09-20-2005, 04:00 AM
preethi Wrote:பிராமணர்கள், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ அடையாளம் கொள்வதில்லை. ஏன்? ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள். இதைப் பொய் என்று நிரூபியும் பார்ப்போம்.
jude Wrote:சுப்பிரமணிய ஐயர் தான் தமிழன், தமிழன், தமிழன் என்று தமிழில் பாடிப்பாடியே செத்தான். அவன் தான் மகாகவி பாரதி. பார்ப்பானாக பிறந்த அவன், தன்னை தமிழன் என்று நிரூபிக்கவில்லையா? உன்னிலும் பார்க்க சுத்தத் தமிழன் அவன்.
preethi Wrote:NICE TRY.பாரதியாரைத் தவிர கமலகாசனோ, கிருஸ்ணையரோ தாங்கள் திராவிடத் தமிழர் என்று ஒத்துக் கொண்டதுமில்லை. வெளிப்படையாகச் சொன்னதுமில்லை. பாரதியார் பூணூலை அறுத்தெறிந்து தான் பார்ப்பானல்ல, தமிழன் என்று சொன்னதால் தான் பார்ப்பான்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள்.
தமிழன் என்று சொல்லும் பிராமணனை காட்டு என்றீர்.
பாரதியாரை காட்டினேன். அவரை பிராமணர் தள்ளி வைத்தனர் என்கிறீர். ஆனால் நீர் கேட்டபடி ஒரு பிராமணனை காட்டவில்லையா? இந்த பிராமணன் தன்னை தமிழன் என்று சொல்லவில்லையா?
jude Wrote:அந்த தமிழன் பாடல்களை தன் படங்களில் பாடி, பார்ப்பானாக பிறந்து, சாதிகள் இல்லையடி பாப்பா என்று புறப்பட்டு, மயிர்வெட்டும் தொழில் செய்பவனாக காட்டினான் "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தில். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், பாரதி பாடல்களை பாடினான். "ஓளவை ஷண்முகி" படத்தில் பிராமணத்தியாக வந்து சட்டையை திறந்து காட்டி பிராணத்திகளை அவமானப்படுத்தினான் என்று பிராமணர் பொங்கவும் செய்தான். அந்த நடிகன் பெயர் கமலஹசன். போய்க் கேள் அவன் பிராமணணா, தமிழனா என்று. ஏற்கனவே சொல்லியிருக்கிறான் தான் தமிழன் என்று.
preethi Wrote:கமலகாசன் தமிழனுமல்ல தெலுங்குப் பிராமணன். பணமும் புகழும் கிடைக்குமென்றால் பல பிராமணர்கள் தமிழன் என்று மட்டுமல்ல, ஆபிரிக்காவில் போய்த் தாங்கள் கறுப்பர்கள் என்றும் கூடச் சொல்லுவார்கள்.
கமலஹாசனை காட்டினேன். பணம் வந்தால் பிராமணன் எப்பிடியும் சொல்லுவான் என்கிறீர். நீர் கேட்டபடி தமிழன் என்று தன்னை ஒத்து கொண்டானா இல்லையா? இதென்ன சொதப்புவாதம்?
jude Wrote:இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் ஈழத்தமிழரின் அருமை நண்பர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். அவர் தமிழன் இல்லையா உனக்கு? சாதிவெறி தலைக்கேறினால் ஆடத்தான் செய்யும். என்ன செய்வது பறையடிப்பது எனது தொழில் அடிக்கிறேன் பறை உனக்கு!.
preethi Wrote:கிருஷ்ணையரிடம் எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. ஏனென்றால் அவர் மனிதவுரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது மட்டுமல்ல. IPKF விடயத்தில் அவருடைய கருத்தை நான் வாசித்தேன். கிருஷ்ணையர் ஒரு நாளும் தான் திராவிடர் என்றும் சொன்னதில்லை. தான் ஒரு தமிழன் என்றும் சொன்னதில்லை. பாவம் பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கும் JUDE க்கு என்னுடைய கேள்வி விளங்கவில்லை.
கிருஷ்ண ஐயரை காட்டினேன். அவர் தன்னை தமிழன் என்று சொல்லவில்லை. ஆனால் பிரபாகரனுக்கு ஆதரவு என்கிறீர். ஆக தம்மை தமிழர் என்று ஒத்துக்கொள்ளாத பிராமணரும் பிரபாகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிறீர். நல்லது. நாங்கள் ஏன் அந்த ஆதரவையெல்லாம் இழக்க வேண்டும்?
தமிழரோ இல்லையோ எம்மை ஆதரிப்பவர்களை நாம் எதிர்க்கப்போவதில்லை. எம்மை எதிர்ப்பவர்களை எதிர்ப்போம். பிராமணர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் எதிர்க்க மாட்டோம். அந்த பிராமணன் இன்னுமொரு பாரதியோ கிருஷ்ணையரோ யாருக்கு தெரியும்? இன்னுமொரு சோ என்று தெரியாவிட்டால் நாம் எதிர்க்க போவதில்லை. ஆனால் தமிழனாக இருந்து கொண்டு எதிரி என்று கண்டால் தமிழன் என்றாலும் எதிர்ப்போம். உமக்கு இது புரியாவிட்டால் ஆடும். பறை பாடும்.

