09-05-2005, 10:11 PM
KULAKADDAN Wrote:பிராமணர்கள்,
இந்தியாவில் இருந்த களச்சூழ்நிலை வேறு,இலங்கையில் உள்ள களச்சூழ்நிலை வேறு. இந்தியாவில் பிராமணர்களுக்கு எதிரான இயக்கம் போல் செயற்படவேண்டிய நிலையில் ஈழத்தில் இல்லை. ஈழத்தில் பெரும் பாலும் போராட்டத்துக்கு ஆதரவாகவே அவர்கள் இருக்கிறனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிராமணரை பிரித்து அவர்களை தாக்கி எழுதி அவர்களை எம்மில் இருந்து அன்னியப்படுத்தும் வகையில் செயற்படுவது எமது நாட்டிற்கு நல்லதா என யோசிக்க வேண்டும். போராளியான பிராமணர்களும் இருக்கிறர்கள்.
இந்தியாஎதிர்பியக்க கோசத்தை இரவல் வாங்கி கோசம் போட்டு ஆவது ஏதும் இல்லை.
எம்மிடம் இருக்கும் சாதீயத்தை நீக்கவேண்டுமா? அதை பற்றி கதையுங்கள். எமது பிரதெசத்தில் சாதியத்தை தூக்கிபிடிப்பொரை விமர்சியுங்கள்.
நாம் எம்மை திருத்திகொள்வோம்.
பிரமணார்கள் என்று எழுதி ஈழத்தில் எதிராக இல்லமல் இருப்பவர்களை எதிரான் மன உணர்விற்கு கொண்டு வரதீர்கள்.
ஈழத்தில் அவர்கள் எதிர்ப்பைக் காட்டாத காரணம், அங்கு பல்லைபிடுங்கிய பாம்பாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களும், தாங்கள் தமிழரல்ல, தமிழரை விட உயர்ந்தவர்கள் என்று தான் நினைக்கிறார்கள். தமிழை யாராவது இழிவு செய்தால், இந்தியாவில் செய்தாலென்ன, இலங்கையில் செய்தாலென்ன. தமிழரெல்லாரையும், தமிழ் ஒன்று சேர்ப்பதில்லையா? First of all we have to get rid of this Indian Tamil/ Eelam Tamil mentality.

