09-09-2005, 09:38 AM
ANUMANTHAN Wrote:ரசிகையின் குறிப்பிலிருநது ஒரு வரி!
மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
இது எந்த மருத்துவரின் கூற்று!
இங்கு எந்த வைத்தியரிடம் போனாலும் அதிகம் யோசிக்கிறீர்கள் தேவைஇல்லாமல் யோசிக்காதீர்கள் குறைந்தது எட்டு மணிநேரமாவது தூங்குங்கள் மூளைக்கு ஓய்வுகொடுங்கள் என்று கூறுகிறார்கள்! நாமும் அப்படி ஓய்வெடுத்தால் உண்மையில் சற்று ஆறுதலாகத்தான் உள்ளது!
மனிதனின் மூளைக்கும் பயிற்சி வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் மனிதன்தூங்கும்போதுதான் முளைதூங்குகின்றது (ஓய்வெடுக்கின்றது) அப்படியில்லாமல் மூளைக்கு ஓய்வு கொடுக்காமல் மனிதன் இயந்திரமாக மாறமுடியாது.
மூளைசிந்திக்கும்சக்தி குறையும்போது உடம்பில் அலுப்பு உண்டாகி தானாகவே நித்திரைவருகிறது. அதைநாம் தடுத்து நிறுத்திவிட்டால் மேல்விளைவு (மூளைப்பிசகு) ஏற்படஇடமுண்டு.அப்படி ஏற்பட்டால் பனி மழையிலும் நித்திரை கொள்ளலாம். இவை எனது சொந்த கருத்துக்கள.; இதற்கும் மாற்றுக்கருத்து எழுதலாமே...
ரசிகை நீங்கள் சொல்லும் மூளையின் பகுத்தியைப் பற்றி சொல்லவில்லை.. மூளை மூன்று பிரிவானது அதில் ஒன்றான மூளயம் பகுதியின் ஞாபகப்பகுதியைப் பற்றித்தான் இரசிகை சொன்னவ... பெரும்பாலான வைத்தியைகள் உங்களின் ஞாபக சக்தி பற்றிக்கவலைப்படார்கள் அது அவர்களுக்கு தேவை அற்றது..
ஆனால் மூளயத்தின் ஞாபகப்பகுதியின் நீங்கள் பாவிக்காமல் விடும் பகுதிகளின் செல்கள்(மடிப்புகள்) 23 தொடக்கம் 30 வயது முதல் அழிய ஆரம்பிக்கிறது.. அதனால் தான் மூளையை.. பாதுகாப்பது பற்றி இரசிகை சொன்னவர் சொல்லும் போது மூளயம் என்பதை குறிப்பிடவில்லை அவ்வளவுதான்.. அவ சொன்னது எதுவும் தவறானது அல்ல...
::

