09-16-2005, 11:14 AM
Birundan Wrote:kuruvikal Wrote:Birundan Wrote:kuruvikal Wrote:[quote=kurukaalapoovan]தீண்டாதே என்னை தீண்டாதே சுற்று விழி பார்வை... என்று ஒரு திரைப்படபாட்டு இருக்கு.
தீண்டாய் என்னை தீண்டாய்... என்றும் இருக்கு ஒரு திரைப்படப் பாட்டு.
இவை இரண்டுக்கும் சாதி அடிப்படையில் பேசப்படுகிற தீண்டாமைக்கும் என்ன சம்பந்தம்? :?
இது எப்படி கவிஞனின் கற்பனையோ...அதேபோல்...அது நாவலன் எனும் தனி மனிதனின் சித்தாந்தம்..அதையேன் எதிர்கிறோம் என்று சொல்லி நிகழ்காலத்துக்குள்ளும் காவுகிறீர்கள்...இப்போ...இங்கு சிலர் சொல்லும் தீண்டாமையை..சாதிய அடிப்படையில் அமைந்ததை...சமூகத்துள் நிராகரிக்க வைத்து...சில தசாப்தங்கள் கடந்தாயிற்று...இனியும் ஏன் அதன் பேச்சுத் தொடர்வான்...???! :roll:
தீண்டாமையை காவ யார் விரும்பியது, ஆனால் தீண்டாமை இன்று எம் சமுதாயத்தில் இல்லை என்று கூறமுடியுமா? அப்படி என்றால் உண்மையை ஏற்க மறுக்கிறோம் என்று அர்த்தம் படாதா?
kirubans Wrote:பாம்பு மனிதரைத் தீண்டுவதும், மனிதன் (ஆண்) மங்கையைத் தீண்டுவதும் ஒன்றாகுமா?
முதலாவது மரணத்திலும், இரண்டாவது மகிழ்விலும் முடியும்.
தீண்டுதல், தீண்டாமை என்பன என்ன சந்தர்ப்பத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை முதலில் புரிய வேண்டும்.
பிற சாதிகளுடன் கலந்து உறவாடாமல் இருப்பது (வீடுகளுக்குப் போகாமல் இருப்பது, போனாலும் உணவைத் தவிர்ப்பது) போன்றன தீண்டாமையின் அம்சங்கள்.
இப்படித்தான் தீண்டாமைக்கு...சாதியச் சிந்தனை உள்ளவர்களால்...சாதிய அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்படுகிறது என்பது சாதாரணமா சாதிய விளைவுகளை சந்தித்த எல்லோருக்கும் தெரியும்... ஆனால் தீண்டாமைக்கு பல வேறு அர்த்தமும் இருக்கு என்பதையும் காட்டுதல் சாதியத் தேவை இல்லாதோருக்கு உதவுமெல்லா...! அதுக்கு இடமளிக்கமாட்டேன் என்றியளே..உடன தீண்டாமைக்கு உங்கட வரைவிலக்கணம் கொடுத்திட்டியள்...! பிறகு திட்டியும் தீர்க்கிறியள்...உங்கட நிலைதான் பரிதாபமா இருக்கு...!
இப்போ..சாதி என்று பேசினால் கடைப்பிடித்தால்தான்...அது சார்பாக இருக்கட்டும்..எதிர்ப்பாக இருக்கட்டும்... புதிசா வாற குழந்தைக்கு...அதென்ன சாதி என்ற கேள்வி முளைக்கும்...அதைப் பேசாமல் தவிர்த்தால்...அது வர சந்தர்ப்பம் குறைவு...குறிப்பா புலத்தில் வாழும் குழந்தைகளிடம்...தாயகத்தில் வாழும் குழந்தைகளிடம்..இந்த தீண்டாமை ...(அது பெளதீகத் தொடுகை ஆகட்டும்...மன உணர்வு ரீதியானதாகட்டும்...நடத்தையியல் ரீதியானதாகட்டும்)... என்பது...கெட்டதை தொடாதே என்பதுதான்... மனிதரை தீண்டத் தவிர் என்பதல்ல...! அதை பெரிய மனிதர்கள் சிலரும் தெரிந்து கொள்வது கட்டாயமாகிட்டுது இப்ப...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவியாரே நீங்கள் தீண்டாமை(சாதி வெறி) குறைய வேண்டும் என்கிறீர்கள், நாங்கள் அது அழியவேண்டும் என்கிறோம் இதில் எது எமது சமுதாயத்துக்கு நன்மை பயக்கும்.
ஒரு சமூக நடைமுறையை எடுத்த எடுப்பில் அழித்ததாக வேண்டும் என்றால் ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிக்க வேண்டும்...அது சாத்தியமில்லாதது..! காலப்போக்கில் ஒன்றைக் குறைத்து இல்லாமல் செய்வதுதான் சாத்தியம்...!
குறிப்பாக இன்றைய வளர்ந்தோருக்குள் சாதி வெறியைக் குறைத்தால் அல்லது அகற்றினால்..நாளைய தலைமுறைக்குள் அது அழியும் என்று எதிர்பார்க்கலாம்... அதைவிடுத்து குறைந்ததுக்குள் குற்றுயிராய்க் கிடப்பதுக்குள் இன்னும் சலசலப்பையும் சண்டையையும் வளர்ப்பதால்...அழிய இருப்பது முளைக்கும் என்பதாகத்தான் தெரிகிறது...! இதற்கு மனங்கள் மாற வேண்டும் அல்லது அறியாமல் இருக்க வேண்டும்...மனிதர்கள் மாற முடியாது...! மனங்கள் மாறியதை அளவிட கருவியில்லை...மனத்துக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது...அதுவரைக்கும் எவரும் என்னவும் பேசலாம்...ஆனால் செய்கை இனங்காட்டும்...! அதையே இங்கு காண்கிறோம்..! நீங்கள் சாதி அழிப்பதாய் வளர்க்கிறீர்கள் என்பதாகவே தென்படுகிறது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

