11-04-2003, 05:00 PM
அன்பின் அஜீவன் உங்களிடம் நான் மதிக்கும் விடங்களில் முதன்மையானது விமர்சனங்களை நீங்கள் அணுகும் முறை. புகழ்ச்சியான வார்த்தைகளில் மட்டும் மயங்கியிருக்காமல் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை கண்டு துவண்டுபோகாமல் பரீட்சைத்தாளில் விட்ட பிழைக்கான காரணத்தைத் தேடி அறியும் மாணவன்போல விட்ட தவறுகளை அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுக்களாக மாற்றிக்கொள்ளும் பண்புதான். இந்தப் பண்பொன்று போதும் சிகரங்களைச் சீக்கிரம் தொடுவதற்கு.

