09-13-2005, 06:04 PM
Quote:வட்ட நிலவுக்குள்
வாழ்வதென்ன வாளைக் குமரியா..??!
செக்கச் சிவந்த செவ்வாய்க்குள்
சிவப்பு என்ன தோஷமா..??!
வளையங்கள் தாங்கும் சனிக்குள்
சூத்திரம் என்ன சாத்திரமா..??!
அருந்ததிக்குள்
வாழ்வதென்ன ஆகாய நங்கையா...??!
தேடப் போகிறேன்
எட்டாத் தீர்வுகள்..!
நல்ல வரிகள்.
Quote:அக்னிக் குஞ்சாய்
வானில் பறக்கிறேன்
அண்டம் திறந்து
தேடித் தருவேன்
இருளுக்குள் என்ன...??!
விடுதலை..!
இதன் கடைசி மூன்று வரிகளும் பொருள் பொதிந்தவை.
தேடித் தருவேன்
இருளுக்குள் என்ன..?!
என்றும் கொள்ளலாம்,
இருளுக்குள் என்ன
விடுதலை
என்றும் கொள்ளலாம்.
தொடருங்கள்.

