Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழத்தில் தமிழில் வழிபாடு வேண்டும்..
#8
<b>பிராமணரின் தமிழ் வெறுப்புக்கு எடுத்துக்காட்டை வாசித்துப் பாருங்கள். தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள் என்று புலம்பும் ஈழத்தமிழர்களே, பிராமணிகள் தமிழுக்குச் செய்வதைப் பாருங்கள். இதை நான் எழுதவில்லை, இவர்களீண் தமிழ் வெறுப்பைப் பார்த்துப் பொறுக்க முடியாத, பாரதியார் போன்ற தாத்தாச்சாரியார் என்ற பிராமணார் தான் இதை எழுதுகிறார்.ஈழத்தமிழர்களே சிந்தியுங்கள்!!!</b>



தமிழ் இறைவனின் நேச பாஷையா அல்லது நீசபாஷையா என்பதை திருப்பாணாழ்வாரின்
வாழ்வியல் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோம்.
திருப்பாணாழ்வாரின் தமிழை கேட்பதற்காக ஆளனுப்பி அவரை மரியாதையோடு தூக்கிவரச்
சொன்னார் அரங்கத்துக்கு பெருமாள். ஆனால்... அப்பேற்பட்ட ஸ்ரீரங்கத்திலே
படுத்துக்கிடக்கும் ரங்கநாதனுக்கு எதிரே நாலாயிரம் அருளிச் செயலை பாடுகிறார்களா?
ஒவ்வொரு திருமால் ஆலயத்திலும் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்துநாள் பின் பத்துநாள் ஆக
இருபது நாள்கள் நாலாயிரம் ஆழ்வார்கள் அருளிச் செயலை பாடி ஒரு தமிழ்விழா
நடத்துவார்கள். இது வருடா வருடம் நடக்கும்.
ஸ்ரீரங்கத்தில் எப்படி நடக்கும் என்றால்... மூலவரான ரங்கநாதன் படுத்தபடியே தமிழ் கேட்க
காத்திருக்க... உற்சவரை அதாவது உற்சவ மூர்த்தியை வெளியே ஒரு மண்டபத்துக்கு தூக்கி
வருவார்கள்.
அங்கே வைத்து நாலாயிரம் அருளிச் செயலையும் இசையோடு... பாடி முடிப்பார்கள். இதற்கு
அரயர் சேவை என்று பெயர். இது முடிந்த பிறகு... அதாவது தமிழ்ப் பாடல்கள் முடிந்தபிறகு
உற்சவரை மறுபடியும் தூக்கி உள்ளே கொண்டு போய் வைத்து விடுவார்கள்.

<b>ஆக... தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கி
வருகிறார்கள். அதுவும்... தமிழுக்காக ஆழ்வாரை தூக்கிவரச் சொல்லி தமிழ்கேட்ட
ரங்கநாதனுக்கு... நமது பூஜை புனஸ்காரங்கள்படி தமிழ் கேட்க வாய்ப்பில்லை. இதை நான்
முன்பே பலதடவை வலியுறுத்தியபோதும்... வைணவ சமயவாதிகள் சிலர் எதிர்த்தனர்.</b>ஆனால் என் நிலையிலும், தமிழின் நிலையிலும் மாற்றமே இல்லையே?

<b>சரி வைணவத்தில் தமிழ் பார்த்தாயிற்று சைவத்தில்?...
“தென்னாடுடைய சிவனே போற்றி...
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...”
என்ற தமிழ்க் கவிதையே சிவன் தென்னாட்டவன் அதாவது தமிழ்க் கடவுள்... ஆனாலும்
எல்லா நாடுகளுக்கும் அருள் செய்வான் என தமிழ்நாட்டுக்காரனாக
தத்துவப்படுத்தியிருக்கிறது.
திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் அளவுக்கு சிவனுக்கும்
தமிழுக்கும் Tight Relationship கொடுத்துள்ளார்கள். சிவனடியார்களும் நாயன்மார்களும்</b>உதாரணத்துக்கு...

இன்றைய வேதாரணியம்... அன்றைய திருமறைக்காடு... அங்குள்ள சிவன் கோயில்
மணிவாசல் கதவு வேதங்களால் பூஜிக்கப்பட்டு அடைக்கப்பட்டு விட்டது.
என்னென்னமோ பண்ணி பார்த்து விட்டோம். திறக்கவே முடியவில்லை என சிவனடியார்கள்
துன்புற்ற வேளை... திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் மணிக்கதவை திறக்கவேண்டும்
என முடிவு செய்தனர்.
திருநாவுக்கரசர் கோயில் வாசலிலேயே நின்று...

<b>``பண்ணினர் மொழியோள் உமைபங்கரோ
மண்ணினார் வலஞ் செய்ம்மறை காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினை
திண்ணமாக திறந்தருள் செய்ம்மினே...”
என தமிழ்ப்பாடினார். தாமதமானது, மீண்டும்
``அரக்கனை விரலால் அடர்த்திட்டநீர்
இரக்க மொன்றிலீர் எம்பெருமானரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக்காடரே
சரக்க இக்கதவம் திறம்பிம்பினோ</b>...”


இந்த இரண்டாவது தமிழ்ப் பாட்டு கேட்டதும் வேதங்களால் வெகுகாலம் மூடிக்கிடந்த சிவன்
கதவு மணிக்கதவு மெல்லத் திறந்தது. இறைவனுக்கு தமிழ்ப் பாமாலைகள் சாத்தி
வழிபட்டனர். மகிழ்ச்சி பொங்கியது. சரி, இரவாகிவிட்டது’ கதவை அடைத்துவிட்டு நாளை
திறக்கவேண்டும்.
மறுபடியும் திருஞான சம்பந்தர் ‘சதுரமறைதான்...’ என பதிகம் பாட கதவு மூடிக் கொண்டது.
அன்றிலிருந்து தான் கதவு திறந்து சாத்தும் வகையில் மாறியது என்கிறார்கள்.
இந்தக் கதையை நாம் நம்பவேண்டாம் என்றாலும்கூட <b>பல்லாண்டு காலம் வேதக்காரர்களால்
பூட்டப்பட்ட கதவை தமிழ்பாடி திறக்கவேண்டும்’ என்ற கருத்துருவே நமக்கு போதுமே.
வேதம் அடைத்ததை தமிழ் திறக்கும் என்ற கருத்தை நிலை நிறுத்தவே இந்த கதையில் கதவு
கொண்டு வரப்பட்டது.
இப்படியாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எளிய...பலதரப்பினரும் புரிந்து
கொள்ளத்தக்க தமிழ்ப் பாக்களை வளர்த்தது சைவம்.</b>
<b>
?</b>
--
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 09-17-2005, 12:05 AM
[No subject] - by preethi - 09-17-2005, 07:13 AM
[No subject] - by preethi - 09-18-2005, 02:52 AM
[No subject] - by Eelathirumagan - 09-18-2005, 03:07 AM
[No subject] - by preethi - 09-18-2005, 03:08 AM
[No subject] - by preethi - 09-18-2005, 05:00 PM
[No subject] - by preethi - 09-19-2005, 05:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)