10-02-2005, 07:05 PM
ஜூட் மேலே கூறியவற்றில் எனக்கு 2 ஆவது விடயம் ஏன் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்று விளங்கவில்லை.இதை இலகுவாக புலத்தில செய்யலாம்.அதாவது தமிழீழத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஒரு முத்திரை வைத்து,புலத்தில் உள்ளோர் அந்த முத்திரை உள்ள பொருட்களை மட்டுமே வாங்கும் படி செய்யலாம்.குறிப்பாக எமது மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களை சந்தைப் படுத்தலாம்.இன்று நாம் இந்திய மீனவர்களால் மன்னார் வளை குடாவில் பிடிக்கப் பட்ட மீன்களயே தமிழ் கடைகளில் வாங்குகிறோம்.இதை ஏன் நாம் மாற்றக் கூடாது?

