11-04-2003, 08:50 PM
Ampalathar Wrote:அன்பின் அஜீவன் உங்களிடம் நான் மதிக்கும் விடங்களில் முதன்மையானது விமர்சனங்களை நீங்கள் அணுகும் முறை. புகழ்ச்சியான வார்த்தைகளில் மட்டும் மயங்கியிருக்காமல் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை கண்டு துவண்டுபோகாமல் பரீட்சைத்தாளில் விட்ட பிழைக்கான காரணத்தைத் தேடி அறியும் மாணவன்போல விட்ட தவறுகளை அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுக்களாக மாற்றிக்கொள்ளும் பண்புதான். இந்தப் பண்பொன்று போதும் சிகரங்களைச் சீக்கிரம் தொடுவதற்கு.
aathipan Wrote:எச்சில் போர்வைகள் -என் உணர்வுகள்
யாழ்பாணத்தில் இருக்கும் போது
நானும் என் அண்ணிடம் அதை அனுப்பு இதை அனுப்பு என்று தொந்தரவு செய்வதுண்டு. அப்போதல்லாம் வெளிநாடு சென்றவர்களின் நிலை எனக்கு பெரிதாக தெரிவதே இல்லை. இந்தியாவந்தும் பணம் அனுப்பு நானும் வெளிநாடு வரவேண்டும் என்று கேட்டு வாங்கி ஏஜண்டுகளிடம் பலதடவை கொடுத்து ஏமாந்து உள்ளேன். எல்லாவற்றையும் இப்போதுதான் நான் உணர்கின்றேன்.
எச்சில் போர்வைகளில் கேட்ட துப்பாக்கிச்சத்தங்கள் என் இதயத்தை ஒரு நொடி நிறுத்தி பழைய நினைவுகளை மீட்டுவந்ததுவிட்டன. பன்னிரண்டு வருடங்கள் எல்லாம் மறந்திருந்தவனை ஒரு நொடியில் பழையநிலைக்கு அழைத்துச் சென்று மீண்டும் மீட்டு வந்ததுவிட்டது. அந்த ஒரு சில விநாடிகளின் ஒவ்வொரு பிரேம்களும் ஒவ்வொரு நிகழ்வுகள் . நன்றி அஜீவன் உங்களிடம் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.
நன்றிகள் அம்பலத்தார்,ஆதிபன், <span style='font-size:25pt;line-height:100%'>AA</span>
ஓவ்வொருவரது உணர்விலும், ஓர் படைப்பினுாடாக ,ஒரே ஒரு நொடியாவது என்னால் உங்களோடு கலந்திருக்க முடிந்தால் அது ஒன்றே போதும்............
என்னைத் துாக்கினாலும்,தள்ளினாலும் நான் உங்களோடு பக்கத்தில்தான் நிற்பேன்..................
குறையாக இருந்தால் தெரிந்து கொள்ள ஆசைப்படுவேன்.அதை விளக்கினால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன்.
என் முகம் எனக்குத் தெரிவதில்லையே?
அன்பின்
அஜீவன்

