11-14-2003, 06:52 PM
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/08/nallur_12_250.jpg' border='0' alt='user posted image'>
ஏதோ ஒரு தைரியம்
காதல் கொடுத்த தைரியம்
எதைப்பற்றியும் கவலைப்படவில்லை...
வேகமாய் தாயாராகிவிட்டேன்
அம்மாவிற்கு ஆச்சரியம்
என் வேகம் பார்த்து
கேள்விகளோடு என்னை நோக்கினாள்
"ஒன்றும் இல்லை
கோயிலுக்குத்தான்
என் நன்பன் கூப்பிட்டிருந்தான்"
எனக்கூறி விடைபெற்றேன்
சாப்பிடவில்லை..
ஏற்கனவே நேரமாகிவிட்டது
நல்ல காலம் அம்மா வற்புறுத்தவில்லை..
ஆண்டவனைத்தரிசிக்க சாப்பிடாது சென்றால் தான்
பக்தி இருக்குமாம்...
அவள் நம்பிக்கை
என்னைக் காப்பாற்றியது...
சைக்கிளை வேகமாக மிதித்தேன்
எப்படியும் நீ நடந்துதான் போவாய்
உனக்கு முன்னால் நானங்கு இருந்தால் நல்லது
வழியில் உன்னைக்காணவில்லை....
நீ ஏற்கனவே சென்றுவிட்டிருப்பாயோ?...
அல்லது
வராமல்விட்டிருப்பாயோ?
வழக்கமாய் நீ செருப்பு வைக்கும்
கற்புூரப்பாட்டியிடமே
நானும் செருப்புவைத்தேன்...
உன்செருப்பு அங்கில்லை
ஒரளவு உறுதி..
தேங்காய் பழம் புூ வைத்த
அர்ச்சனைத்தட்டை நீட்டினாள் கற்புூரப்பாட்டி
வாங்கிக்கொண்டு கால் கழுவுமிடம் சென்றேன்
அருகே
கற்புூரம் வாங்கிக்கொள்ளச்சொல்லி
சிறுமி ஒருத்தி
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
ஒரு ருபாய் கொடுத்து ஒன்றைமட்டும் வாங்கிக்கொண்டு
திரும்பியபோதுதான் அந்த
இன்ப அதிர்ச்சி!
ஏதோ ஒரு தைரியம்
காதல் கொடுத்த தைரியம்
எதைப்பற்றியும் கவலைப்படவில்லை...
வேகமாய் தாயாராகிவிட்டேன்
அம்மாவிற்கு ஆச்சரியம்
என் வேகம் பார்த்து
கேள்விகளோடு என்னை நோக்கினாள்
"ஒன்றும் இல்லை
கோயிலுக்குத்தான்
என் நன்பன் கூப்பிட்டிருந்தான்"
எனக்கூறி விடைபெற்றேன்
சாப்பிடவில்லை..
ஏற்கனவே நேரமாகிவிட்டது
நல்ல காலம் அம்மா வற்புறுத்தவில்லை..
ஆண்டவனைத்தரிசிக்க சாப்பிடாது சென்றால் தான்
பக்தி இருக்குமாம்...
அவள் நம்பிக்கை
என்னைக் காப்பாற்றியது...
சைக்கிளை வேகமாக மிதித்தேன்
எப்படியும் நீ நடந்துதான் போவாய்
உனக்கு முன்னால் நானங்கு இருந்தால் நல்லது
வழியில் உன்னைக்காணவில்லை....
நீ ஏற்கனவே சென்றுவிட்டிருப்பாயோ?...
அல்லது
வராமல்விட்டிருப்பாயோ?
வழக்கமாய் நீ செருப்பு வைக்கும்
கற்புூரப்பாட்டியிடமே
நானும் செருப்புவைத்தேன்...
உன்செருப்பு அங்கில்லை
ஒரளவு உறுதி..
தேங்காய் பழம் புூ வைத்த
அர்ச்சனைத்தட்டை நீட்டினாள் கற்புூரப்பாட்டி
வாங்கிக்கொண்டு கால் கழுவுமிடம் சென்றேன்
அருகே
கற்புூரம் வாங்கிக்கொள்ளச்சொல்லி
சிறுமி ஒருத்தி
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
ஒரு ருபாய் கொடுத்து ஒன்றைமட்டும் வாங்கிக்கொண்டு
திரும்பியபோதுதான் அந்த
இன்ப அதிர்ச்சி!

