10-04-2005, 10:20 AM
ஜூட் Wrote:4.....புலனாய்வு
விடுதலைப்புலிகளின் புலனாய்வு சிறந்தது என்ற பெயர் இருக்கிறது. ஆனால், ஒரு மாத்தையாவும், ஒரு கருணாவும், தலைமைக்கு மிகவும் நெருக்கமாக உருவான நிலையும், நிலைகொண்ட காலமும், ஊடுருவித்தாக்குதல் செய்தவர்கள், தளபதிகள் பலரை பலி கொண்ட சம்பவங்களும், புலனாய்வு துறையையே தமிழீழத்தில் இன்று மிகவும் பலவீனமான துறையாக காட்டுகின்றன. இந்த துறை உறுதியாகவும், வேகமும், விவேகமும் உள்ளதாகவும், இருப்பது அத்தியாவசியமானது.
புலநாய்வாளர்களின் வெற்றி முறையடிப்பதில்தான் என்று எங்கோ படிச்ச ஞபகம்.... அது கருணா, மாத்தையா விடயத்தில் புலிகளால் நடத்திக் காட்டப் பட்டது... தமிழ் இரட்டைப் புலனாய்வு முகவர்கள் இரானுவத்தினரிடம் இருந்து ஆயுதங்களை எடுத்துவந்து புலிகளிடம் ஒப்படைத்த வரலாறு அதிகம் உள்ளது... (எங்கட ஊரிலேயே சம்பவம் நடந்தது..)
அராலிப் பகுதியில் ஒரு நிலக்கண்னிவெடியை நட்டு வைத்து சிறீலங்க ராணுவத்தின் வடமுனை தலைமையை அளித்ததுக்கும் புலனாய் வாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அது போலதான்.... பஜிறோ ரக வாகனத்தை நெடுங்கேணியில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள ஒலுமடுவுக்கு வந்து பதுங்கித்தாக்குவது.... புளியங்குளம், மாங்குளத்தில் இராணுவம் நிலை கொண்ட நேரம் அது... சுற்றிவலைப்பு பயம் இண்றி வந்து தங்கலாம்... எந்தப் பகுதியிலிருந்தாவது உதவிகள் பெற்று வெளியேறலாம் ஆனால் இப்போ நிலமை அப்பிடி இல்லை...
மற்றயது புலிகளின் புலனாய்வு வலை மிக இறுக்கமானது யாரவது ஊரில் இருந்து வந்தவர்களிடம் கேளுங்கோ... வெளிநாட்டில் இருந்து வந்து விமானத்தில் பலாலியில் இறங்கினவருடைய வீட்டு விலாசம் வயது முதல் அவர்களின் விரல் நுணியில் வைத்திருக்கிறார்கள்....
::

