09-04-2005, 12:16 AM
கட்டுரை ஆசிரியர் நன்றாகச் சாம்பார வைத்தள்ளார். மற்றவர்களும் உங்கள் பங்கிற்கு ஏதேதோ எல்லாம் எழுதியுள்ளீர்கள. சீதனச் தடைச்சட்டம் கொண்டு வந்து 10 வருடங்கள் நிறைவிற்கு கட்டுரை ஆசிரியர் பலவற்றை ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆனால் இந்தச் சீதனச் தடைச்சட்டம் எந்தளவு வெற்றியளித்தது என்பது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. பாவம் இராமாயணத்தை கூட ஒழுங்காக படிக்காதவரிடம் எல்லாவற்:றையும் எதிர் பார்க்க முடியாதுதான். இராமாயணத்தில் இலக்குவன் ஏன் சீதைக்கு கோடு கிழித்தான் என்பது கூடத் தெரியவில்லை. எனது ஊரிலேயே ஒருவர் ஒரு பெண்ணைக் காதலித்து பெண் வீட்டார் சம்மதிக்காததால் பெண்ணைக் கடத்திச் சென்றார். இதன் பின்பு தன்நண்பர்கள் சகிதம் பெண்ணின் தந்தையை மிரட்டி பெண்ணிற்கு வீடு வளவையும் எழுதி நகை சீதனம் போன்றவற்றையும் தருமாறு மிரட்டினார். இந்த மிரட்டல் தொடர்ந்ததால் பெண்ணின் தந்தை எல்லாவற்றையும் மகளிற்கே எழுதிவைத்துவிட்டு வவுனியாவில் தனது உறவினர்களோடு வந்து தங்கியுள்ளார். இவ்வளவும் செய்தவர் ஏதோ நம்மூர் ரவுடி என்று எண்ணி விடாதீர்கள். அவர் ஒரு இயக்கப:போராளி. அவருடன் சென்று பெண்ணின் தந்தையை மிரட்டியவர்களும் போராளிகள்தான்.
வல்லோன் வகுத்ததே சட்டம்
வல்லோன் வகுத்ததே சட்டம்

