11-09-2003, 08:16 PM
சீதனம் கேட்டவனை வாசல்
விட்டுத் துரத்தியதற்காய்
கிடைத்த பெயர்...
'அடங்காப்பிடாரி , ஆண்மூச்சுப் பிடிச்ச பேய் ,
பெரிய புரட்சிக்காரியெண்ட நினைப்பு"
சீரொன்றும் வேண்டாமென்றவனின்
வயது ஈராறாய் மூத்து நிற்க
அவ்வாழ்வை எதிர்த்தற்காய்
கிடைத்த பெயர்....
'அழகியெண்ட பெரும் நினைப்பு
ஆள்கொஞ்சம் நிறத்தவுடனை
அதுக்குப் பெரும் எடுப்பு"
அத்தோடு நின்றிருந்தால்
அமைதியாயிருந்திடலாம்.
வசைசொல்லி , யாரோ வைத்துள்ளான் இவளை
வாய்கூசாச் சொல்லெல்லாம்
வாயிருந்து நளுவி தீயிட்டு நெஞ்சைச்
சுட்டவனின் முகம் காண
வாழ்ந்து காட்டென்றவன்
காதில் விழும்படியாய்....
'வன்னியானிட்டை என்ன வடிவைக்கண்டாளாம்
வாயுதிர்த்த வார்த்தைகளில் இருந்தது
விடமென்றால் பொய்யில்லை".
அனாமதேயத் தொலைபேசியழைப்பு
உச்சரித்த பெயர் எனதானதால்
வாய்களுக்குள்ளிருந்து வந்தவையெல்லாம்
சாவின் பின்னாலும் சாகத வடுக்கள்.
போகட்டும் விடு எல்லாம்
வாழ்வோம் , வாழ்ந்து காட்டுவோம்
என்ற இனியவன் விழிநனைத்து
நெஞ்சில் அணைதந்து நிமிர்த்திய து}யவன்
எனக்காய் அவன் அழுத இரவுகள் எத்தனையோ....
இந்நாளில் எழுதிவிட முடியாத நாளிகைகள்.
நன்றியென்ற ஒரு சொல்லில்
நம்முறவை இழித்துவிட
நமக்கு எண்ணமில்லை.
அதற்கும் மேலாய்....
சீதனமாய் பெரிய தொகை , சிறிதான சேமிப்பு ,
எதுவுமிங்கு இருக்கவில்லை.
எங்களின் உலகை நாமே தேர்ந்தெடுத்தோம்.
அழும்போது ஆழுக்கொரு மடியில்
விரல்கோதித் தலையணைக்க
அமைதியான து}க்கம்.....
ஆனந்தத்தில் துள்ளும் போது
இருவரும் பகிர்ந்து....
இனிக்கிறது வாழ்வு.....
சிரித்து மகிழச் செல்வங்களிரண்டு
ஆணுமாய் , பெண்ணுமாய்
அழகிய சித்திரங்கள்.
அவர் வாழ்வில் இனியெந்தச்
சில்லெடுப்பும் இருக்காது
வழியமைத்து வழிகாட்ட
எரிமலைகள் கடந்து வந்த
இருவர் நாம் இருக்கையிலே
அவர் வாழ்வும் இனிதாகும்.
சீதனம் என்றவனும் , சீர் வேண்டாம் என்றவனும்
கண்முன்னே எம் நல்வாழ்வு
இது கடவுளின் வரம் காலம் நமக்காய்
கண்திறந்து தந்த வரம்.
போதும் இது.
சீதனமும் தேவையில்லை - இனி
சீரழிவும் தேவையில்லை
பட்டவடு நினைவிருக்க பாதையினி தெளிவாமே.
09.11.03.
விட்டுத் துரத்தியதற்காய்
கிடைத்த பெயர்...
'அடங்காப்பிடாரி , ஆண்மூச்சுப் பிடிச்ச பேய் ,
பெரிய புரட்சிக்காரியெண்ட நினைப்பு"
சீரொன்றும் வேண்டாமென்றவனின்
வயது ஈராறாய் மூத்து நிற்க
அவ்வாழ்வை எதிர்த்தற்காய்
கிடைத்த பெயர்....
'அழகியெண்ட பெரும் நினைப்பு
ஆள்கொஞ்சம் நிறத்தவுடனை
அதுக்குப் பெரும் எடுப்பு"
அத்தோடு நின்றிருந்தால்
அமைதியாயிருந்திடலாம்.
வசைசொல்லி , யாரோ வைத்துள்ளான் இவளை
வாய்கூசாச் சொல்லெல்லாம்
வாயிருந்து நளுவி தீயிட்டு நெஞ்சைச்
சுட்டவனின் முகம் காண
வாழ்ந்து காட்டென்றவன்
காதில் விழும்படியாய்....
'வன்னியானிட்டை என்ன வடிவைக்கண்டாளாம்
வாயுதிர்த்த வார்த்தைகளில் இருந்தது
விடமென்றால் பொய்யில்லை".
அனாமதேயத் தொலைபேசியழைப்பு
உச்சரித்த பெயர் எனதானதால்
வாய்களுக்குள்ளிருந்து வந்தவையெல்லாம்
சாவின் பின்னாலும் சாகத வடுக்கள்.
போகட்டும் விடு எல்லாம்
வாழ்வோம் , வாழ்ந்து காட்டுவோம்
என்ற இனியவன் விழிநனைத்து
நெஞ்சில் அணைதந்து நிமிர்த்திய து}யவன்
எனக்காய் அவன் அழுத இரவுகள் எத்தனையோ....
இந்நாளில் எழுதிவிட முடியாத நாளிகைகள்.
நன்றியென்ற ஒரு சொல்லில்
நம்முறவை இழித்துவிட
நமக்கு எண்ணமில்லை.
அதற்கும் மேலாய்....
சீதனமாய் பெரிய தொகை , சிறிதான சேமிப்பு ,
எதுவுமிங்கு இருக்கவில்லை.
எங்களின் உலகை நாமே தேர்ந்தெடுத்தோம்.
அழும்போது ஆழுக்கொரு மடியில்
விரல்கோதித் தலையணைக்க
அமைதியான து}க்கம்.....
ஆனந்தத்தில் துள்ளும் போது
இருவரும் பகிர்ந்து....
இனிக்கிறது வாழ்வு.....
சிரித்து மகிழச் செல்வங்களிரண்டு
ஆணுமாய் , பெண்ணுமாய்
அழகிய சித்திரங்கள்.
அவர் வாழ்வில் இனியெந்தச்
சில்லெடுப்பும் இருக்காது
வழியமைத்து வழிகாட்ட
எரிமலைகள் கடந்து வந்த
இருவர் நாம் இருக்கையிலே
அவர் வாழ்வும் இனிதாகும்.
சீதனம் என்றவனும் , சீர் வேண்டாம் என்றவனும்
கண்முன்னே எம் நல்வாழ்வு
இது கடவுளின் வரம் காலம் நமக்காய்
கண்திறந்து தந்த வரம்.
போதும் இது.
சீதனமும் தேவையில்லை - இனி
சீரழிவும் தேவையில்லை
பட்டவடு நினைவிருக்க பாதையினி தெளிவாமே.
09.11.03.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

