11-05-2003, 06:30 PM
aathipan Wrote:அஜீவன் சொன்னபடி பார்த்தால் பொறி செய்தவரே பொறியில் மாட்டிக்கொண்டார்.சரிதான்.
அவர்களுக்;கு பெரிய இளப்பு இருக்கப்போவதில்லை. நாம் தான் மீண்டும் மீண்டும் பலியாக வேண்டும்.
ஒவ்வொரு தடவை அரசுமாறும் போதும் ஒவ்வொருவர் வந்து. ஒவ்வொருவிதமாக தமிழர்களை அழிப்பர். அரசு மட்டுமா புதிதாக பாதுகாப்பு அமைச்சர்கள் வரும்போதும் புதிதாக இராணுவதளபதிக்கள் வரும் போதும் அழிவது நாங்கள் தான். தென்பகுதி சிங்களவர்களுக்;கு என்ன அவர்களுக்கு எப்போதும் சொகுசு வாழ்கைதான். அவர்களுக்;கு இது ஒரு தெருக்கூத்துப்போல வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள்.
ஆதீபன், தென்பகுதி மக்களும் சமாதானத்தைத்தான் விரும்புகிறார்கள். எவருக்குத்தான் நிம்மதி தேவையில்லை.ஆனால் அரசியல்வாதிகளுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், அவர்களது வெளிநாட்டு வங்கிகளை நிரப்பவும் யுத்தமொன்று தேவை. அதற்காக வரும் ஆயுதக் கொள்வனவின் போது வந்த கமிசன் பணத்தால் லண்டனில் பல கட்டிடங்களும், Hotelகளும் சந்திரிகாவின் மாமனார் ரத்வத்தைக்கு உண்டு.

