09-04-2005, 05:26 PM
விஜயகாந்த் செய்த துரோகம்! தயாரிப்பாளர் சங்கத் தலைவர் வருத்தம்!!
இயக்குநர் தங்கர்பச்சான் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் உறுதிமொழி அளித்தும் கூட, நடிகர், நடிகைகள் வேலை நிறுத்தம் செய்ததன் மூலம், தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் துரோகம் இழைத்து விட்டார் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியுள்ளார்.
நடிகைகள் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கூறிய கருத்துக்களையடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர், நடிகையர் கோரிக்கை விடுத்தனர். இல்லாவிட்டால் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என விஜயகாந்த் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு நேரில் சென்று தங்கர்பச்சான் மன்னிப்பு கேட்டார். அப்போது நடிகைகள் குஷ்பு, விந்தியா போன்றோர் தங்கர்பச்சானை சரமாரியாக திட்டித் தீர்த்தனர். இந்த நிலையில் தங்கர்பச்சான் விவகாரத்தில், விஜயகாந்த் நடந்து கொண்ட விதம் மிகப் பெரிய துரோகச் செயல் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த்துக்கு, தியாகராஜன் விரிவான கடிதம் எழுதியுள்ளார். அதில், திரைப்படம் என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலை சரியான முறையில் இயங்க பல எந்திரங்கள் உள்ளன. அவற்றிற்கு பல சக்கரங்கள் உள்ளன. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட உரிமையாளர்கள், இயக்குநர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் ஆகியோர்தான் அந்த சக்கரங்கள்.
இவர்களில் யார் சரியாக இயங்காவிட்டாலும் திரைப்படத் துறை நலிவுற்றுப் போய் விடும். எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விடும்.
இயக்கநர் தங்கர்பச்சான் நடிகைகள் குறித்துப் பேசியது எங்களுக்கு வருத்தமளித்தது, அதனால் எங்களுக்கும் மன வருத்தம்தான். அதில் சந்தேகமே இல்லை. இதுதொடர்பாக நடிகர்ச ங்கத் தலைவர் என்ற முறையில் நீங்கள் அவரை மன்னிப்பு கேட்கச் சொன்னீர்கள், அதுவும் நியாயம்தான்.
ஆனால் தங்கர்பச்சான் என்ற தனி நபர் ஒருவருக்காக, திரைப்படத் துறையையே முடக்க நினைத்து நடிகர், நடிகையர் வேலைநிறுத்தத்தை அறிவித்தது எங்களை வேதனை அடையச் செய்தது.
ஸ்டிரைக் அறிவித்த தினத்தன்று நானும், முன்னாள் தலைவர் முரளீதரன், இயக்குநர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் உங்களுடனும், சரத்குமாருடனும் தொலைபேசியில் பேசினோம். அப்போது தங்கர்பச்சான் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று கூறினீர்கள். அதை நாங்களும் ஏற்றுக் கொண்டோம்.
அந்த உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக தரும்படியும் கேட்டீர்கள். அதுபோல கொடுத்தால் படப்பிடிப்பு நடக்கும் எனவும் கூறினீர்கள். அதை நம்பி நாங்களும் பத்திரிக்கை தொடர்பாளர் சிங்காரவேலன் மூலம் கடிதம் கொடுத்தனுப்பினோம்.
ஆனால் அன்று இரவு நாங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது, மறு நாள் பிற்பகல் 2 மணி முதல்தான் படப்பிடிப்பு தொடங்கும் என நீங்கள் அறிவித்ததாக செய்தி வெளியானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். உங்களது அறிவிப்பு எங்களுக்கு வேதனையையும், வியப்பையும் அளித்தது.
நீங்கள் கூறிய வார்த்தையை நம்பித்தான் நாங்கள் உங்களுக்கு கடிதம் தந்தோம். அதை பத்திரிக்கைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தோம். ஆனால் அதை மீறி பத்திரிக்கைகளுக்கு அதை நீங்கள் அறிவித்தீர்கள். அப்படியென்றால் எங்களது கடிதத்திற்கு நீங்கள் கொடுத்த மரியாதை அவ்வளவுதானா?
சினிமாவில் நம்பிக்கைதான் முக்கியம். ஆனால் உங்களை நம்பிய எங்களை ஏமாற்றி விட்டீர்கள். உங்களது அறிவிப்பால் திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் வரை தயாரிப்பாளர்கள் பட்ட நஷ்டம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்களும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் எங்களுக்குச் செய்தது மாபெரும் துரோகம். அது மட்டுமல்லாமல், தங்கர்பச்சான் நேரில் வந்து மன்னிப்பு கேட்ட பிறகும், பிரச்சினையை அத்துடன் முடிக்காமல், இனிமேல் நடிகர், நடிகைகள் குறித்து யாராவது பேசினால் ஸ்டிரைக்தான் என்று தன்னிச்சையாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.
ஒரு படப்பிடிப்பு நின்று போனால் யாருக்கு நஷ்டம்.? பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும், அதற்கு யார் பொறுப்பு? எந்த சங்கம் அதை ஈடு கட்ட முடியும்?
எந்தக் காலத்திலும், எந்தப் பிரச்சினைக்காகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று நாம் செயத் கொண்ட ஒப்பந்தத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார் தியாகராஜன்.
இயக்குநர் தங்கர்பச்சான் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் உறுதிமொழி அளித்தும் கூட, நடிகர், நடிகைகள் வேலை நிறுத்தம் செய்ததன் மூலம், தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் துரோகம் இழைத்து விட்டார் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியுள்ளார்.
நடிகைகள் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கூறிய கருத்துக்களையடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர், நடிகையர் கோரிக்கை விடுத்தனர். இல்லாவிட்டால் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என விஜயகாந்த் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு நேரில் சென்று தங்கர்பச்சான் மன்னிப்பு கேட்டார். அப்போது நடிகைகள் குஷ்பு, விந்தியா போன்றோர் தங்கர்பச்சானை சரமாரியாக திட்டித் தீர்த்தனர். இந்த நிலையில் தங்கர்பச்சான் விவகாரத்தில், விஜயகாந்த் நடந்து கொண்ட விதம் மிகப் பெரிய துரோகச் செயல் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த்துக்கு, தியாகராஜன் விரிவான கடிதம் எழுதியுள்ளார். அதில், திரைப்படம் என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலை சரியான முறையில் இயங்க பல எந்திரங்கள் உள்ளன. அவற்றிற்கு பல சக்கரங்கள் உள்ளன. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட உரிமையாளர்கள், இயக்குநர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் ஆகியோர்தான் அந்த சக்கரங்கள்.
இவர்களில் யார் சரியாக இயங்காவிட்டாலும் திரைப்படத் துறை நலிவுற்றுப் போய் விடும். எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விடும்.
இயக்கநர் தங்கர்பச்சான் நடிகைகள் குறித்துப் பேசியது எங்களுக்கு வருத்தமளித்தது, அதனால் எங்களுக்கும் மன வருத்தம்தான். அதில் சந்தேகமே இல்லை. இதுதொடர்பாக நடிகர்ச ங்கத் தலைவர் என்ற முறையில் நீங்கள் அவரை மன்னிப்பு கேட்கச் சொன்னீர்கள், அதுவும் நியாயம்தான்.
ஆனால் தங்கர்பச்சான் என்ற தனி நபர் ஒருவருக்காக, திரைப்படத் துறையையே முடக்க நினைத்து நடிகர், நடிகையர் வேலைநிறுத்தத்தை அறிவித்தது எங்களை வேதனை அடையச் செய்தது.
ஸ்டிரைக் அறிவித்த தினத்தன்று நானும், முன்னாள் தலைவர் முரளீதரன், இயக்குநர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் உங்களுடனும், சரத்குமாருடனும் தொலைபேசியில் பேசினோம். அப்போது தங்கர்பச்சான் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று கூறினீர்கள். அதை நாங்களும் ஏற்றுக் கொண்டோம்.
அந்த உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக தரும்படியும் கேட்டீர்கள். அதுபோல கொடுத்தால் படப்பிடிப்பு நடக்கும் எனவும் கூறினீர்கள். அதை நம்பி நாங்களும் பத்திரிக்கை தொடர்பாளர் சிங்காரவேலன் மூலம் கடிதம் கொடுத்தனுப்பினோம்.
ஆனால் அன்று இரவு நாங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது, மறு நாள் பிற்பகல் 2 மணி முதல்தான் படப்பிடிப்பு தொடங்கும் என நீங்கள் அறிவித்ததாக செய்தி வெளியானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். உங்களது அறிவிப்பு எங்களுக்கு வேதனையையும், வியப்பையும் அளித்தது.
நீங்கள் கூறிய வார்த்தையை நம்பித்தான் நாங்கள் உங்களுக்கு கடிதம் தந்தோம். அதை பத்திரிக்கைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தோம். ஆனால் அதை மீறி பத்திரிக்கைகளுக்கு அதை நீங்கள் அறிவித்தீர்கள். அப்படியென்றால் எங்களது கடிதத்திற்கு நீங்கள் கொடுத்த மரியாதை அவ்வளவுதானா?
சினிமாவில் நம்பிக்கைதான் முக்கியம். ஆனால் உங்களை நம்பிய எங்களை ஏமாற்றி விட்டீர்கள். உங்களது அறிவிப்பால் திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் வரை தயாரிப்பாளர்கள் பட்ட நஷ்டம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்களும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் எங்களுக்குச் செய்தது மாபெரும் துரோகம். அது மட்டுமல்லாமல், தங்கர்பச்சான் நேரில் வந்து மன்னிப்பு கேட்ட பிறகும், பிரச்சினையை அத்துடன் முடிக்காமல், இனிமேல் நடிகர், நடிகைகள் குறித்து யாராவது பேசினால் ஸ்டிரைக்தான் என்று தன்னிச்சையாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.
ஒரு படப்பிடிப்பு நின்று போனால் யாருக்கு நஷ்டம்.? பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும், அதற்கு யார் பொறுப்பு? எந்த சங்கம் அதை ஈடு கட்ட முடியும்?
எந்தக் காலத்திலும், எந்தப் பிரச்சினைக்காகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று நாம் செயத் கொண்ட ஒப்பந்தத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார் தியாகராஜன்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

