09-05-2005, 10:19 PM
KULAKADDAN Wrote:பிராமணர்கள்,
இந்தியாவில் இருந்த களச்சூழ்நிலை வேறு,இலங்கையில் உள்ள களச்சூழ்நிலை வேறு. இந்தியாவில் பிராமணர்களுக்கு எதிரான இயக்கம் போல் செயற்படவேண்டிய நிலையில் ஈழத்தில் இல்லை. ஈழத்தில் பெரும் பாலும் போராட்டத்துக்கு ஆதரவாகவே அவர்கள் இருக்கிறனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிராமணரை பிரித்து அவர்களை தாக்கி எழுதி அவர்களை எம்மில் இருந்து அன்னியப்படுத்தும் வகையில் செயற்படுவது எமது நாட்டிற்கு நல்லதா என யோசிக்க வேண்டும். போராளியான பிராமணர்களும் இருக்கிறர்கள்.
இந்தியாஎதிர்பியக்க கோசத்தை இரவல் வாங்கி கோசம் போட்டு ஆவது ஏதும் இல்லை.
எம்மிடம் இருக்கும் சாதீயத்தை நீக்கவேண்டுமா? அதை பற்றி கதையுங்கள். எமது பிரதெசத்தில் சாதியத்தை தூக்கிபிடிப்பொரை விமர்சியுங்கள்.
நாம் எம்மை திருத்திகொள்வோம்.
பிரமணார்கள் என்று எழுதி ஈழத்தில் எதிராக இல்லமல் இருப்பவர்களை எதிரான் மன உணர்விற்கு கொண்டு வரதீர்கள்.
குளக் காடான் இங்கு எவரும் பிராமணரைப் பற்றிக் கதைக்க வில்லை,அவர்களும் மனிதர்களே,ஈழத்தவரே. நாங்கள் இங்கு சாடுவது பிராமணியத்தையும்,தமிழ் நாட்டில் இருந்து கொண்டு எமக்கு எதிராகச் செயற்படும் பிராமணியத்தைப் பின் புலமாகக் கொண்டவர்களைப் பற்றியே. நாங்கள் இவற்றைக் கதைக்காமல் எங்கள் எதிரிகளை அடயாளம் காட்ட முடியாது,இவர்கள் இன்று இணயத்தில் தமிழில் எமக்கு எதிராக பல நச்சு விதைகளை விதைத்து வருகிறார்கள்,வரலாறு அறியாதவர் இவற்றை இலவசமாக வாசித்து புத்தி பேதலித்துள்ளனர்.இவற்றுக்கு நாம் இங்கு பதில் அழிக்காது விடின்,இணயத்தில் எமது கருத்தியல்களை நாம் ஏற்ற முடியாது.

