09-22-2005, 04:21 AM
kurukaalapoovan Wrote:தமிழீழ தபால் சேவையில்லாமல் முத்திரை அடிச்சால் உள்நாட்டு தேவைகளுக்கும் பாவிக்க முடியாதே? வெளிநாட்டு சேவைக்கு பயன்படுத்த அந்தந்த நாடுகள் அங்கீகரிக்க வேணுமல்லவா?
புத்தளம் இல்லாத தமிழீழ சின்னத்தோட வேறையிருக்கு.. :?
80களில் EPRLF என்ற அமைப்பு வெளியிட்ட தபால்தலை இது. அந்த நாட்களில் தமிழ் ஈழம் என்பதனை விடுதலைப்புலிகளும், மற்ற அமைப்புகளும் பயன்படுத்த ஈழம் என்ற பதத்தை இந்த அமைப்பும் ஈரோசும் பயன்படுத்தினர். ஈரோசின் ஈழத்தில், மலைநாடும் இணைந்திருந்தது. அப்போது நாங்கள் விடுதலைப்புலிகளிடம் "அவங்கள் மலைநாடும் சேர்த்தெல்லோ பிடிச்சு தரப்போறாங்களாம்" என்று கேட்டால் "அதெல்லாம் இராணுவ ரீதியில் கஷ்டம். இப்படியெல்லாம் படம்கீறி மக்களை குழப்பாமல் பிடிக்கேக்கிள்ள எல்லாத்தைம் அடிச்சு பிடிப்பம்." என்று சொல்லுவார்கள்.
இந்த ஈழம் தபால்தலையுடன் இலங்கையில் கடிதங்கள் அரசாங்க சேவைகளுக்கு கூட போய் வந்திருக்கின்றன. தமிழ் தபால் ஊழியர்கள் கண்டும் காணாதது போல விட, சிங்களவர்கள் விசயம் தெரியாமல் விட்டுவிட்டனர்.

