09-15-2005, 03:24 AM
[quote=sathiri]<span style='font-size:30pt;line-height:100%'>என்னது யுட் ஆறுமுக நாவலர் சாதியை வளர்த்தாரா??? </span>
நீங்கள் எந்த ஆதாரத்தையும் தரத்தேவையில்லை. காரணம் நீங்கள் தாம் வரலாற்றை மாற்ற முற்படுகின்றீர்கள். சாதி தமிழ் மக்கள் மத்தியில் எப்படி வந்தது, எப்படி வளர்கிறது என்பது நன்கு அறியப்பட்ட விடயம். இதில் ஆறுமுகநாவலரின் பங்கு தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆகவே அவர்பற்றிய கட்டுரை பகுதியும், இணைப்பும் கீழே தரப்படுகின்றது.
"சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினர் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். 'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு "யோக்கியர்களல்லாத சாதியர்கள்" என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக்கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால் "உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்" என்றும் "நான்காம் பால பாடம்" எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர்."
ஈழத்தின் சைவ எழு ஞர்யிறு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879) - பெ. சு. மணி -
http://members.tripod.com/kanaga_sritharan...alar_manips.htm
முழக்கம் பத்திரிகையில் கடந்தவாரம் ஆறுமுகநாவலர் பற்றி வாழ்வும் வடுவும் என்ற தலைப்பில் வந்த கட்டுரையும் அவரது சாதிவாதத்தை பற்றியதாக அமைந்திருக்கிறது. அதன் இணைப்பு இதோ:
"ஆறுமுகநாவலர் தான் கட்டிய தமிழ்ப் பள்ளிக்கூடக்
கதவுகளை தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதி
யினருக்கு அடைத்து வைத்தார். அதே போல் சைவக்
கோயில்களின் கதவுகளை பஞ்சமர் என இந்து மதம்
முத்திரை குத்தித்தள்ளி வைத்த மக்களுக்குக்
கெட்டியாகப் புூட்டி வைத்தார்.
தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்ட தீண்டாமையைக்
காரணம் காட்டியே கிறித்துவ பாதிரிமார் இந்துத்
தமிழர்களை சமயம் மாற்றினார்கள். அப்படிச் சமயம்
மாறியவர்களை அவர்கள் பள்ளிக்கூடங்களில் சேர்த்
தார்கள். தேவாலயக் கதவுகளையும் திறந்து
வைத்தார்கள்.
ஆறுமுகநாவலருக்கு தமிழ் மக்களில் ஒரு சாரார் மதம்
மாறுவதற்கான காரணிகள் தெரிந்திருந்தும் தீண்
டாமையை என்ற நோயை ஒழித்து சைவத்தைக்
காப்பாற்ற முன்வரவில்லை. கல்விக் கூடங்களை
தீண்டாதாருக்குத் திறந்து விட்டுத் தமிழை வளர்க்க
நினைக்கவில்லை.
சைவத்தின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்
துக்கும் சாதி அமைப்புப் பெரிய முட்டுக் கட்டையாக,
தடையாக, தடங்கலாக இருந்ததை வைதீக சைவரான
ஆறுமுகநாவலரால் கண்டுகொள்ள முடியவில்லை."
http://www.muzhakkam.com/sep9/articles.pdf
நீங்கள் எந்த ஆதாரத்தையும் தரத்தேவையில்லை. காரணம் நீங்கள் தாம் வரலாற்றை மாற்ற முற்படுகின்றீர்கள். சாதி தமிழ் மக்கள் மத்தியில் எப்படி வந்தது, எப்படி வளர்கிறது என்பது நன்கு அறியப்பட்ட விடயம். இதில் ஆறுமுகநாவலரின் பங்கு தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆகவே அவர்பற்றிய கட்டுரை பகுதியும், இணைப்பும் கீழே தரப்படுகின்றது.
"சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினர் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். 'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு "யோக்கியர்களல்லாத சாதியர்கள்" என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக்கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால் "உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்" என்றும் "நான்காம் பால பாடம்" எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர்."
ஈழத்தின் சைவ எழு ஞர்யிறு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879) - பெ. சு. மணி -
http://members.tripod.com/kanaga_sritharan...alar_manips.htm
முழக்கம் பத்திரிகையில் கடந்தவாரம் ஆறுமுகநாவலர் பற்றி வாழ்வும் வடுவும் என்ற தலைப்பில் வந்த கட்டுரையும் அவரது சாதிவாதத்தை பற்றியதாக அமைந்திருக்கிறது. அதன் இணைப்பு இதோ:
"ஆறுமுகநாவலர் தான் கட்டிய தமிழ்ப் பள்ளிக்கூடக்
கதவுகளை தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதி
யினருக்கு அடைத்து வைத்தார். அதே போல் சைவக்
கோயில்களின் கதவுகளை பஞ்சமர் என இந்து மதம்
முத்திரை குத்தித்தள்ளி வைத்த மக்களுக்குக்
கெட்டியாகப் புூட்டி வைத்தார்.
தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்ட தீண்டாமையைக்
காரணம் காட்டியே கிறித்துவ பாதிரிமார் இந்துத்
தமிழர்களை சமயம் மாற்றினார்கள். அப்படிச் சமயம்
மாறியவர்களை அவர்கள் பள்ளிக்கூடங்களில் சேர்த்
தார்கள். தேவாலயக் கதவுகளையும் திறந்து
வைத்தார்கள்.
ஆறுமுகநாவலருக்கு தமிழ் மக்களில் ஒரு சாரார் மதம்
மாறுவதற்கான காரணிகள் தெரிந்திருந்தும் தீண்
டாமையை என்ற நோயை ஒழித்து சைவத்தைக்
காப்பாற்ற முன்வரவில்லை. கல்விக் கூடங்களை
தீண்டாதாருக்குத் திறந்து விட்டுத் தமிழை வளர்க்க
நினைக்கவில்லை.
சைவத்தின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்
துக்கும் சாதி அமைப்புப் பெரிய முட்டுக் கட்டையாக,
தடையாக, தடங்கலாக இருந்ததை வைதீக சைவரான
ஆறுமுகநாவலரால் கண்டுகொள்ள முடியவில்லை."
http://www.muzhakkam.com/sep9/articles.pdf

