10-06-2005, 05:50 AM
வாழை மரத்தின் சபதம்
வளமான சூழ்நிலையில் வளர்வேன் - ஆனால்
வறியவரின் கைகளிலே தவழ்வேன்
மலிவான விலையின் நான் கடைகளிலே
கிடைப்பேன் - ஏழை
மக்களது ஆப்பிள் மரம் என்ற பெயர்
எடுப்பேன்!
மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை!
கருத்தாக்கிப் பிள்ளையினைப் பெற்றெடுத்துக்
கண்மூடும் புத்திரிநான் எனக்குக் கீழே
குருத்துவிடும் கன்றுக்கு வழியை விட்டுக்
குறிப்பறிந்து ஒதுங்குவதால்
தலைமுறையின் தத்துவத்தை புவிக்குக் காட்டும்
தடயம் நான்
வானத்தை தொடுவதற்குக் கனவு காணும்
வழக்கமில்லை என்னிடத்தில் மயக்கமில்லை
மானிடரின் புழுதிக்கால் பதியும் இந்த
மண்ணுடன் என் உறவதிகம்! ஆதலாலே
மரங்களில் நான் குட்டை மரம்
மனிதர்களின் கைகளுக்கு இலகுவாக எட்டும் மரம்
வளமான சூழ்நிலையில் வளர்வேன் - ஆனால்
வறியவரின் கைகளிலே தவழ்வேன்
மலிவான விலையின் நான் கடைகளிலே
கிடைப்பேன் - ஏழை
மக்களது ஆப்பிள் மரம் என்ற பெயர்
எடுப்பேன்!
மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை!
கருத்தாக்கிப் பிள்ளையினைப் பெற்றெடுத்துக்
கண்மூடும் புத்திரிநான் எனக்குக் கீழே
குருத்துவிடும் கன்றுக்கு வழியை விட்டுக்
குறிப்பறிந்து ஒதுங்குவதால்
தலைமுறையின் தத்துவத்தை புவிக்குக் காட்டும்
தடயம் நான்
வானத்தை தொடுவதற்குக் கனவு காணும்
வழக்கமில்லை என்னிடத்தில் மயக்கமில்லை
மானிடரின் புழுதிக்கால் பதியும் இந்த
மண்ணுடன் என் உறவதிகம்! ஆதலாலே
மரங்களில் நான் குட்டை மரம்
மனிதர்களின் கைகளுக்கு இலகுவாக எட்டும் மரம்

