09-04-2005, 09:58 AM
Mathan Wrote:சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமெரிக்க அரசு சரிவர உதவிகள் செய்யவில்லை என்று அந்த பிரதேசத்து மக்களிடம் இருந்து கடும் கண்டங்கள்கள் முறைப்பாடுகள் வந்தபடி இருக்கின்றது. ஏற்கனவே சூறாவளியால் பாதிக்கப்பட்டு சிதைந்து போய் இருக்கும் அந்த பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த சம்பவத்தை பயன்படுத்தி கொள்ளை உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. போதாகுறைக்கு அங்கு தீ விபத்து வேறு ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவா அல்லது மூன்றாம் உலக நாடா தெரியவில்லை? பண படை பலமிருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவினால் ஏன் இந்த பிரைச்சனையை இலகுவாக கையாள முடியவில்லை? ஏன் அந்த மக்கள் இவ்வளவு அல்லல்படுகின்றார்கள்? அந்த பிரதேசம் அமெரிக்காவில் பின் தங்கிய பிரதேசங்களில் ஒன்றாக இருப்பதுடன் "அமெரிக்காவின் வேஸ்ட் லாண்ட்" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மதன் அதுதான் இங்க முக்கியமா போய்க்கொண்டிருக்கு...
நியூ ஆர்லியான்ஸ் நகரில் 95% வீதமானவர் கறுப்பர்களாம்.. அதனால்தான் அரசு அக்கறை அற்று இருப்பதாக புரளியை கிளப்புகிறார்கள்.. அதைவிட நியூ ஆர்லியான்ஸ் வை அண்டி இருந்த மீட்புப்பணியாளர்கள் தங்களுக்கு எந்த விதமான முனறிவித்தலும் வளங்கப்படவில்லை எண்றும். தாங்கள் அழிவின் செய்திகள் பத்திரிகை தொலைக்காட்ச்சி வாயிலாகத்தான் அறிந்ததாகவும் சொல்கிறார்கள்..
எது எப்படி இருந்தாலும்.. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது இலங்கை அரசு செயற்பட்டதிலும் பார்க்க அமெரிக்க அரசு அக்கறையோடு செயற்படுகிறது... ஆனால் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் போல் எவையும் ஒருங்கினைக்கப் பட்டதாய் இல்லை என்பதுதான் உண்மை..
::

