09-25-2005, 12:27 PM
எமது போராட்டத்தின் நியாயத்தன்மையின் அடிப்படையில் சர்வதேச அங்கீகாரத்தை கோரி தாயகத்திலும் புலத்தி பல மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்றுரைத்த உன்னத அகிம்சைவாதியின் நினைவுநாட்களில் எமக்கு சர்வதேச அங்கீகாரம் எவ்வளவு முக்கியம் என்றதை கொஞ்சம் விவாதித்தால் எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் அல்லவா கள உறவுகளே.
இன்று உலகில் எந்தெந்த வகையில் யாரால் அங்கீகரிக்கப்பட் நாடுகள், குடியரசுகள், தேசங்கள், அரசியல் நிர்வாக கட்டமைப்புகள் உள்ளன என்று வலையில் அறிந்தவற்றை சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன். தவறுகளை திருத்தி உங்களுக்கு தெரிந்தவற்றையும் இணையுங்கள்.
ஜநாவினால் அங்கத்தவராக தீர்க்கப்படாதா அரசியல் மற்றும் அங்கீகார சிக்கல்கள் எதுவுமின்றி 191 நாடுகள் உள்ளன.
வத்திக்கான் இற்கு எந்த அங்கீகாரச்சிக்கல்கள் இல்லாவிட்டாலும் தன்னை ஜநாவில் இணைக்கவில்லை.
வத்திக்கான் மதரீதியிலான தேவைகளுக்காக ஒரு நாடகா உள்ளபோதும் மற்றய அன்றாட வாழ்வுக்குரிய நடைமுறை விடயங்களில் இத்தாலின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது எனலாம்.
ஆகவே வத்திக்கானோடு சேர்த்து 192 அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் தீர்க்கப்படாதா அங்கீகார சிக்கல்கள் எதுவுமின்றி உள்ளன.
193 வதாக தமது நலன்களிற்காக சர்வதேசம் அங்கீகரித்து பின்னர் ஒரு பலமிக்க அரசியல் இராணுவ சக்தியின் எதிர்பினால் அதை ஓரளவு இழந்த நாடாக தாய்வான் உள்ளது. தாய்வான் ஒரு காலத்தில் ஜநாவில் அங்கத்தவராக அங்கீகரிக்கப்பட்டு இருந்த குடியரசு. அமெரிக்க இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கா 1971 இல் சீனா விதித்த நிபந்தனைக்கு அடிபணிந்து சீனாவின் ஒரு அங்கமாக தாய்வானை ஏற்றுக் கொண்டது.
இந்தவகையில் ஜநா அங்கீகாரமும் சீனா (பாதுகாப்புச்சபையின் நிரந்தர அங்கத்தவர்) அங்கீகாரமும் அற்ற ஓரு நாடக ஆனால் இராஜதந்திரரீதியில் மற்றய நாடுகளால் நேரடி உறவுகளை தொடர்ந்து பேணியவண்ணம், அரசியல் பொருளாதார நிர்வாக கட்டமைப்புக்களையும் முப்படைகளோடு நடமுறையில் ஒரு தனி நாடாக தொடர்கிறது. அமெரிக்கவின் ஆதாரவும் அரசியல் இராணுவ பொருளாதாரரீதியல் தொடர்கிறது. தாய்வானை சீனாமீது அழுத்தம் பிரயோகிக்க பயன்படுத்தம் ஒரு கருவியாக அமெரிக்கா ஆரம்பத்திலிருந்து பயன்படுத்துகிறது என்று கூறினால் அது மிகையாகாது.
194 வதாக சர்ச்சைக்குரியரீதியில் இருப்பதாக பாலஸ்தீனத்தை கொள்ளலாம். பாலஸ்தீனத்திற்கு ஜநாவில் விசேட அவதானிப்பாளர் உரிமை வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இருந்தும் இங்கே முழு அங்கீகாரத்திற்கு முன்னர் தீர்க்கப்படவேண்டி விடயம் என்ன வென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேலின் தலைநகரான ஜெரூசலத்திற்கு தான் பாலஸ்தீனமும் உரிமை கோருகிறது.
ஒரு அங்கீகரிக்கப்பட வேண்டிய நாட்டிற்குரிய அடிப்படை தகமைகளாக
1 வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு கூடிய முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம்
2 அங்கு சாதாரண அன்றாட வாழ்வில் ஈடுபடும் மக்கள்
3 அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக கட்டமைப்புகள்
4 பொருளாதார நடவடிக்கைகளை உள்ளேயும் வெளிநாடுகளோடும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கக்கூடிய தகமை. சொந்த நாணயத்தை உருவாக்கி அதை முகாமைப்படுத்துவது.
5 வேறொரு நாட்டினால் அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தி ஆளமுடியாமை
6 இன்னெரு நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச (ஜநா) அங்கீகாரத்திற்கும் அங்கத்துவத்திற்கும் முன்மொழியப்பட வேண்டும்.
அங்கீகாரமின்றி இன்று பல பிரதேசங்கள் உள்ளன. இவை மேற்கூறிய அடிப்படைத் தகமைகளை பூர்திசெய்யாததினாலே அல்லது பாரபச்சமான முறையில் இவை சர்வதேச சமூகத்தினால் பின்பற்றப்படுவதினாலோ இந்நிலையில் இருக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/List_of_unrec...their_territory
இவர்களோடு எமது போராட்டமும் இணைக்கப்பட்டிருப்பது சர்வதேச அங்கீகாரத்தின் முக்கியத்தை கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது சுதந்திரப்பிரகடனம் செய்துவிட்டு அங்கீகாரம் இல்லாது இருப்பதை தவிர்கவேண்டியதன் முக்கியத்துவம் எம்மால் உணரப்பட்டு அதற்கான பங்களிப்புகளை நாம் துரிதப்படுத்த வேண்டும்.
ஆழிப்பேரலை அனர்த்ததோடு வந்திறங்கிய வெளிநாட்டு ஊடகங்கள் அரசச்சார்பற்ற நிறுவனங்களும் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் தமது பிரதேச குடிமக்களின் தேவைகளிற்கு எவ்வாறு சேவைகளை வழங்குகிறது என்பதை தொளிவாக அறிந்து கொண்டதோடு உலகிற்கும் அறிவிக்க தவறவில்லை. அதேவேளை இனவாத இலங்கை அரசின் உண்மை முகத்தையும் கண்டு கொண்டது. இவை வரலாறாக சுயாதீனமாக ஆதாரங்களோடு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது எமது போராட்டத்திற்கு கிடைத்த ஓரு பெரு வெற்றி.
நிலமையை உணர்ந்தும் இராஜதந்திர சம்பிரதாயங்களிற்காக வெளிப்படையாக கருத்துக்கூற முடியாது இருக்கிறது சர்வதேசசமூகம். அத்தோடு சர்வதேசசமூகத்தின் முக்கிய அங்கத்துவ நாடுகளின் தனிப்பட்ட சுயநல அரசியல் பூகோள இராஜதந்திர நலன்களிற்கு பங்கம் விழைவிக்கும் நிலையை தவிர்ப்பதே அவர்களின் நோக்கம். தமது நலன்களிற்கு பயன் இல்லாவிட்டால் எந்தவெரு நியாமான போராட்டாத்தையும் அங்கீகாரிப்பார்களா? வரலாற்றில் அவ்வாறு நடந்துள்ளதா? எமது போராட்டத்தை அங்கீகரிப்பதால் சர்வதேசத்திற்கு கிடைக்கும் பயன் என்ன? இதை நாம் எமது போராட்டத்தின் நியாயத்தன்மைக்கு அப்பால் எவ்வாறு சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கலாம்?
இன்று உலகில் எந்தெந்த வகையில் யாரால் அங்கீகரிக்கப்பட் நாடுகள், குடியரசுகள், தேசங்கள், அரசியல் நிர்வாக கட்டமைப்புகள் உள்ளன என்று வலையில் அறிந்தவற்றை சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன். தவறுகளை திருத்தி உங்களுக்கு தெரிந்தவற்றையும் இணையுங்கள்.
ஜநாவினால் அங்கத்தவராக தீர்க்கப்படாதா அரசியல் மற்றும் அங்கீகார சிக்கல்கள் எதுவுமின்றி 191 நாடுகள் உள்ளன.
வத்திக்கான் இற்கு எந்த அங்கீகாரச்சிக்கல்கள் இல்லாவிட்டாலும் தன்னை ஜநாவில் இணைக்கவில்லை.
வத்திக்கான் மதரீதியிலான தேவைகளுக்காக ஒரு நாடகா உள்ளபோதும் மற்றய அன்றாட வாழ்வுக்குரிய நடைமுறை விடயங்களில் இத்தாலின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது எனலாம்.
ஆகவே வத்திக்கானோடு சேர்த்து 192 அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் தீர்க்கப்படாதா அங்கீகார சிக்கல்கள் எதுவுமின்றி உள்ளன.
193 வதாக தமது நலன்களிற்காக சர்வதேசம் அங்கீகரித்து பின்னர் ஒரு பலமிக்க அரசியல் இராணுவ சக்தியின் எதிர்பினால் அதை ஓரளவு இழந்த நாடாக தாய்வான் உள்ளது. தாய்வான் ஒரு காலத்தில் ஜநாவில் அங்கத்தவராக அங்கீகரிக்கப்பட்டு இருந்த குடியரசு. அமெரிக்க இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கா 1971 இல் சீனா விதித்த நிபந்தனைக்கு அடிபணிந்து சீனாவின் ஒரு அங்கமாக தாய்வானை ஏற்றுக் கொண்டது.
இந்தவகையில் ஜநா அங்கீகாரமும் சீனா (பாதுகாப்புச்சபையின் நிரந்தர அங்கத்தவர்) அங்கீகாரமும் அற்ற ஓரு நாடக ஆனால் இராஜதந்திரரீதியில் மற்றய நாடுகளால் நேரடி உறவுகளை தொடர்ந்து பேணியவண்ணம், அரசியல் பொருளாதார நிர்வாக கட்டமைப்புக்களையும் முப்படைகளோடு நடமுறையில் ஒரு தனி நாடாக தொடர்கிறது. அமெரிக்கவின் ஆதாரவும் அரசியல் இராணுவ பொருளாதாரரீதியல் தொடர்கிறது. தாய்வானை சீனாமீது அழுத்தம் பிரயோகிக்க பயன்படுத்தம் ஒரு கருவியாக அமெரிக்கா ஆரம்பத்திலிருந்து பயன்படுத்துகிறது என்று கூறினால் அது மிகையாகாது.
194 வதாக சர்ச்சைக்குரியரீதியில் இருப்பதாக பாலஸ்தீனத்தை கொள்ளலாம். பாலஸ்தீனத்திற்கு ஜநாவில் விசேட அவதானிப்பாளர் உரிமை வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இருந்தும் இங்கே முழு அங்கீகாரத்திற்கு முன்னர் தீர்க்கப்படவேண்டி விடயம் என்ன வென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேலின் தலைநகரான ஜெரூசலத்திற்கு தான் பாலஸ்தீனமும் உரிமை கோருகிறது.
ஒரு அங்கீகரிக்கப்பட வேண்டிய நாட்டிற்குரிய அடிப்படை தகமைகளாக
1 வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு கூடிய முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம்
2 அங்கு சாதாரண அன்றாட வாழ்வில் ஈடுபடும் மக்கள்
3 அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக கட்டமைப்புகள்
4 பொருளாதார நடவடிக்கைகளை உள்ளேயும் வெளிநாடுகளோடும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கக்கூடிய தகமை. சொந்த நாணயத்தை உருவாக்கி அதை முகாமைப்படுத்துவது.
5 வேறொரு நாட்டினால் அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தி ஆளமுடியாமை
6 இன்னெரு நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச (ஜநா) அங்கீகாரத்திற்கும் அங்கத்துவத்திற்கும் முன்மொழியப்பட வேண்டும்.
அங்கீகாரமின்றி இன்று பல பிரதேசங்கள் உள்ளன. இவை மேற்கூறிய அடிப்படைத் தகமைகளை பூர்திசெய்யாததினாலே அல்லது பாரபச்சமான முறையில் இவை சர்வதேச சமூகத்தினால் பின்பற்றப்படுவதினாலோ இந்நிலையில் இருக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/List_of_unrec...their_territory
இவர்களோடு எமது போராட்டமும் இணைக்கப்பட்டிருப்பது சர்வதேச அங்கீகாரத்தின் முக்கியத்தை கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது சுதந்திரப்பிரகடனம் செய்துவிட்டு அங்கீகாரம் இல்லாது இருப்பதை தவிர்கவேண்டியதன் முக்கியத்துவம் எம்மால் உணரப்பட்டு அதற்கான பங்களிப்புகளை நாம் துரிதப்படுத்த வேண்டும்.
ஆழிப்பேரலை அனர்த்ததோடு வந்திறங்கிய வெளிநாட்டு ஊடகங்கள் அரசச்சார்பற்ற நிறுவனங்களும் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் தமது பிரதேச குடிமக்களின் தேவைகளிற்கு எவ்வாறு சேவைகளை வழங்குகிறது என்பதை தொளிவாக அறிந்து கொண்டதோடு உலகிற்கும் அறிவிக்க தவறவில்லை. அதேவேளை இனவாத இலங்கை அரசின் உண்மை முகத்தையும் கண்டு கொண்டது. இவை வரலாறாக சுயாதீனமாக ஆதாரங்களோடு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது எமது போராட்டத்திற்கு கிடைத்த ஓரு பெரு வெற்றி.
நிலமையை உணர்ந்தும் இராஜதந்திர சம்பிரதாயங்களிற்காக வெளிப்படையாக கருத்துக்கூற முடியாது இருக்கிறது சர்வதேசசமூகம். அத்தோடு சர்வதேசசமூகத்தின் முக்கிய அங்கத்துவ நாடுகளின் தனிப்பட்ட சுயநல அரசியல் பூகோள இராஜதந்திர நலன்களிற்கு பங்கம் விழைவிக்கும் நிலையை தவிர்ப்பதே அவர்களின் நோக்கம். தமது நலன்களிற்கு பயன் இல்லாவிட்டால் எந்தவெரு நியாமான போராட்டாத்தையும் அங்கீகாரிப்பார்களா? வரலாற்றில் அவ்வாறு நடந்துள்ளதா? எமது போராட்டத்தை அங்கீகரிப்பதால் சர்வதேசத்திற்கு கிடைக்கும் பயன் என்ன? இதை நாம் எமது போராட்டத்தின் நியாயத்தன்மைக்கு அப்பால் எவ்வாறு சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கலாம்?

