09-16-2005, 06:30 PM
எமது சமூகத்தை (தாயகத்திலும் புலத்திலும்) கலாச்சாரம், பண்பாடு, சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, சம்பிரதாயங்களை சடங்குகளை பின்பற்றுபவர்களை பிரயோகிப்பவர்களை பயனடைபவர்களை பின்வரும் குழுக்களாக பிரிக்கலாமா?
-1- கலாச்சாரம், சமயம் என்பவற்றின் பெரும்பாலான விடயங்களை முழு நம்பிக்கையோடும் இதயசுத்தியோடும் பின்பற்றுபவர்கள்.
-2- நம்பிக்கை பெரியளவில் இல்லை ஆனால் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் சடங்குகள் சமபிரதாயங்கள் நடைமுறைகளை கேள்விகேட்டு சமூக நீரோட்டத்தில் எதிர் நீச்சல் போடமுடியாதவர்கள்.
-3- நம்பிக்கையற்றவர்கள் ஆனால் சுயநலன்களிற்காக சமுதாயத்தில் தமது தற்போதைய இருப்பை (உயர்-நிலையை அந்தஸ்த்தை) இழக்கவேண்டும் என்பதற்காக நம்பிக்கையுள்ளவர்களாக நடிப்பவர்கள். அதை மற்றவர்களிடம் எதிர்பார்பவர்கள் மாற்றங்களை மறைமுகமாக எதிர்பவர்கள்.
-4- நம்பிக்கையற்றவர்கள் அதை வெளிப்படையாக தமது வாழ்வு முறையில் முன்னுதாரணமாக வெளிப்படுத்திக் கொண்டு மாற்றங்களிற்காக குரல் கொடுப்பவர்கள்.
-5- சொந்த வாழ்வை முன்னுதாரணமாக காட்டாமல் வெறுமனே மாற்றங்களிற்காக குரல் கொடுப்பவர்கள்.
-6- மாற்றங்களின் பெயரால் சமுதயாத்தில் தமது இருப்பையும் பிடியையும் உறுதி செய்ய முனைபவர்கள். அதாவது மாற்றங்களின் பெயரால் தம்மை புதிய அதிகாரவர்க்கமாக்க முனைபவர்கள். தமது இயலாமையை மாற்றங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முனைபவர்கள்.
இதைவிட சமய-மத விடயத்தில் மேலும் பாகுபடுத்திப் பாக்க முயன்றால்,
-A- சமய-மத நம்பிக்கை உள்ளவர்கள், தமது நம்பிக்கை தான் உண்மையானது மற்றயது எல்லாம் போலியானது என எண்ணுபவர்கள்.
-B- கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் (எமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளதாக நம்புபவர்கள் ஆனால் அன்றாட வாழ்கையின் தேவைகளையும் பிரச்சனைகளையும் கடவுளின் பெயரால் வியாகியானப்படுத்த முயலாமல் வாழ முனைபவர்கள்).
-C- முற்று முழு தாக கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் (நாத்திகர்).
இப்படி குழுக்களாக பார்க்கும் போது எமது சமுதாயாத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர ஒவ்வொரு தரப்பினரையும் வித்தியாசமாக அணுகவேண்டும் எதிர்கொள்ளவேண்டும் என்பது புலனாகிறது.
உங்கள் கருத்துக்களை செப்புங்கோ
-1- கலாச்சாரம், சமயம் என்பவற்றின் பெரும்பாலான விடயங்களை முழு நம்பிக்கையோடும் இதயசுத்தியோடும் பின்பற்றுபவர்கள்.
-2- நம்பிக்கை பெரியளவில் இல்லை ஆனால் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் சடங்குகள் சமபிரதாயங்கள் நடைமுறைகளை கேள்விகேட்டு சமூக நீரோட்டத்தில் எதிர் நீச்சல் போடமுடியாதவர்கள்.
-3- நம்பிக்கையற்றவர்கள் ஆனால் சுயநலன்களிற்காக சமுதாயத்தில் தமது தற்போதைய இருப்பை (உயர்-நிலையை அந்தஸ்த்தை) இழக்கவேண்டும் என்பதற்காக நம்பிக்கையுள்ளவர்களாக நடிப்பவர்கள். அதை மற்றவர்களிடம் எதிர்பார்பவர்கள் மாற்றங்களை மறைமுகமாக எதிர்பவர்கள்.
-4- நம்பிக்கையற்றவர்கள் அதை வெளிப்படையாக தமது வாழ்வு முறையில் முன்னுதாரணமாக வெளிப்படுத்திக் கொண்டு மாற்றங்களிற்காக குரல் கொடுப்பவர்கள்.
-5- சொந்த வாழ்வை முன்னுதாரணமாக காட்டாமல் வெறுமனே மாற்றங்களிற்காக குரல் கொடுப்பவர்கள்.
-6- மாற்றங்களின் பெயரால் சமுதயாத்தில் தமது இருப்பையும் பிடியையும் உறுதி செய்ய முனைபவர்கள். அதாவது மாற்றங்களின் பெயரால் தம்மை புதிய அதிகாரவர்க்கமாக்க முனைபவர்கள். தமது இயலாமையை மாற்றங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முனைபவர்கள்.
இதைவிட சமய-மத விடயத்தில் மேலும் பாகுபடுத்திப் பாக்க முயன்றால்,
-A- சமய-மத நம்பிக்கை உள்ளவர்கள், தமது நம்பிக்கை தான் உண்மையானது மற்றயது எல்லாம் போலியானது என எண்ணுபவர்கள்.
-B- கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் (எமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளதாக நம்புபவர்கள் ஆனால் அன்றாட வாழ்கையின் தேவைகளையும் பிரச்சனைகளையும் கடவுளின் பெயரால் வியாகியானப்படுத்த முயலாமல் வாழ முனைபவர்கள்).
-C- முற்று முழு தாக கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் (நாத்திகர்).
இப்படி குழுக்களாக பார்க்கும் போது எமது சமுதாயாத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர ஒவ்வொரு தரப்பினரையும் வித்தியாசமாக அணுகவேண்டும் எதிர்கொள்ளவேண்டும் என்பது புலனாகிறது.
உங்கள் கருத்துக்களை செப்புங்கோ

