Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்
#12
தாழ்வு மனப்பான்மை என்பது பெண்களுக்கு மிகவும் அதிகம் அது கேள்வி மேல் கேள்வி கேட்கும் குழலிக்கும் ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.

அவரின் கேள்விகளே பல வேடிக்கையாகத்தானிருக்கிறது. பல விதண்டாவாதமென அவர் தெரிந்திருந்தாலும் வேண்டுமென்றே கேட்டிருக்கின்றார்.

முதலில் எத்தனை பெண்கள் தங்களை விட அந்தஸ்து படிப்பு குறைந்த ஆண்களை திருமணம் செய்திருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் தாறுமாறாக இவர்கள் பார்க்கப்போய்த்தானே சீதனப்பிரைச்சினைகள் பெரிதாகின. 8ம் வகுப்பு படித்திருந்தால் எக்கவுண்டன் 10ம் வகுப்பு படித்திருந்தால் பட்டதாரி அல்லது டாகுத்தர் ஏஎல் படித்திருந்தால் என்ஜினியர் மாப்பிள்ளை என்று வெளிக்கிட்டுத்தானே இவ்வளவு பிரைச்சினைகளும். அது மட்டுமன்றி வாங்கும் சீதனம் இனாம் போன்றன பெரும்பாலும் ஆணின் சகோதரிகளின் வங்கிக்கணக்கைத்தானே நிரப்புகின்றன.


இன்று தாயகத்திலும் சரி புலத்திலும் சரி திறமையான சமையல்காரர் ஆண்கள்தான். ஏன் பிரபலமான உணவுவிடுதிகளில் பாருங்கள் தலைமைச் சமையல்க்காரர் ஆண்களாகத்தானிருப்பார்கள்

புகழ்பெற்ற நடிகர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். பெரும்பாலான நடிகர்களை புகழ்பெற வைப்பதே பெண்கள் தானே. ஏன் இரசிகைகள் நிறையப் பெண்கள் தானே???? சரி அவர் பேசும் வசனங்கள் பிடிக்காவிட்டால் அவரின் படங்களைப் புறக்கணித்து அவருக்கு புத்தி புகட்டலாமே???
முடிந்தால் செய்து பாருங்க் தெரியும் எத்தனை பெண்கள் இதற்கு ஒத்துழைப்பாரென்று!!!!! பெண்ணுக்கு பெண்தானம்மா எதிரி. எதற்காக அப்பாவி ஆண்களை வம்புககு இழுக்குறீங்க???

மொத்தத்தில் ஆண் நெருப்புப்பெட்டி மாதிரி பெண் நெருப்புக்குச்சி மாதிரி. எப்படி என்று யோசிக்கிறீர்களா??
பொதுவாக நெருப்புப் பெட்டியின் ஒரு ஓரத்திலும் நெருப்புக்குச்சியின் தலையிலும் நெருப்பை உண்டாக்கக் கூடிய மருந்துக்கள் உண்டு. ஆனால் குச்சியால் பெட்டியை உரசும்போது குச்சிதானே பற்றிக் கொள்கின்றது. என்றாவது பெட்டி பற்றிக் கொண்டதுண்டா???? அது போல பெண்களே ஆண்கள் மீது உரசி பற்றிக் கொண்டதும் ஆண்கள் மீதே பழியா???

சரி உதை விடுங்க இப்ப சமீபத்திலே அமெரிக்காவையே ஆட்டிப் படைச்ச இரு சூறாவளிகளுக்கும் பெயர் என்னாங்கோ????
1) கத்தரினா 2) ரீற்றா
பாருங்க அளிவென்றவுடனேயே எல்லோருக்கும் பெண்களின் ஞாபகம் தானே வருதுங்கோ!!!!!!

சரி எவ்வளவோ கேள்விகள் நீங்கள் கேட்டீர்கள். ஆனால் நான் இரண்டே இரண்டு கேள்விதானுங்க கேட்கப்போறன். முடிஞ்சா சிந்தித்துப் பாருங்கள் (அதுக்கெல்லாம் உங்களுக்கு நேரமிருந்தால் ).

1) எனது பாட்டி காலத்திற்கு முன்பிருந்தே உந்த மாமியார் மருமகள் பிரைச்சனை தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. நேற்று மாமியார்களுக்கெதிராக போர்க்கொடி ஏந்திய மருமகள்மார்தான் இன்றைய மாமியார்கள் அப்படியிருந்தும்; ஏனுங்க இன்றும் உந்தப் பிரைச்சினை தொடருகின்றது????

2) சீதனப்பிரைச்சினையென்று பல பெண்ணிய வாதிகளும் பல மாதர் சங்கங்களும் போர்கொடி ஏந்தி வருகின்றார்கள்.
சரி எத்தனை பெண்கள் உங்கள் சகோதரன் சீதனம் வாங்கும்போது அதை பங்கிட்டு உங்கள் வங்கிக் கணக்கை நிரப்பாமல் அதை எதிர்த்து போர்க்கொடி ஏந்தினீர்கள்???
:roll: :roll: :roll: :roll:
Reply


Messages In This Thread
[No subject] - by inthirajith - 09-29-2005, 08:41 PM
[No subject] - by Maruthankerny - 10-01-2005, 10:29 PM
[No subject] - by Maruthankerny - 10-01-2005, 10:38 PM
[No subject] - by Maruthankerny - 10-01-2005, 10:48 PM
[No subject] - by Maruthankerny - 10-01-2005, 11:37 PM
[No subject] - by Maruthankerny - 10-02-2005, 03:38 PM
[No subject] - by Rasikai - 10-02-2005, 05:29 PM
[No subject] - by Maruthankerny - 10-03-2005, 04:37 AM
[No subject] - by Nitharsan - 10-03-2005, 05:46 AM
[No subject] - by Vasampu - 10-03-2005, 06:08 PM
[No subject] - by Vasampu - 10-03-2005, 09:18 PM
[No subject] - by Rasikai - 10-03-2005, 10:40 PM
[No subject] - by Rasikai - 10-03-2005, 10:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)