09-07-2005, 09:32 AM
[size=24]<b>சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகள் முற்றாக வெளியேறினர்!! </b>
தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் அரசியல் கடமையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவரும் முழுமையாக இன்று புதன்கிழமை வெளியேறிவிட்டனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று அப்பிரதேசங்களில் நிராயுதபாணிகளான அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிவைத்து தொடர்ந்து படுகொலை செய்து வந்தது சிங்கள இராணுவம். இந்தப் படுகொலைக்கு ஆயுதக் குழுக்களை சிங்கள இராணுவம் பயன்படுத்தியது.
கடந்த ஒருவாரத்தில் தென்தமிழீழத்தில் தமிழீழ அரசியல்துறை பணிமனைகள் மீது குண்டுத்தாக்குதல் நடாத்துவதும் விடுதலைப் புலிகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் தொடர்ச்சியாக சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் ஐந்து விடுதலைப் புலிப் போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் நிராயுதபாணிகளாக உள்ள அரசியல்துறை போராளிகளை கடத்திச் செல்லவும் சிங்கள இராணுவப் புலனாய்வுத்துறையும், ஆயுதக்குழுக்களும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
வட தமிழீழத்திலும் மன்னார், வவுனியா உள்ளிட்ட அரசியல்துறை பணிமனைகள் மீது தொடர்ந்து கைக்குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வந்தன.
மூன்றரை ஆண்டுகால யுத்த நிறுத்த காலத்தில் தென் தமிழீழத்தில் அரசியல் கடமையாற்றி வந்த அரசியல்துறை பொறுப்பாளர்களான கௌசல்யன், பாவா உள்ளிட்ட பலரை விடுதலைப் புலிகள் இழக்க நேரிட்டது.
சில மாதங்களுக்கு முன்பாக இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திற்குள் சென்ற 50 பேர் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடாத்தப்பட்டு ஒரு போராளி படுகாயமடைந்தார். அந்த சம்பவத்தையடுத்து சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விலக்கிக் கொள்ளப்படக் கூடும் என்று கூறப்பட்டது.
இருப்பினும் சிறிலங்கா அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பாதுகாப்பு தொடர்பாக கண்காணிப்புக் குழுவினூடாக பேச்சுகளை நடாத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பாதுகாப்பு அணியை அரசியல்துறை போராளிகளுக்கு பயன்படுத்தினால் யுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் சிங்கள இராணுவம் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து ஆயுதக்குழுக்கள் உதவியுடன் தாக்குதலை நடாத்தி வருகிறது.
இதனிடையே அமைதிப் பேச்சுக்கள் தொடங்கக் கூடும் என்பதற்கான நகர்வுகளை நோர்வே அனுசரணையாளர்கள் மேற்கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பேச்சுக்கு உடனடியாக இணக்கம் தெரிவித்தனர்.
ஆனால் அரசியல் குழப்பங்களில் சிக்கியுள்ள சிறிலங்கா அரச தரப்பு இப்பேச்சுக்கான நகர்வுகளை முன்வைத்து அரசியல் லாபங்களைப் பெறும் வகையில் வழமையான இழுத்தடிப்புகளையே மேற்கொண்டது.
தென்னிலங்கையில் அரசுத் தலைவர் கூத்துகள் தொடங்கிவிட்ட நிலையில் அமைதிப் பேச்சுகள் நடாத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகவே இருந்து வந்தது.
இந்தத் அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு சிங்கள இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளிகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடாத்தி படுகொலை செய்து வந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளை போருக்குச் சீண்டிவிடும் இத்தகைய தாக்குதல்களுக்கும் இழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழீழ தேசியத் தலைமை இம்முடிவை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகளின் தரப்பு தெரிவிக்கிறது.
இதையடுத்து வட, தென் தமிழீழப் பிரதேசங்களில் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் பகுதிகளில் உள்ள தமிழீழ அரசியல்துறை போராளிகள் அனைவரும் வெளியேறி தமிழீழ நிர்வகாப் பகுதிக்கு வந்தடைந்துள்ளனர்.
தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் அரசியல் கடமையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவரும் முழுமையாக இன்று புதன்கிழமை வெளியேறிவிட்டனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று அப்பிரதேசங்களில் நிராயுதபாணிகளான அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிவைத்து தொடர்ந்து படுகொலை செய்து வந்தது சிங்கள இராணுவம். இந்தப் படுகொலைக்கு ஆயுதக் குழுக்களை சிங்கள இராணுவம் பயன்படுத்தியது.
கடந்த ஒருவாரத்தில் தென்தமிழீழத்தில் தமிழீழ அரசியல்துறை பணிமனைகள் மீது குண்டுத்தாக்குதல் நடாத்துவதும் விடுதலைப் புலிகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் தொடர்ச்சியாக சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் ஐந்து விடுதலைப் புலிப் போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் நிராயுதபாணிகளாக உள்ள அரசியல்துறை போராளிகளை கடத்திச் செல்லவும் சிங்கள இராணுவப் புலனாய்வுத்துறையும், ஆயுதக்குழுக்களும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
வட தமிழீழத்திலும் மன்னார், வவுனியா உள்ளிட்ட அரசியல்துறை பணிமனைகள் மீது தொடர்ந்து கைக்குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வந்தன.
மூன்றரை ஆண்டுகால யுத்த நிறுத்த காலத்தில் தென் தமிழீழத்தில் அரசியல் கடமையாற்றி வந்த அரசியல்துறை பொறுப்பாளர்களான கௌசல்யன், பாவா உள்ளிட்ட பலரை விடுதலைப் புலிகள் இழக்க நேரிட்டது.
சில மாதங்களுக்கு முன்பாக இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திற்குள் சென்ற 50 பேர் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடாத்தப்பட்டு ஒரு போராளி படுகாயமடைந்தார். அந்த சம்பவத்தையடுத்து சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விலக்கிக் கொள்ளப்படக் கூடும் என்று கூறப்பட்டது.
இருப்பினும் சிறிலங்கா அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பாதுகாப்பு தொடர்பாக கண்காணிப்புக் குழுவினூடாக பேச்சுகளை நடாத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பாதுகாப்பு அணியை அரசியல்துறை போராளிகளுக்கு பயன்படுத்தினால் யுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் சிங்கள இராணுவம் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து ஆயுதக்குழுக்கள் உதவியுடன் தாக்குதலை நடாத்தி வருகிறது.
இதனிடையே அமைதிப் பேச்சுக்கள் தொடங்கக் கூடும் என்பதற்கான நகர்வுகளை நோர்வே அனுசரணையாளர்கள் மேற்கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பேச்சுக்கு உடனடியாக இணக்கம் தெரிவித்தனர்.
ஆனால் அரசியல் குழப்பங்களில் சிக்கியுள்ள சிறிலங்கா அரச தரப்பு இப்பேச்சுக்கான நகர்வுகளை முன்வைத்து அரசியல் லாபங்களைப் பெறும் வகையில் வழமையான இழுத்தடிப்புகளையே மேற்கொண்டது.
தென்னிலங்கையில் அரசுத் தலைவர் கூத்துகள் தொடங்கிவிட்ட நிலையில் அமைதிப் பேச்சுகள் நடாத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகவே இருந்து வந்தது.
இந்தத் அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு சிங்கள இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளிகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடாத்தி படுகொலை செய்து வந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளை போருக்குச் சீண்டிவிடும் இத்தகைய தாக்குதல்களுக்கும் இழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழீழ தேசியத் தலைமை இம்முடிவை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகளின் தரப்பு தெரிவிக்கிறது.
இதையடுத்து வட, தென் தமிழீழப் பிரதேசங்களில் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் பகுதிகளில் உள்ள தமிழீழ அரசியல்துறை போராளிகள் அனைவரும் வெளியேறி தமிழீழ நிர்வகாப் பகுதிக்கு வந்தடைந்துள்ளனர்.
----------

