09-14-2005, 07:32 AM
Thiyaham Wrote:மொன்றியல் நகரில் பிரசித்தி பெற்ற தேவாலயம் இது. மலைக்கோவில் என்றும் கூறுவர்கள். இதில் மேலே ஏறுவதற்கு 3 சமாந்தர படிகள் இருப்பதை 2ம் படத்தில் காணலாம். இதில் நடுவில் இருப்பது மரத்தாலான படியாகும். இது முழங்காலால் மேலே ஏறுபவர்கள் பயன்படுத்துவது. நான் இங்கே படப்பிடிப்பிற்காக சென்ற போது நடுவிலே இருக்கும் படியால் மேலே ஏறியவர்கள் எல்லோரும் இலங்கையர்களாகவே இருந்தார்கள். இதில் பரிதாபமான காட்சி என்னவெனில் அவர்களில் சிலபேர் சந்தண பொட்டுடன் காணப்பட்டார்கள்.
இதில் பரிதாபமான காட்சி ஏதும் இல்லை என்று நினைக்கின்றேன். தமிழ் சைவர்கள் தேவாலயத்திற்கும் போவது சகஜமான ஒன்றுதானே. அவர்கள் கோயிலுக்கு சென்று வழிபடும் அதே சமயம் தேவாலயத்திற்கும் செல்கிறார்கள் என்றால் அது நல்ல பண்பு தானே. மற்றய மதத்தை ஒதுக்கி வைக்காமல் அதையும் அரவணைத்து செல்கிறார்களே.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

