09-25-2005, 02:32 PM
<b>குறுனிக்கற்காலப் பண்பாடு</b>
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தையே குறுனிக்கற் காலமாக ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.இப்பண்பாட்டு மக்கள் காட்டுப் புற்களாகத் தோன்றிய பயிர்களில் இருந்து தானியங்களை அறுக்கவும் வேறு தேவைகளிற்குப் பயன்படுத்தவும் சிறிய பிளேட் போன்ற கல் அலகுகளைப் பயன்படுத்தியதால் இக்காலத்தைக் குறுனிக்கற்காலம் அல்லது இடைக்கற்காலம் எனத் தொல்லியலாளர் அழைப்பர்.ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பேயிருந்தே இப்பண்பாடு நிலவியதென்ற கருத்து நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது.அண்மைக்கால ஆய்வுகளால் இலங்கையில் இதன் தோற்றக் காலம் கி.பி 28,000 ஆண்டுகள் எனவும் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் கி.மு 30,000 ஆண்டுகள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இக்காலம் பல உட்பிரிவுகளைக் கொண்டு காணப்படுவதோடு இதன் ஆரம்பம் இற்றைக்கு 5 இலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகவே சொல்லப்படுகிறது.ஈழத்தில் இக்காலத்திற்குரிய பிரிவுகள் எல்லாம் காணப்படாவிட்டாலும் கூட பழைய கற்காலம் இடைப்பட்ட கற்காலத்திற்குரிய தடயங்கள் உள்ளன. பழைய கற்காலத்திற்குரிய தடயங்கள் வடபகுதியில் தான் விரிந்து காணப்படுகின்றன.ஆயினும் வட இலங்கையில் இதுவரை அறியப்பட்டுள்ள மிகத் தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தொல்லியற் சான்றுகள் குறுனிக் கற்காலப் பண்பாட்டிற்குரியதாகும்.
இடைக்கற்காலத்திற்குரிய தடயங்கள் யாழ்நாடு தவிர்ந்த ஈழம் முழவதும் காணப்படுன்றன.இக்காலக் கருவிகளை ஆக்குவதற்கு பயன்படுத்திய "குவாட்ஸ்" இனக் கற்கள் யாழ் குடாநாட்டில் காணப்படாததால்தான் இக்கால ஆயுதங்கள் இங்கு கிடைக்கவில்லை இப்பண்பாடு நிலவியதற்கான சான்றுகளை பலாங்கொட,இரத்தினபுரி,கித்துள்கொட,குறுவிற்றாவ,அனுராதபுரம்,வவுனியா,முல்லைத்தீவு,மன்னார்,பூநகரி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தியுள்ளன.
ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த குறுனிக்கற்கால மக்களுக்கும் இடையில் கலாச்சாரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்;; ஒரே மாதிரியானதாகக் காணப்படுகின்றன.
குறுனிக்கற்காலத்திற்குரிய மக்கள்தான் இன்றைய வேடங்களின் மூதாதையர் ஆவர்.இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் மொழி ஆகும்.இலங்கைத்தீவிலும் தமிழ்நாட்டிலும் இப்பண்பாட்டைப் பின்பற்றிய மக்களே ஆதி ஒய்ரோயிட் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.இவர்களின் மொழியும் பண்பாடும் பிற்கால திராவிட நாகரிகத்துடன் இணைந்தே இலங்கை நாகரிகம் தோற்றம் பெற்றது.
பதிவு
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தையே குறுனிக்கற் காலமாக ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.இப்பண்பாட்டு மக்கள் காட்டுப் புற்களாகத் தோன்றிய பயிர்களில் இருந்து தானியங்களை அறுக்கவும் வேறு தேவைகளிற்குப் பயன்படுத்தவும் சிறிய பிளேட் போன்ற கல் அலகுகளைப் பயன்படுத்தியதால் இக்காலத்தைக் குறுனிக்கற்காலம் அல்லது இடைக்கற்காலம் எனத் தொல்லியலாளர் அழைப்பர்.ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பேயிருந்தே இப்பண்பாடு நிலவியதென்ற கருத்து நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது.அண்மைக்கால ஆய்வுகளால் இலங்கையில் இதன் தோற்றக் காலம் கி.பி 28,000 ஆண்டுகள் எனவும் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் கி.மு 30,000 ஆண்டுகள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இக்காலம் பல உட்பிரிவுகளைக் கொண்டு காணப்படுவதோடு இதன் ஆரம்பம் இற்றைக்கு 5 இலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகவே சொல்லப்படுகிறது.ஈழத்தில் இக்காலத்திற்குரிய பிரிவுகள் எல்லாம் காணப்படாவிட்டாலும் கூட பழைய கற்காலம் இடைப்பட்ட கற்காலத்திற்குரிய தடயங்கள் உள்ளன. பழைய கற்காலத்திற்குரிய தடயங்கள் வடபகுதியில் தான் விரிந்து காணப்படுகின்றன.ஆயினும் வட இலங்கையில் இதுவரை அறியப்பட்டுள்ள மிகத் தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தொல்லியற் சான்றுகள் குறுனிக் கற்காலப் பண்பாட்டிற்குரியதாகும்.
இடைக்கற்காலத்திற்குரிய தடயங்கள் யாழ்நாடு தவிர்ந்த ஈழம் முழவதும் காணப்படுன்றன.இக்காலக் கருவிகளை ஆக்குவதற்கு பயன்படுத்திய "குவாட்ஸ்" இனக் கற்கள் யாழ் குடாநாட்டில் காணப்படாததால்தான் இக்கால ஆயுதங்கள் இங்கு கிடைக்கவில்லை இப்பண்பாடு நிலவியதற்கான சான்றுகளை பலாங்கொட,இரத்தினபுரி,கித்துள்கொட,குறுவிற்றாவ,அனுராதபுரம்,வவுனியா,முல்லைத்தீவு,மன்னார்,பூநகரி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தியுள்ளன.
ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த குறுனிக்கற்கால மக்களுக்கும் இடையில் கலாச்சாரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்;; ஒரே மாதிரியானதாகக் காணப்படுகின்றன.
குறுனிக்கற்காலத்திற்குரிய மக்கள்தான் இன்றைய வேடங்களின் மூதாதையர் ஆவர்.இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் மொழி ஆகும்.இலங்கைத்தீவிலும் தமிழ்நாட்டிலும் இப்பண்பாட்டைப் பின்பற்றிய மக்களே ஆதி ஒய்ரோயிட் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.இவர்களின் மொழியும் பண்பாடும் பிற்கால திராவிட நாகரிகத்துடன் இணைந்தே இலங்கை நாகரிகம் தோற்றம் பெற்றது.
பதிவு
::

