09-18-2005, 07:16 PM
அம்பேத்கார் ஆதி திராவிடரை புத்த மதத்தவர் ஆகச் சொன்னார்,அதனையே அவரும் பின் பற்றினர்.ஆனால் இது எந்தளவு தூரத்திற்கு அவர்களின் பிரச்ச்னையை தீர்த்தது என்பது சந்தேகமே,ஆனால் அன்றிருந்த நிலயில் வேறு வழி இல்லாதவிடத்து இது ஒரு தற்காலிகத் தீர்வாக இருந்திருக்கலாம்.இலங்கயிலும் பலர் இந்தக் காரனங்களினாலேயே கிரித்துவராக மாறினர் ஆனால் அவர்கள் சாதியத்தையும் அங்கே காவிச் சென்றனர்.
என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் தீர்வாக அமயக் கூடியது சகோதரத்துவம்,சமத்துவம்,சுதந்திரம் என்பவற்றை முன் நிறுத்தும் மனித நேயக் கோட்பாடே தமிழரின் வாழ்க்கை நியதியாக இருக்க வேண்டும். இதுவே நாம் போராடிப் பெறும் விடுதலை பெறுமதியானதாக இருக்க உதவும்.எமது விடுதலைக்கு நாம் அழித்த விலை பெரியது அதன் பலாபலங்களை அனைவருமே பெற வேண்டும்,அதிலும் முக்கியமாக போராடியவர் பெற வேண்டும்.சாக்கடைக்குள் கிடக்கும் உந்த நிறுவனப் படுத்தப் பட்ட மதங்களோ
சாதிய அடிப் படயில் அமைந்த சமூகமோ உண்மயான விடுதலையை அனை வருக்கும் பெற்றுத்தரா.இன்று பூசி மெழுகப் பட்டுள்ள இந்த முரண்பாடுகள் அங்கான்கே வெளிக் கிளம்புகின்றன, இவை வேரொடு மண்ணோடு அழிக்கப் படும் வரை
கிடைக்கும் இடை வெளிகளுக்குள் வெளிக் கிளம்பும்.சாதியம் எம்மில் அனைவரிலும் இருக்கிறது,அதுவே உண்மை.இதை பூசி மெழுகவதால் அது அற்று விடாது.என்று நாம் அனை வருமே ஒன்றென உனருகிறோமோ அன்றே எமக்கு பூரண விடுதலை.
என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் தீர்வாக அமயக் கூடியது சகோதரத்துவம்,சமத்துவம்,சுதந்திரம் என்பவற்றை முன் நிறுத்தும் மனித நேயக் கோட்பாடே தமிழரின் வாழ்க்கை நியதியாக இருக்க வேண்டும். இதுவே நாம் போராடிப் பெறும் விடுதலை பெறுமதியானதாக இருக்க உதவும்.எமது விடுதலைக்கு நாம் அழித்த விலை பெரியது அதன் பலாபலங்களை அனைவருமே பெற வேண்டும்,அதிலும் முக்கியமாக போராடியவர் பெற வேண்டும்.சாக்கடைக்குள் கிடக்கும் உந்த நிறுவனப் படுத்தப் பட்ட மதங்களோ
சாதிய அடிப் படயில் அமைந்த சமூகமோ உண்மயான விடுதலையை அனை வருக்கும் பெற்றுத்தரா.இன்று பூசி மெழுகப் பட்டுள்ள இந்த முரண்பாடுகள் அங்கான்கே வெளிக் கிளம்புகின்றன, இவை வேரொடு மண்ணோடு அழிக்கப் படும் வரை
கிடைக்கும் இடை வெளிகளுக்குள் வெளிக் கிளம்பும்.சாதியம் எம்மில் அனைவரிலும் இருக்கிறது,அதுவே உண்மை.இதை பூசி மெழுகவதால் அது அற்று விடாது.என்று நாம் அனை வருமே ஒன்றென உனருகிறோமோ அன்றே எமக்கு பூரண விடுதலை.

