10-04-2005, 05:00 AM
நீங்கள் மேற்குறிப்பிட்ட ஐந்தும் ஒரு நாட்டுக்கு முக்கியமானது என்பது உண்மைதான். ஆனால் இவற்றில் எவை எம்மிடம் நிறைவாக உள்ளன, என்பதில் தான் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது.
1... சிறப்பான தலைமை
நிச்சயமாக சிறப்பான தலைமை உள்ளது. இந்த தலைவரின் வாழ்நாட்களுக்குள் தனிநாடு உருவாகாவிட்டால் பிறகு அது சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கருணாவும், மாத்தையாவும் இதனை விளக்க போதுமான காரணங்கள்.
2....அரசியல்/சட்டம்
பேச்சுவார்த்தை, போர்நிறுத்தம் என்று வந்தபிறகு விடுதலைப்புலிகள் காட்டிய அரசியல் முதிர்ச்சியும், சட்ட அறிவும், தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சட்ட அமுலாக்கலும், ஒரு முதலாம் உலக நாட்டுக்கு நிகரானவை.
3.....ராணுவம்/பாதுகாப்பு
விடுதலைப்புலிகள் சிறந்த அர்ப்பணிப்புள்ள இராணுவம். ஆயினும், இன்றும் ஒரு துறைமுகத்தையாவது முழுமையான கட்டுப்பாட்டுக்குள், சர்வதேச கடற்பரப்பிலிருந்து, வைத்திருக்கும் ஆற்றலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும், முழுமையான எல்லைப்பாதுகாப்பை கொண்டிருக்கும் ஆற்றலையும் அவர்கள் காட்டவில்லை. ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும் பார்க்க, அவர்களுக்கு தொழில்நுட்ப பலம் இதற்கு நிறைய தேவை.
4.....புலனாய்வு
விடுதலைப்புலிகளின் புலனாய்வு சிறந்தது என்ற பெயர் இருக்கிறது. ஆனால், ஒரு மாத்தையாவும், ஒரு கருணாவும், தலைமைக்கு மிகவும் நெருக்கமாக உருவான நிலையும், நிலைகொண்ட காலமும், ஊடுருவித்தாக்குதல் செய்தவர்கள், தளபதிகள் பலரை பலி கொண்ட சம்பவங்களும், புலனாய்வு துறையையே தமிழீழத்தில் இன்று மிகவும் பலவீனமான துறையாக காட்டுகின்றன. இந்த துறை உறுதியாகவும், வேகமும், விவேகமும் உள்ளதாகவும், இருப்பது அத்தியாவசியமானது.
5......நிதி/ முதலீடுகள்/ வருவாய்
சர்வதேச கடன்வசதிகளும், நிதிகளும், அன்பளிப்புகளும், நாட்டின் முழுமையான பொருளாதாரமும், அள்ளி வழங்கிய பணத்தில் யுத்தம் புரிந்த இராணுவத்துக்கு சமமாக ஆயுதங்களும், ஆள்பலமும் கொண்டு, ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்து கொண்டு மோதிய விடுதலைப்புலிகளுக்கு தெரியாத பொருளாதாரமா? இந்த நிலையிலேயே, இவ்வளவுக்கு நிதியும் சேர்த்து, முதலீடுகளும் செய்ய அவர்களால் முடிகிறது என்றால், ஒரு நாடாக இயங்க ஆரம்பித்தவுடன் பொருளாதாரத்துறையில் அவர்கள் மேலும் சிறப்புடன் செயற்படுவார்கள்.
ஆகவே இராணுவ தொழில்நுட்பத்திலும், புலனாய்வில் எல்லாவகையிலும் நிறைய முன்னேற வேண்டும் என்பதே, எனது கருத்து.
1... சிறப்பான தலைமை
நிச்சயமாக சிறப்பான தலைமை உள்ளது. இந்த தலைவரின் வாழ்நாட்களுக்குள் தனிநாடு உருவாகாவிட்டால் பிறகு அது சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கருணாவும், மாத்தையாவும் இதனை விளக்க போதுமான காரணங்கள்.
2....அரசியல்/சட்டம்
பேச்சுவார்த்தை, போர்நிறுத்தம் என்று வந்தபிறகு விடுதலைப்புலிகள் காட்டிய அரசியல் முதிர்ச்சியும், சட்ட அறிவும், தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சட்ட அமுலாக்கலும், ஒரு முதலாம் உலக நாட்டுக்கு நிகரானவை.
3.....ராணுவம்/பாதுகாப்பு
விடுதலைப்புலிகள் சிறந்த அர்ப்பணிப்புள்ள இராணுவம். ஆயினும், இன்றும் ஒரு துறைமுகத்தையாவது முழுமையான கட்டுப்பாட்டுக்குள், சர்வதேச கடற்பரப்பிலிருந்து, வைத்திருக்கும் ஆற்றலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும், முழுமையான எல்லைப்பாதுகாப்பை கொண்டிருக்கும் ஆற்றலையும் அவர்கள் காட்டவில்லை. ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும் பார்க்க, அவர்களுக்கு தொழில்நுட்ப பலம் இதற்கு நிறைய தேவை.
4.....புலனாய்வு
விடுதலைப்புலிகளின் புலனாய்வு சிறந்தது என்ற பெயர் இருக்கிறது. ஆனால், ஒரு மாத்தையாவும், ஒரு கருணாவும், தலைமைக்கு மிகவும் நெருக்கமாக உருவான நிலையும், நிலைகொண்ட காலமும், ஊடுருவித்தாக்குதல் செய்தவர்கள், தளபதிகள் பலரை பலி கொண்ட சம்பவங்களும், புலனாய்வு துறையையே தமிழீழத்தில் இன்று மிகவும் பலவீனமான துறையாக காட்டுகின்றன. இந்த துறை உறுதியாகவும், வேகமும், விவேகமும் உள்ளதாகவும், இருப்பது அத்தியாவசியமானது.
5......நிதி/ முதலீடுகள்/ வருவாய்
சர்வதேச கடன்வசதிகளும், நிதிகளும், அன்பளிப்புகளும், நாட்டின் முழுமையான பொருளாதாரமும், அள்ளி வழங்கிய பணத்தில் யுத்தம் புரிந்த இராணுவத்துக்கு சமமாக ஆயுதங்களும், ஆள்பலமும் கொண்டு, ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்து கொண்டு மோதிய விடுதலைப்புலிகளுக்கு தெரியாத பொருளாதாரமா? இந்த நிலையிலேயே, இவ்வளவுக்கு நிதியும் சேர்த்து, முதலீடுகளும் செய்ய அவர்களால் முடிகிறது என்றால், ஒரு நாடாக இயங்க ஆரம்பித்தவுடன் பொருளாதாரத்துறையில் அவர்கள் மேலும் சிறப்புடன் செயற்படுவார்கள்.
ஆகவே இராணுவ தொழில்நுட்பத்திலும், புலனாய்வில் எல்லாவகையிலும் நிறைய முன்னேற வேண்டும் என்பதே, எனது கருத்து.

