10-02-2005, 07:15 PM
narathar Wrote:ஜூட் மேலே கூறியவற்றில் எனக்கு 2 ஆவது விடயம் ஏன் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்று விளங்கவில்லை.இதை இலகுவாக புலத்தில செய்யலாம்.அதாவது தமிழீழத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஒரு முத்திரை வைத்து,புலத்தில் உள்ளோர் அந்த முத்திரை உள்ள பொருட்களை மட்டுமே வாங்கும் படி செய்யலாம்.குறிப்பாக எமது மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களை சந்தைப் படுத்தலாம்.இன்று நாம் இந்திய மீனவர்களால் மன்னார் வளை குடாவில் பிடிக்கப் பட்ட மீன்களயே தமிழ் கடைகளில் வாங்குகிறோம்.இதை ஏன் நாம் மாற்றக் கூடாது?
எனக்கு தெரி;ந்த அளவில் தமிழீழ பிரதேசத்திலிருந்து ஏற்றுமதிகள் இன்னும் ஆரம்பமாகவே இல்லை. கனடாவில் விற்கும் மீன்கள் மெக்சிகோ கரிபியன் தீவுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டு விற்கப்படுபவை.
பனம் பொருட்கள் கருப்பனீர் கூட இலங்கையின் தென்பகுதியிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த பனம்பொருட்கள் சிறிலங்கா பனம்பொருள் அபிவிருத்தி சபையால் தென்பகுதியில் வளரும் பனைகளில் இருந்தும் பெறப்படுகின்றன.

