Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எம்மை நாமே தொலைக்கிறோமா? 1
#6
<b>எம்மை நாமே தொலைக்கிறோமா? 2</b>

முதற்பதிவில் எமது பழமையான வீடுகள் இழக்கப்பட்டு கொண்டிருப்பதைப்பற்றி ஒரு சிறு பதிவு செய்திருந்தேன். இது எமது வளம் இழக்கப்படுவது பற்றிய ஒரு பதிவு.

மிகவும் தரமான கண்ணாடி மணல் படிவுகள் யாழ்குடா நாட்டின் வடமராட்சியின் வல்லிபுரக்கோவில் முதல் சுண்டிக்குளம்? வரை விரவிக்கிடக்கிறது. அதே போல சாவகச்சேரி முதல் பளைக்கு அப்பால் வரையான கடற்கரைபிரதேசம். {அவற்றைவிட முதல் ஒரு பதிவில் படம் காட்டிய பூநகரியின் மன்னித்தலை, கௌதாரிமுனைப்பிரதேசங்களிலும் விரவிக்கிடக்கிறது.}

1995 இல் இராணுவம் வசம் யாழ்குடா நாடு வந்தபின் யாழில் தொடங்கிய மீள் கட்டுமான வேலைகளும், போர் நிறுத்ததின் பின் மக்களால் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமான பணிகளும் இம் மணலின் அகழ்வை தீவிரப்படுத்தியது. 1995 காலப்பகுதியில் சாவகச்சேரி முதல் ஆனையிறவு வரையான கரையோரம் முழுமையும் இராணுவ வசம் இருந்த போது இராணுவத்தினருக்கு ஒரு தொகையை கொடுத்து எந்தவித திட்டமும் இன்றி மணல் அகழப்பட்டது. {அக்காலப்பகுதியில் சாதாரணமாக ஒரு உழவு இயந்திரத்தால 4 முறை மண் ஏற்றி இறக்க முடியும் என ஒரு பொது மதிப்பீடு மணல் மூலத்துக்கும் அது கொண்டு செல்லப்படும் தூரத்தையும் கொண்டு மட்டுமே,கட்டுபாடு அல்ல. அதை மீறி பணத்தின் மீதான ஆசையால் ஒரு நாளுக்கு 6 மூறை ஏற்ற முற்பட்டு உழவு இயந்திரங்கள் தெரு நீளம் உடைந்து நின்றதையும் காண முடிந்தது}.

மணல் அகழ்வோர் எந்தவித திட்டமும் இன்றி கடல் மட்டத்திற்கு கீழும் மணல் அகழ்ந்தால் மழை காலத்தில் கடல் பெருகும் போது நீர் இப்பகுதிக்குள் உள் நுளைந்தால் நிலம் உவராவதுடன் இப்பகுதி கடற்பகுதிக்குள் போய் விடும் என்றும் சொல்லப்பட்டது. இதற்கு ஆதாரமாக கச்சாய் துறைக்கு அணித்தக தெரியும் சிறு தீவு ஆரம்பத்தில் நிலத்துடன் சேர்ந்தே இருந்ததாகவும், மணல் அகழ்வால் அது தனித்தீவகிவிட்டதாகவும் பத்திரிகையில் வசித்திருக்கிறேன்.

<b>இவை முகமாலையிலோ அல்லது வேறெங்குமோ காத்திருக்கும் பார ஊர்திகள் (லொறி) அல்ல வல்லிபுரக்கோவில் பகுதியில் மணல் அகழ்வுக்காக காத்திருகின்றன.</b>


<img src='http://img361.imageshack.us/img361/5415/jaf10014vf.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img352.imageshack.us/img352/9236/jaf10029aa.jpg' border='0' alt='user posted image'>


அதே காலப்பகுதியில் வல்லிபுரக்கோவில் பகுதியிலும் மணல் அகழ்வு எந்தவித திட்டமும் அற்ற முறையில்மேற்கொள்ளப்பட்டது.

போர் நிறுத்த சூழலின் பின் இவை அனைத்தும் ஒரு ஒழுங்கமைப்பிற்கு கீழ் கொண்டு வரப்பட்டு மணல் அகழ்வு நடைபெற்றலும் கண்ணாடி தயாரிப்பின் மூலப்பொருள இல்லது போகும் சூழல்.
அதற்கு மேலதிகமாக சூழலியல் பாதிப்புகள்.

நான் யாழில் நின்ற போது ஒரு சம்பவம் நடைபெற்றது ஒரு லொறி ஒன்று மணல் இல்லது மணல் ஏற்றும் இடத்தில் இருந்து வந்த போது பொலிசார் மணல் லோறி என சந்தேகபட்டு மறித்தபோது பொலிசுக்கு விளையாட்டு காட்ட வேகமாக லொறியை ஓட்டி சென்றுள்ளனர். அந்த ஒழுங்கைகள் மிக சிறியவை. இதன் போது எதிரில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் மோதியதில் ஒருவர் அந்த இடத்திலேயே பலியானார். மற்றவர் மிக கடுமையான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.



உடனடியாக ஒரு கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது
அதாவது அப்போ கட்டிட தெவைக்குரிய மணலை எங்கு பெறுவது என்பதே அது

1. திட்டமிடல் இல்லது கடல் மட்டத்துக்கு கீழ் மணல் அகழ்வதை நிறுத்தினாலே சூழலியல் பாதிப்புக்களில் இருந்து தப்பமுடியும்
2. ஆற்று மணல் அல்லது வேறு மனல் மூலங்களில் இருந்து யாழ் குடாவிற்கு மணல் கொண்டு வந்து கட்டுமான பணிகள் மேற்கொள்வதை ஊக்குவித்தல்.

இது சாத்தியமற்றது என சொல்லமுடியாது. எமது மரவளத்தை காக்க்க பிற இடங்களில் இருந்து மரம் கொண்டுவருவது ஊக்குவிக்கப்பட்டது போல் இதையும் செய்யமுடியும்.

அதே போலவே கடற்கரையோரம் உள்ள சுண்ணகற்பாறைகள் கட்டிட தேவைக்கக வகை தொகையின்றி அழிக்கப்படுவதும்
இதுவும் பின்னர் கடல் உட்புகலுக்கும் நிலத்தடி நீர்வளம் உப்பாகவும் காலக அமையலாம்.

நாம் கவனத்தில் எடுப்போமா?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Eswar - 09-23-2005, 12:42 AM
[No subject] - by sathiri - 09-23-2005, 06:17 AM
[No subject] - by வெண்ணிலா - 09-23-2005, 06:21 AM
[No subject] - by kuruvikal - 09-23-2005, 06:35 AM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 09:48 AM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 09:57 AM
[No subject] - by Thala - 09-23-2005, 10:00 AM
[No subject] - by Aravinthan - 04-19-2006, 06:44 AM
[No subject] - by நேசன் - 04-19-2006, 07:24 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)