11-07-2003, 07:00 PM
வரதட்சனை
------------
வரதட்சனை என்பது பெருகிவரும் ஒரு நோயாகிவிட்டது. ஏழைகளையும் அது விட்டுவைப்பதில்லை பணக்காரர்களையும் அது சும்மாவிடுவதில்லை. இது முன்பே தொற்றிக்கொண்டிருந்தாலும் திருமணம் என்று பேச்செடுக்கும் போதுதான் வெளியே வந்து தன் வேலையை ஆரம்பிக்கிறது. இதில் பெண்களைப்பெற்றவர்கள் தான் பாதிப்பும் வேதனையும் அடைகிறார்கள். அவர்களுக்கு தான் நோயின் வலி தெரிகிறது. ஆண்பிள்ளை மட்டும் பெற்றிருந்தால் அவர்கள் விதிவிலக்கு, நோயின் வலி இவர்களுக்கு தெரிவதே இல்லை.
இந்நோய் பலவகையில் பரவுகிறது ஒன்று பரம்பரைமுறையில். மாமாவிற்கு இவ்வளவு வாங்கினோம், சித்தப்பாவிற்கு இவ்வளவு வாங்கினோம், அதைவிடபலமடங்கு அண்ணாவிற்கு வாங்கினோம், எனவே உனக்கு கட்டாயம் அதைவிட அதிகம் வாங்க வேண்டும் என பரம்பரைபரம்பரையாக தொடர்ந்து வருகிறது. போகப்போக அதன் தாக்கமும் அதிகரிக்கிறது.
சில நேரங்களில் இது தொற்று நோயாக வேகமாக பரவி அதிகம் பேரை தாக்குகிறது. திருமணத்திற்கு செல்பவர்களில் பலர் பெண்ணைப்பெற்றவரிடம் மாப்பிள்ளை என்ன வேலை எனகேட்டு தெரிந்து கொள்கின்றனர். அடுத்து எவ்வளவு கொடுத்தீர்கள் என்று கேட்டு மனதில் வைத்துக்கொள்கின்றனர். பின் தமது குடும்ப ஆண்பிள்ளைகளுக்கு திருமணம் என்றதும் அதைவிட பெரிய அளவில் வேண்டிவிட வேண்டும் இல்லையேல் அவன் படித்த படிப்பிற்கு என்ன மரியாதை என்றும் எண்ணுகின்றனர். இந்த மாதிரியான நோய் திருமண சீசன்களில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம்.
சில பெண்ணைப்பெற்றவர்களே இந்த நோய்க்குக் காரணம் ஆகி விடுகின்றனர். அள்ளிக்கொடுத்தால் பொல்லாத மாப்பிள்ளையையும் நல்லவனாகிவிடுவான் என எண்ணுகின்றனர். அத்துடன் மாப்பிளளையை தங்கள் பிடியில் வைத்துக்கொள்ளலாம் என எண்ணுகின்றனர். இது தானேநோயின் கிருமிகளை உடலில் ஊசிமூலம் எற்றிக்கொள்வது போல.
ஆண்கள் நல்லகொள்கை உள்ளவர்களாக இருந்தால் படிப்படியாக இந்நோயை அழித்துவிடலாம். அவர்களின் பெற்றோர்கள் இந்நோயில் பாதிக்கப்பட்டு இருந்தால் திருமணத்தை தள்ளிவைப்பதன் மூலம் பெண்ணைப்பெற்றவர்களைக் காப்பாற்றி மானத்துடன் வாழலாம்.
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்.
------------
வரதட்சனை என்பது பெருகிவரும் ஒரு நோயாகிவிட்டது. ஏழைகளையும் அது விட்டுவைப்பதில்லை பணக்காரர்களையும் அது சும்மாவிடுவதில்லை. இது முன்பே தொற்றிக்கொண்டிருந்தாலும் திருமணம் என்று பேச்செடுக்கும் போதுதான் வெளியே வந்து தன் வேலையை ஆரம்பிக்கிறது. இதில் பெண்களைப்பெற்றவர்கள் தான் பாதிப்பும் வேதனையும் அடைகிறார்கள். அவர்களுக்கு தான் நோயின் வலி தெரிகிறது. ஆண்பிள்ளை மட்டும் பெற்றிருந்தால் அவர்கள் விதிவிலக்கு, நோயின் வலி இவர்களுக்கு தெரிவதே இல்லை.
இந்நோய் பலவகையில் பரவுகிறது ஒன்று பரம்பரைமுறையில். மாமாவிற்கு இவ்வளவு வாங்கினோம், சித்தப்பாவிற்கு இவ்வளவு வாங்கினோம், அதைவிடபலமடங்கு அண்ணாவிற்கு வாங்கினோம், எனவே உனக்கு கட்டாயம் அதைவிட அதிகம் வாங்க வேண்டும் என பரம்பரைபரம்பரையாக தொடர்ந்து வருகிறது. போகப்போக அதன் தாக்கமும் அதிகரிக்கிறது.
சில நேரங்களில் இது தொற்று நோயாக வேகமாக பரவி அதிகம் பேரை தாக்குகிறது. திருமணத்திற்கு செல்பவர்களில் பலர் பெண்ணைப்பெற்றவரிடம் மாப்பிள்ளை என்ன வேலை எனகேட்டு தெரிந்து கொள்கின்றனர். அடுத்து எவ்வளவு கொடுத்தீர்கள் என்று கேட்டு மனதில் வைத்துக்கொள்கின்றனர். பின் தமது குடும்ப ஆண்பிள்ளைகளுக்கு திருமணம் என்றதும் அதைவிட பெரிய அளவில் வேண்டிவிட வேண்டும் இல்லையேல் அவன் படித்த படிப்பிற்கு என்ன மரியாதை என்றும் எண்ணுகின்றனர். இந்த மாதிரியான நோய் திருமண சீசன்களில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம்.
சில பெண்ணைப்பெற்றவர்களே இந்த நோய்க்குக் காரணம் ஆகி விடுகின்றனர். அள்ளிக்கொடுத்தால் பொல்லாத மாப்பிள்ளையையும் நல்லவனாகிவிடுவான் என எண்ணுகின்றனர். அத்துடன் மாப்பிளளையை தங்கள் பிடியில் வைத்துக்கொள்ளலாம் என எண்ணுகின்றனர். இது தானேநோயின் கிருமிகளை உடலில் ஊசிமூலம் எற்றிக்கொள்வது போல.
ஆண்கள் நல்லகொள்கை உள்ளவர்களாக இருந்தால் படிப்படியாக இந்நோயை அழித்துவிடலாம். அவர்களின் பெற்றோர்கள் இந்நோயில் பாதிக்கப்பட்டு இருந்தால் திருமணத்தை தள்ளிவைப்பதன் மூலம் பெண்ணைப்பெற்றவர்களைக் காப்பாற்றி மானத்துடன் வாழலாம்.
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்.

