09-16-2005, 11:28 AM
narathar Wrote:பெரியவர் ஒருவர் முன் நிலையில் மண விழா நடக்கலாம்,அதற்காக ஒரு சாதியில் பிறந்தவர் என்பதற்காக அவரைப் பெரியவர் என்பதா?இது சாதியம் ஆகாதோ?எதைக் கழிப்பது எதை விடுவது என்று தீர்மானிக்க என்ன நடக்குது என்று முதலில் தெரிய வேண்டாமா?எதோ எல்லாரும் செய்கினம் நாங்களும் செய்வம் எண்டா எப்படி தேவயில்லாததை விடுகிறது?
சமூக விழிப் புணர்வை உண்டாக்காமல் தனித்து எவ்வாறு ஒரு சமூக நிகழ்வைச் செய்வது?
நேற்று யாழில் ஒரு 'பெரியவருக்கு' எல்லாளன் படையால் ஏன் சூடு விழுந்தது தெரியுமோ? அது தெரின்ச்சால் ஒரு வரும் பிறப்பால் பெரியவர் இல்லை என்பது விளங்கும்.
சுடுவது சம்பந்தப்பட்டவர்களுக்கே பிடிக்காத விடயம்... அவர்களே இதைச் சொல்லி இருக்கிறார்கள்..இதனால் தாங்கள் பகைத்துக்கொண்ட மக்களின் எண்ணிக்கையையும் அவர்கள் கணக்கு வைத்துத்தான் இருக்கிறார்கள்...! சுடுவது இலகு...அதுதரும் பாதிப்பு என்பது மிகக் கடினமானதாகவும் மாறிவிடும்...!
மற்றையது சுடப்பட்டவர் இன்ன பிரிவினன் என்பதற்கானதாக இருக்காது...இன்ன குற்றத்துக்கானதாகத்தான் இருக்கும்...! இதற்குள் சமூகப்பிரிவினை வளர்த்தல் நல்லது அல்ல...! பிறகு அதே துப்பாக்கிகள் உங்களையும் குறி வைக்கலாம்..எதற்கும் இறுதியாக வந்த எல்லாளன் படை எச்சரிக்கையை வாசிங்கோ...!
ஒரு புரோகிதரை... ஒரு சமய நெறியாளனை...சபைக்கு நடுநிலையாளனாக எடுத்துக் கொள்வதால் உங்களுக்குள் என்ன தீமை நிகழ்ந்துவிடப் போகிறது...அதுவும் திருமணச் சபையில்...??!
அதை வருகை தரும் அத்தனை மனிதருக்குள் ஒரு சக மனிதனுக்கு வழங்கும் கெளரவப்படுத்தலாக நோக்குங்களன்..ஏன் அதற்குள் பிரிவினை வைக்கிறீர்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

