10-03-2005, 10:40 PM
Maruthankerny Wrote:குடும்பம் என்று இருவர் ஒன்றாக இணையும்போது. ..ஏன் ஆண் வசிக்கும் இடம் பெண. வசிக்கும் இடம் என்று பிளவு பண்ணுகிறீர்கள்? நாம் வசிக்க போகும் இடம் எனும் மனதுடன் தான் சிந்திக்க வேண்டும். இடபெயர்சி என்பது எதோ ஒரு லாபம் கருதியே இடம்பெற்று இருக்கிறது (குறிப்பாக பொருளாதார லாபம்) அப்படி இருக்கயில் பெண் வசிக்கும் இடமே எதிர்காலத்திற்கு உகந்தது என்றால் நிச்சயமாக ஆண்கள் மறியிருப்பார்கள். அப்படி இடம்மாறி போன எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். உள்நாட்டில் ஊருக்கு
ஊர் மாறவதாயின் பெண் இருக்கும் ஊருக்கு ஆண்கள் மாறினால் பெண்ணின் மனதுக்கு பிடித்தமாயிருக்கும் காரணம் ஆண்களை விட பெண்கள் தனது தாயிடன் நெருக்கமாகவே வாழ்ந்திருப்பார்கள் திருமணமானவுடன் அதுவரையில் அறிமுகமில்லாத ஒரு நபருடன் வேறுர் செல்வது சற்றே மனப்பயத்தை உண்டாக்கலாம். அவளின் தாயார் வாழும் ஊரில் இருக்கும் போது கொஞ்சம் தாயாரின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். சகோதரி ரசிகை.....! நான் சொல்ல வருவதெல்லாம் திருமணத்திற்கு பின் எனது உனது எனும் எண்ணங்களை தள்ளிவைத்தல் அவசியம் எமது எனும் தொணிப்பே இருக்க வேண்டும் என்பதுதான். (என்னை தப்பாக புரிந்து விடாதீர்கள்)
மருதங்கேணி இதைத்தான் நானும் சொல்ல வந்தன்,. ஆண்கள் இடத்துக்கு பெண்கள் வரவேண்டும் எதிர்பார்க்காமல். எங்கு சென்றால் வாழ்க்கை வளமாக இருக்குமோ அங்கு சென்று வாழ்வதே மேல்
<b> .. .. !!</b>

