Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இனவாதிகளுக்கு ஊக்குவிப்பு
#1
என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது பலதரப்பட்ட தடையுத்தரவுகளை விதித்தும் பல படுகொலைகளை நடாத்திவரும் இவ்வேளையில் ஐரோப்பியயூனின் இவ்வறிக்கை தமிழ் பொறுத்தவரையிலும் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையிலும் பலத்த ஏமாற்றத்தையும் கவலையையும் தந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இச்சயெற்பாடு சமாதான நடவடிக்கைளுக்கும் ஒரு பின்னடைவை தரும் ஏன் எனில் சர்வதேச சமூகத்தின் அனுசரனையுடனேயே இப்பேச்சுவார்த்தையை நாம் ஆரம்பித்தோம் ஆனால் சர்வதேச சமூகமே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது எமக்கு தடையுத்தரவுகளை பிறப்பித்துள்ளது பலத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.

சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகளுக்கு இதுவரை எந்த கண்டன அறிக்கை எதனையுமே வெளியிடாத சர்வதேச சமூகம் திடீரென எமது அமைப்பின் தூதுக்குழுவினரின் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கான தடைவிதிப்பு சிறிலங்கா அரசின் இத்தகைய செயற்பாட்டுக்களை சரியானவை என கருதுவதாக இது உள்ளது என நாம் கருதுகின்றோம் என அவர் தெரிவித்தார்.
,


http://www.sankathi.net/index.php?option=c...=2727&Itemid=41
Reply


Messages In This Thread
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இனவாதிகளுக்கு ஊக்குவிப்பு - by வினித் - 09-28-2005, 01:24 PM
[No subject] - by வினித் - 09-28-2005, 01:38 PM
[No subject] - by வினித் - 09-28-2005, 02:24 PM
[No subject] - by adithadi - 09-28-2005, 02:25 PM
[No subject] - by DV THAMILAN - 09-28-2005, 03:47 PM
[No subject] - by வினித் - 09-28-2005, 09:29 PM
[No subject] - by வினித் - 10-17-2005, 12:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)