09-28-2005, 09:29 PM
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இனவாதிகளுக்கு ஊக்குவிப்பு
புலிகள் மீதான பிரயாணத்தடை சமாதான முயற்சிக்கு பாதகம் தமிழ்க்கட்சி தலைவர்கள் தெரிவிப்பு
(எஸ். ஸ்ரீகஜன்)
விடுதலைப் புலிகள் மீது ஐரோப் பிய ஒன்றியம் விதித்துள்ள பிரயாணத் தடையானது சமாதான முயற்சிக்கு பாதகமாக அமைவதுடன் ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத சக்திகளின் செயற் பாட் டுக்கு மறைமுகமாக துணை போவ தாகவே அமைந்துள்ளது என்று தமிழ்க் கட்சித் தலைவர்கள் விசனம் தெரிவித்தனர். இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஓரவஞ்சனையாக செயற்பட்டுள்ளன. இத்தகைய முடிவானது அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர்கள்
சுட்டிக் காட்டினர். விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடு களுக்குள் பிரவேசிக்க ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளமை குறித்து கருத்துக் கேட்டபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்த னர். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடி வானது இன்றைய சமாதான சூழலில் ஓரவஞ்சக தனமானதாகும். சமாதான சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள இந்த தீர்மானம்
சமாதான முயற்சிக்கும் பாதகமாக அமைந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது அதிர்ச்சி அளிப்பதாகவுள்ளது. ஒரு பக்கச் சார்பான முடிவினை ஒன்றியம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சந்திரசேகரன் எம்.பி.
இலங்கையில் இடம்பெற்று வருவது விடுதலைப் புலிகளின் போராட்டமல்ல. சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமாகும். இதனை சர்வதேசம் உணர்ந்து கொண்டால் பயங்கரவாத சாயம் பூசப்படமாட்டாது. உலகில் பல உரிமைப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய போராட்டங்களை பயங்கரவாதம் என புறக்கணித்த சர்வதேச சமூகம் பின்னர் போராட்டத்தை அலங்கரித்த வரலாறுகள் உண்டு இதேபோல் புலிகளின் போரட்டமும் அங்கீகாரத்தைப் பெறும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன் எம்.பி. தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது கவலையளிக்கும் ஒரு விடயமாகும் என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாத சக்திகளுக்கு மறைமுகமாக துணை போவதாகவே அமைந்துள்ளது என்று மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்தார்.
புலிகள் மீதான பிரயாணத்தடை சமாதான முயற்சிக்கு பாதகம் தமிழ்க்கட்சி தலைவர்கள் தெரிவிப்பு
(எஸ். ஸ்ரீகஜன்)
விடுதலைப் புலிகள் மீது ஐரோப் பிய ஒன்றியம் விதித்துள்ள பிரயாணத் தடையானது சமாதான முயற்சிக்கு பாதகமாக அமைவதுடன் ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத சக்திகளின் செயற் பாட் டுக்கு மறைமுகமாக துணை போவ தாகவே அமைந்துள்ளது என்று தமிழ்க் கட்சித் தலைவர்கள் விசனம் தெரிவித்தனர். இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஓரவஞ்சனையாக செயற்பட்டுள்ளன. இத்தகைய முடிவானது அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர்கள்
சுட்டிக் காட்டினர். விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடு களுக்குள் பிரவேசிக்க ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளமை குறித்து கருத்துக் கேட்டபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்த னர். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடி வானது இன்றைய சமாதான சூழலில் ஓரவஞ்சக தனமானதாகும். சமாதான சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள இந்த தீர்மானம்
சமாதான முயற்சிக்கும் பாதகமாக அமைந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது அதிர்ச்சி அளிப்பதாகவுள்ளது. ஒரு பக்கச் சார்பான முடிவினை ஒன்றியம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சந்திரசேகரன் எம்.பி.
இலங்கையில் இடம்பெற்று வருவது விடுதலைப் புலிகளின் போராட்டமல்ல. சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமாகும். இதனை சர்வதேசம் உணர்ந்து கொண்டால் பயங்கரவாத சாயம் பூசப்படமாட்டாது. உலகில் பல உரிமைப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய போராட்டங்களை பயங்கரவாதம் என புறக்கணித்த சர்வதேச சமூகம் பின்னர் போராட்டத்தை அலங்கரித்த வரலாறுகள் உண்டு இதேபோல் புலிகளின் போரட்டமும் அங்கீகாரத்தைப் பெறும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன் எம்.பி. தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது கவலையளிக்கும் ஒரு விடயமாகும் என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாத சக்திகளுக்கு மறைமுகமாக துணை போவதாகவே அமைந்துள்ளது என்று மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்தார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

