்காற்று.
பதில் சொல்லாத
உன் மெளனமும்
அழகுதான்
நீ தொட்ட பூவில்
பதிந்த ரேகையில்
என் விலாவின் வாசம்
தெரிகிறதா எனத்
தொடர்கிறதென்
தேடல்</b>
.

