09-18-2005, 03:08 AM
தொண்டரடிப் பொடியாழ்வாரின் தமிழ் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் பத்தில்... முதல் மற்றும் கடைசி பாடல்களை எடுத்துக் காட்டினேன்.என்ன வர்ணனைகள்?... என்ன எதுகை மோனைகள்?... எவ்வளவு இனிமை வழிகிறது!"<b>கொழுங்கொடி முல்லையின் கொழுமலர்' </b>என்ற இரண்டாவது பாடல், <b>"சுடர் ஒளி பறந்தன சூழ்திசை எல்லாம்' </b>என்ற மூன்றாவது பாடல், <b>"மேட்டு இள மேதிகள்' </b>என்ற 4-ஆம் பாடல், <b>"புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்'</b> என்ற ஐந்தாம் அருளிச் செயல் <b>"இரவியர் மணி நெடுந் தேரோடும்' </b>என்ற ஆறாவது பாசுரம்."<b>அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள்' </b>என ஆரம்பிக்கும் ஏழாவது பாட்டு, <b>வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க... </b>-என்ற எட்டாவது பாட்டு... <b>ஏதம் இல் தண்ணுமை எக்கும் மத்தளி... - </b>என்று ஒன்பதாவது பாசுரம்...தொண்டரடிப் பொடியாழ்வாரின் இந்த பத்து பாடல்களும்...
<b>இன்று எங்கும் ஒலிக்கிற சுப்ரபாதப் பாடலுக்கு 600 வருடங்கள் முன்னரே ரங்கனை எழுப்பிய பாடல்கள்.சுப்ரபாதத்தில் இன்னொரு "லாஜிக்'கும் இருக்கிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக்கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா?... இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக்கிறார் இவரை எழுப்புவது சரியாக இருக்குமா? படுத்துக் கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் அண்ணா.ஆனால்... நாமோ logic இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம்.</b>
<b>ஆனால்... மறுபடியும் நான் அழுத்திச் சொல்வேன். இதே பொருளை 600 ஆண்டுகள் முன்கூட்டியே சொன்ன தமிழை தள்ளி வைத்து விட்டார்களே. இன்றும் கோயில்களில் தினசரி சேவா காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி ஒலிக்கிறது. ஆனாலும், சுப்ரபாதத்தை போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா?...சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். தமிழ்தான் நமக்கு மட்டுமல்ல அரங்கனுக்கும் நேசபாஷை என்பதை இன்னொரு ஆழ்வாரின் வாழ்க்கையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.</b>
அவர் திருப்பாணாழ்வார்... சோழ நாட்டிலே உறையூர் என்ற திருவூரில் பாணர் வம்சத்தில் பிறந்தவர். பாணர்கள் என்றால் "பாண்' என்னும் இசைக்கருவியை வைத்துக் கொண்டு மன்னர்களைப் பாடி பரிசுப் பொருள்களை பெற்று ஜீவனம் நடத்துபவர்கள்.ஆனால்... நமது பாணரோ... திருவரங்கத்து பெருமாளையே நினைத்துப் பாடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் காவேரி சூழ்ந்த திருவரங்கத்தில் இருக்கும் ரங்கநாதனை தனது பாண் இசைக்கருவி மூலம் "டிங்கு டிங்கு டிங் டிங்...' என இசைத்துக் கொண்டு பாடியபடி இருந்தார்.
<b>ஆனால்... இவரைப் பார்த்த உயர் ஜாதியினர்களோ..."நீ தாழ்ந்த சாதிப்பயல் நீ எப்படியடா திருவரங்கத்துக்குள் நுழைய முடியும்... போடா' என துரத்தியடித்தார்கள்.பாணரோ... நான் பெருமாளை பாடித்தான் தீருவேன் என்று செந்தமிழில் ரங்கனை உருகி ராகமிசைத்துக் கொண்டிருந்தார்</b>.
இவரது தமிழிசையை... ரங்கனின் உயர்ஜாதி பக்தர்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் விரட்டியடிக்க... காவேரிக் கரையிலேயே நின்று கொண்டிருந்த பாணர் வாழ்வில் ஒரு அதிசயம் நடந்தது.காவேரிக் கரையில் தனிமையில் நின்று அரங்கனை பாடிக் கொண்டிருந்த பாணர் முன்பு... ஒரு வைதீகர் ஆச்சாரமான வைதீகர் நின்றார்.எங்களை மன்னிப்பீர் பாணரே...
<b>உங்களை இதுநாள் வரை திருவரங்கத்துள் அனுமதிக்காமல்... அரங்கனை தரிசிக்க விடாமல் பாவம் செய்தோம். உங்கள் தமிழை நாங்கள் மறுதலித்தோம். ஆனால்... பகவான் அரங்கநாதர் உங்கள் தமிழுக்காக தவம் இருக்கிறார்</b>.
உங்களது இனிய பாடல்களை அரங்கன் அவதானித்துக் கொண்டே இருக்கிறார். என்னை அழைத்து, "நீ போய் நமக்கு அந்தரங்கரான பாண் பெருமாளை உம்முடைய தோளிலே தூக்கிக் கொண்டு வா... அவரை ஒதுக்கி வைக்க நினைக்காதீர் உடனே செல்' என கேட்டுக் கொண்டார்.வாருங்கள் என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களை சுமந்து அரங்கனிடத்தில் இறக்கி விடுகிறேன்'' என்று பாணரை பார்த்து பணிவுடன் சொன்னார் அரங்கன் அனுப்பிய லோகசாரங்கர்.
<b>பாணர் அதாவது திருப்பாணாழ்வார் லோகசாரங்கர் தோளில் எறி... திருவரங்கத்தை அடைய...அங்கே திருப்பாணாழ்வாரை பார்த்த அரங்கன்... அவருக்கு காட்சி தந்து இப்போது என் அருகில் தமிழ் பாடுங்கள் பாணாழ்வாரே...'' என்று கேட்கிறார்.இந்த காட்சியை பார்த்து அனுபவித்து அமலனாதிபிரான் என பத்து பாசுரங்களை (927-936) பாடினார் திருப்பாணாழ்வார்.</b>..<span style='font-size:25pt;line-height:100%'><b>இப்போது சொல்லுங்கள் தமிழ் நீச பாஷையா?... இறைவனின் நேச பாஷையா?...(</b></span>தொடரும்)
<b>இன்று எங்கும் ஒலிக்கிற சுப்ரபாதப் பாடலுக்கு 600 வருடங்கள் முன்னரே ரங்கனை எழுப்பிய பாடல்கள்.சுப்ரபாதத்தில் இன்னொரு "லாஜிக்'கும் இருக்கிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக்கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா?... இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக்கிறார் இவரை எழுப்புவது சரியாக இருக்குமா? படுத்துக் கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் அண்ணா.ஆனால்... நாமோ logic இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம்.</b>
<b>ஆனால்... மறுபடியும் நான் அழுத்திச் சொல்வேன். இதே பொருளை 600 ஆண்டுகள் முன்கூட்டியே சொன்ன தமிழை தள்ளி வைத்து விட்டார்களே. இன்றும் கோயில்களில் தினசரி சேவா காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி ஒலிக்கிறது. ஆனாலும், சுப்ரபாதத்தை போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா?...சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். தமிழ்தான் நமக்கு மட்டுமல்ல அரங்கனுக்கும் நேசபாஷை என்பதை இன்னொரு ஆழ்வாரின் வாழ்க்கையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.</b>
அவர் திருப்பாணாழ்வார்... சோழ நாட்டிலே உறையூர் என்ற திருவூரில் பாணர் வம்சத்தில் பிறந்தவர். பாணர்கள் என்றால் "பாண்' என்னும் இசைக்கருவியை வைத்துக் கொண்டு மன்னர்களைப் பாடி பரிசுப் பொருள்களை பெற்று ஜீவனம் நடத்துபவர்கள்.ஆனால்... நமது பாணரோ... திருவரங்கத்து பெருமாளையே நினைத்துப் பாடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் காவேரி சூழ்ந்த திருவரங்கத்தில் இருக்கும் ரங்கநாதனை தனது பாண் இசைக்கருவி மூலம் "டிங்கு டிங்கு டிங் டிங்...' என இசைத்துக் கொண்டு பாடியபடி இருந்தார்.
<b>ஆனால்... இவரைப் பார்த்த உயர் ஜாதியினர்களோ..."நீ தாழ்ந்த சாதிப்பயல் நீ எப்படியடா திருவரங்கத்துக்குள் நுழைய முடியும்... போடா' என துரத்தியடித்தார்கள்.பாணரோ... நான் பெருமாளை பாடித்தான் தீருவேன் என்று செந்தமிழில் ரங்கனை உருகி ராகமிசைத்துக் கொண்டிருந்தார்</b>.
இவரது தமிழிசையை... ரங்கனின் உயர்ஜாதி பக்தர்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் விரட்டியடிக்க... காவேரிக் கரையிலேயே நின்று கொண்டிருந்த பாணர் வாழ்வில் ஒரு அதிசயம் நடந்தது.காவேரிக் கரையில் தனிமையில் நின்று அரங்கனை பாடிக் கொண்டிருந்த பாணர் முன்பு... ஒரு வைதீகர் ஆச்சாரமான வைதீகர் நின்றார்.எங்களை மன்னிப்பீர் பாணரே...
<b>உங்களை இதுநாள் வரை திருவரங்கத்துள் அனுமதிக்காமல்... அரங்கனை தரிசிக்க விடாமல் பாவம் செய்தோம். உங்கள் தமிழை நாங்கள் மறுதலித்தோம். ஆனால்... பகவான் அரங்கநாதர் உங்கள் தமிழுக்காக தவம் இருக்கிறார்</b>.
உங்களது இனிய பாடல்களை அரங்கன் அவதானித்துக் கொண்டே இருக்கிறார். என்னை அழைத்து, "நீ போய் நமக்கு அந்தரங்கரான பாண் பெருமாளை உம்முடைய தோளிலே தூக்கிக் கொண்டு வா... அவரை ஒதுக்கி வைக்க நினைக்காதீர் உடனே செல்' என கேட்டுக் கொண்டார்.வாருங்கள் என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களை சுமந்து அரங்கனிடத்தில் இறக்கி விடுகிறேன்'' என்று பாணரை பார்த்து பணிவுடன் சொன்னார் அரங்கன் அனுப்பிய லோகசாரங்கர்.
<b>பாணர் அதாவது திருப்பாணாழ்வார் லோகசாரங்கர் தோளில் எறி... திருவரங்கத்தை அடைய...அங்கே திருப்பாணாழ்வாரை பார்த்த அரங்கன்... அவருக்கு காட்சி தந்து இப்போது என் அருகில் தமிழ் பாடுங்கள் பாணாழ்வாரே...'' என்று கேட்கிறார்.இந்த காட்சியை பார்த்து அனுபவித்து அமலனாதிபிரான் என பத்து பாசுரங்களை (927-936) பாடினார் திருப்பாணாழ்வார்.</b>..<span style='font-size:25pt;line-height:100%'><b>இப்போது சொல்லுங்கள் தமிழ் நீச பாஷையா?... இறைவனின் நேச பாஷையா?...(</b></span>தொடரும்)

