09-04-2005, 05:24 PM
திரிஷாவுக்கு அண்ணன் ஆவாரா சரத்குமார்?
இளம் தலைமுறை நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கை முடிவில் இருக்கும் திரிஷாவின் புதிய படம் ஒன்றில் அவருக்கு அண்ணாக நடிக்க வர்றீகளா என்று கேட்டு சரத்குமார், பிரபு, அர்ஜூன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஆகியோரைக் கேட்டு அவர்களிடம் திட்டு வாங்கித் திரும்பியுள்ளாராம் அப்படத்தின் இயக்குநர்.
தமிழில் பேசுவதையே அறவே தவிர்க்கும் தமிழ்ப் பெண்ணான திரிஷா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இங்கே கொடுப்பதை விட பல மடங்கு அதிகம் டப்பு கிடைப்பதால் தெலுங்குப் படங்களுக்கே முதலிடம் கொடுத்து நடித்துப் பணத்தைக் குவித்து வருகிறார் திரிஷா.
அங்கு திரிஷா நடித்த அத்தனை படங்களும் சில்வர் ஜூப்ளியைத் தாண்டியதால், திரிஷாவைப் புக் பண்ண நடிகர்களிடையே தள்ளு முள்ளே நடக்கிறது. சமீபத்தில் திரிஷா நடித்து பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு படம் (பிரபு தேவா இயக்கியது) தமிழில் ரீமேக் ஆக உள்ளது (ஆனால் இங்கே பிரபு தேவா இயக்கவில்லை).
இதிலும் திரிஷாவே நடிக்கவுள்ளார். இப்படத்தில் திரிஷாவின் அண்ணன் கேரக்டரில் பிரபல நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாம் என படத்தின் இயக்குநர் நினைத்துள்ளார். உடனே முத்த தலைமுறை நடிகர்களின் பட்டியலைத் தயார் செய்துள்ளார். அதில் சரத்குமார், பிரபு, அர்ஜூன் ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
முதலில் சரத்குமாரை அணுகி கேட்டுள்ளார். காக்கி படத்திற்காக அடித்த மொட்டைத் தலையுடன் இருந்த சரத்குமார், இயக்குநர் கூறியதைக் கேட்டதும் எதுவும் பேசாமல் தலையில் கையை வைத்துத் தடவிக் கொண்டே அவரை ஒரு பார்வை பார்த்தாராம். பிறகு ஏன் இயக்குநர் அங்கே இருக்கப் போகிறார்? ஜூட் விட்ட அவர் நேராக பிரபுவிடம் போயுள்ளார்.
பிரபுவோ, இதெல்லாம் தேவையில்லாத குசும்பு, கிளம்புங்க என்று கூறி அனுப்பி விட்டாராம். சரி, அடுத்து அர்ஜூனைப் பார்க்கலாம் என்று நினைத்து அவரிடம் போயுள்ளார் இயக்குநர். அர்ஜூனோ, எனக்கு வயசாகி விட்டதாக யார் கூறியது? நான் நடிச்ச படங்களை படங்களை முதலில் சரியாகப் பாருங்கள், அப்புறமாக என்னிடம் வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டார்.
சோர்ந்து போகாத இயக்கநர் நேராக மம்முட்டியை அணுகியுள்ளார். மம்முட்டியோ கடுப்பாகிப் போய் தாறுமாறாக பேச, ஓடியே விட்டாராம் இயக்குநர். இப்படியாக திரிஷாவுக்கு அண்ணன் கிடைக்காமல் தடுமாறிப் போயிருக்கிறார் இயக்குநர்.
விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் அண்ணன் கேரக்டருக்கு அப்புறமாக ஆளைப் பார்த்துக்கலாம் முதலில் படப்பிடிப்பை ஆரம்பிங்கப்பா என்று தயாரிப்பாளர் தரப்பு இயக்குநருக்கு டோஸ் கொடுத்துள்ளதாம்.
இதனால் திரிஷாவின் பார்ட்டை மட்டும் முதலில் எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர். இன்னும் சத்யராஜே உம்மா, உம்ம்மா என்று டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். அதற்குள் அவர்களை அண்ணனாகவும், அப்பாவாகவும் நினைக்க அந்த இயக்குநருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?
அவரை விடுங்க, திரிஷா இப்போது தெலுங்கில் 75 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். அதைக்ö காடுக்க தெலுங்கு வாலாக்கள் தயாராக இருப்பதால் துட்டை வாங்கிக் கொண்டு தூள் கிளப்புகிறார் திரிஷா. தமிழில் விரைவில் 3 படங்களில் நடிக்கவுள்ளார் திரிஷா. இந்தப் படங்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பினால், தமிழிலும் 75தான் என்று கூறுகிறதாம் திரிஷா தரப்பு.
ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே!
இளம் தலைமுறை நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கை முடிவில் இருக்கும் திரிஷாவின் புதிய படம் ஒன்றில் அவருக்கு அண்ணாக நடிக்க வர்றீகளா என்று கேட்டு சரத்குமார், பிரபு, அர்ஜூன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஆகியோரைக் கேட்டு அவர்களிடம் திட்டு வாங்கித் திரும்பியுள்ளாராம் அப்படத்தின் இயக்குநர்.
தமிழில் பேசுவதையே அறவே தவிர்க்கும் தமிழ்ப் பெண்ணான திரிஷா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இங்கே கொடுப்பதை விட பல மடங்கு அதிகம் டப்பு கிடைப்பதால் தெலுங்குப் படங்களுக்கே முதலிடம் கொடுத்து நடித்துப் பணத்தைக் குவித்து வருகிறார் திரிஷா.
அங்கு திரிஷா நடித்த அத்தனை படங்களும் சில்வர் ஜூப்ளியைத் தாண்டியதால், திரிஷாவைப் புக் பண்ண நடிகர்களிடையே தள்ளு முள்ளே நடக்கிறது. சமீபத்தில் திரிஷா நடித்து பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு படம் (பிரபு தேவா இயக்கியது) தமிழில் ரீமேக் ஆக உள்ளது (ஆனால் இங்கே பிரபு தேவா இயக்கவில்லை).
இதிலும் திரிஷாவே நடிக்கவுள்ளார். இப்படத்தில் திரிஷாவின் அண்ணன் கேரக்டரில் பிரபல நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாம் என படத்தின் இயக்குநர் நினைத்துள்ளார். உடனே முத்த தலைமுறை நடிகர்களின் பட்டியலைத் தயார் செய்துள்ளார். அதில் சரத்குமார், பிரபு, அர்ஜூன் ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
முதலில் சரத்குமாரை அணுகி கேட்டுள்ளார். காக்கி படத்திற்காக அடித்த மொட்டைத் தலையுடன் இருந்த சரத்குமார், இயக்குநர் கூறியதைக் கேட்டதும் எதுவும் பேசாமல் தலையில் கையை வைத்துத் தடவிக் கொண்டே அவரை ஒரு பார்வை பார்த்தாராம். பிறகு ஏன் இயக்குநர் அங்கே இருக்கப் போகிறார்? ஜூட் விட்ட அவர் நேராக பிரபுவிடம் போயுள்ளார்.
பிரபுவோ, இதெல்லாம் தேவையில்லாத குசும்பு, கிளம்புங்க என்று கூறி அனுப்பி விட்டாராம். சரி, அடுத்து அர்ஜூனைப் பார்க்கலாம் என்று நினைத்து அவரிடம் போயுள்ளார் இயக்குநர். அர்ஜூனோ, எனக்கு வயசாகி விட்டதாக யார் கூறியது? நான் நடிச்ச படங்களை படங்களை முதலில் சரியாகப் பாருங்கள், அப்புறமாக என்னிடம் வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டார்.
சோர்ந்து போகாத இயக்கநர் நேராக மம்முட்டியை அணுகியுள்ளார். மம்முட்டியோ கடுப்பாகிப் போய் தாறுமாறாக பேச, ஓடியே விட்டாராம் இயக்குநர். இப்படியாக திரிஷாவுக்கு அண்ணன் கிடைக்காமல் தடுமாறிப் போயிருக்கிறார் இயக்குநர்.
விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் அண்ணன் கேரக்டருக்கு அப்புறமாக ஆளைப் பார்த்துக்கலாம் முதலில் படப்பிடிப்பை ஆரம்பிங்கப்பா என்று தயாரிப்பாளர் தரப்பு இயக்குநருக்கு டோஸ் கொடுத்துள்ளதாம்.
இதனால் திரிஷாவின் பார்ட்டை மட்டும் முதலில் எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர். இன்னும் சத்யராஜே உம்மா, உம்ம்மா என்று டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். அதற்குள் அவர்களை அண்ணனாகவும், அப்பாவாகவும் நினைக்க அந்த இயக்குநருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?
அவரை விடுங்க, திரிஷா இப்போது தெலுங்கில் 75 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். அதைக்ö காடுக்க தெலுங்கு வாலாக்கள் தயாராக இருப்பதால் துட்டை வாங்கிக் கொண்டு தூள் கிளப்புகிறார் திரிஷா. தமிழில் விரைவில் 3 படங்களில் நடிக்கவுள்ளார் திரிஷா. இந்தப் படங்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பினால், தமிழிலும் 75தான் என்று கூறுகிறதாம் திரிஷா தரப்பு.
ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே!
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

