10-03-2005, 01:55 AM
kurukaalapoovan Wrote:äட் மன்னிக்கவும், நான் மொழி பெயர்ப்பின்போது தகமைகளில் 2வது விடயமாக "சாதாரண வாழ்கை" என்று எழுதியது தவறு போலுள்ளது. உண்மையில் அதன் அர்த்தம் ஒரு பகுதியை இராணுவரீதியில் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அங்கே குடியேற்றங்களை மேற்கொண்டுவிட்டு உரிமை கோரமுடியாது என்பதுதான். அந்தவகையில் 2வது தகமை வடக்குக் கிழக்கு தமிழர் தாயக பிரதேசம் என்றரீதியில் நிறைவு செய்யப்பட்டிருக்கு.
எல்லாத்தகைமைகளும் முதலாவது தகைமையை நிறைவு செய்வதில் தங்கியிருக்கின்றன. முதலாவது தகைமை, வரையறுக்கப்பட்ட எல்லைகளுடன் கூடிய <b> முழுக்கட்டுப்பாட்டில் உள்ள</b> பிரதேசம். இரண்டாது தகைமை <b>அங்கு, அந்த பிரதேசத்தில்</b> சாதாரண வாழ்க்கை வாழும் மக்கள். மாற்றானின் ஊடுருவலில் உள்ள பிரதேசத்தில், மக்கள் சாதாரண வாழ்வு வாழ்வது தற்காலிகமானது. மேலும் ஒரு நாடாக அங்கீகாரம் கோரும் அரசு, மாற்றான் ஊருவலை தடுக்க முடியாத பிரதேசத்தை, முழுக்கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமாக தமது எல்லைக்குள் கோருதல் அங்கீகாரத்தை கடினமாக்கும்.
Thala Wrote:இப்போ அவருக்குள்ள முக்கிய பிரச்சனை சுண்டிக்குளம், அரியாலை, கௌதாரிமுனை, சங்குபிட்டி, பகுதிகளில் இறால் பிடிப்பவரிடம் இருந்து வாங்கிப் பதப்படுத்துவதற்கான ஒரு இடத்தேர்வும் <b> அதற்கான அரச அனுமதி வாங்கலும்</b> தான்...தமிழீழ இறால் ஏற்றுமதிக்கு சிறிலங்கா அரசின் அனுமதி தேவை என்றால், தமிழீழ அரசின் ஆட்சி வன்மையை நினைத்து பாருங்கள். இந்த நிலை மாற வேண்டும். தமிழீழ அரசு தான் விரும்பியபடி முல்லைத்தீவிலிருந்து ஏற்றுமதி செய்யும் ஆற்றல் பெற்றால்தான், அது தனிஅரசாக செயற்பட முடியும். அவ்வாறான அங்கீகாரத்தையும் பெற முடியும்.
இந்த வகையில தமிழீழ பொருண்மியம் தனது செயற்பாட்டை ஆரம்பித்து விட்டதாயே தெரிகிறது.....
தமிழீழ பிரதேசத்தில் தொழிற்சாலைகளை அமைக்க, சிறிலங்கா அரசு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே அனுமதி வழங்குவதில்லை. இதனால் தான், தமிழர் பலர், தமது தொழிற்சாலைகளை கொழும்பில் அமைக்க வேண்டி ஏற்பட்டது. அப்படி வடகிழக்கில் அமைக்க அனுமதித்தாலும், இயந்திரங்களை வடகிழக்குக்கு கொண்டு செல்ல இருப்பதாக அறிந்து, சுங்கப்பிரிவிலேயே தடுத்து நிறுத்தி விடுவார்கள்.
சிறிலங்கா அரசின் நாணய கொள்கையால் தமிழீழத்தின் பொருளாதாரம் கட்டுப்படுத்தப்படும் நிலையில், தமிழீழம் தன்னாட்சியுள்ள ஒரு தனிநாடாக இயங்க முடியாது. சிறிலங்கா அரசு நாணயத்தின் பெறுமதியை இறக்கினால் தமிழீழ வணிகம் பாதிக்கப்படும். தமிழீழம் வேண்டுமானல் யுூரோவை, அல்லது அமெரிக்க டொலரை தனது நாணயமாக சுயவிருப்பின் படி, தெரிவு செய்யலாம்.
ஆகவே தமிழீழ அரசு நடைமுறைக்கு சாத்தியமாக, தம்மால் முழுமையாக அந்நிய ஊடுருவலில் இருந்து பாதுகாக்கப்படக்கூடிய பிரதேசத்தை தனிநாடாக்கி, அதன் துறைமுகத்தை வலுப்படுத்தி, பிறநாடுகளுடன் சுதந்திரமாக போக்குவரத்தை ஆரம்பித்து, தனது நாணய கொள்கையை தானே கட்டுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இப்படி தனது முழுமையான கட்டுப்பாட்டில், முற்றிலும் சுதந்திரமாக இயங்கி, துரித பொருளாதார வளர்ச்சி காணும் அரசும், நாடும், அங்கிகரிக்கப்படும் சாத்தியம் அதிகம்.
இதற்கு மாறாக, என்றும் போர்க்களமாக, இராணுவங்கள் மாறிமாறி கைப்பற்றும் பிரதேசங்களை கொண்ட நாட்டின் பகுதிகள், முன்னேறவும் முடியாது, மற்ற நாடுகள் அதனை அங்கீகரிக்கவும் போவதில்லை. விடுதiலைப்புலிகளும் தடைசெய்யபட்ட அமைப்பாகவே பார்க்கப்படுவர்.
நாடு சிறியதாக இருந்தால், மின்சார உற்பத்தி, எரிபொருள், வீதிகளை அமைத்து பராமரித்தல், எதிரி ஊடுருவாமல் இராணுவத்தை குவித்து பாதுகாத்தல், போன்றவை சிறப்பாக செய்யப்படலாம். மாணவர்களுக்கு சிறந்த கல்வி வசதி, மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதி என்பவற்றை கூட, ஒரு சிறிய நாடு, பெரிய நாட்டிலும் பார்க்க இலகுவாக செய்து கொடுக்க முடியும். பெரிய நாட்டுக்கு பெருமளவு பணமும் வசதிகளும் தேவை.
சிறிய பிரதேசத்தை பாதுகாப்பதும் இலகுவானது. பொருளாதார வளர்ச்சி காண வைப்பதும் இலகுவானது. மற்ற பிரதேசங்களை இந்த நிலையான பகுதி சிறப்பான வளர்ச்சி கண்ட பிறகு, கவனத்தில் எடுக்கலாம். இப்படியான அணுகுமுறை, மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் நடைமுறையில் வெற்றிதரத்தக்கது.

