Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதயனின் பொய்
#21
ஜனாதிபதியைக் கொலைசெய்வதற்கு
அமைச்சர்கள் புலிகளுடன் பேசிச் சதி!
சிறீலங்கா சுதந்திரக்கட்சி சந்தேகம் தெரிவிப்பு
அமைச்சர்கள் நால்வர் வவுனியா வில் விடுதலைப் புலிகளின் தலை வர்களைச் சந்தித்து இரகசியமாக - பேச்சு நடத்தியமை ஜனாதிபதி யைக் கொலை செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனரா என்ற சந்தேகத்தை எமக்கு எழுப்பியுள்ளது.
- இவ்வாறு சிறீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:-
நேற்றுமுன்தினம் அதிகாலை அர சின் உயர் மட்ட அமைச்சர்கள் வவுனி யாவுக்குச் சென்று விடுதலைப் புலி களின் தலைவர்களைச் சந்தித்து இரகசியமாகப் பேச்சு நடத்தியமை எமக்குப் பெரும் சந்தேகத்தை உண்டு பண்ணியுள்ளது.
இவர்களின் திடீர் விஜயம் பற்றி சகல ஊடகங்களுக்கும் இவர் கள் மறைத்தமை.
பொறுப்புவாய்ந்த பாதுகாப்பு அதிகாரிகளின் துணையின்றி விடுத லைப் புலிகளின் பகுதிக்குச் சென்றமை.
அரசின் சமாதான நடவடிக் கைக்கு எதுவித சம்பந்தமும் இல் லாத அமைச்சர்கள் நால்வர் அங்கு சென்றமை.
இந்த அமைச்சர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள் ளமை.
புலிகளின் இராணுவப் பிரிவில் 15 வருடங்களுக்கு மேல் கடமை புரியும் - இராணுவத்துக்கு எதிரான பல தாக்குதலில் கலந்துகொண்ட - புலித்தேவனை சந்தித்துப் பேசி யமை.
ஜனாதிபதியின் நடமாட்டம் பற்றி அறிவதற்கு கொழும்புக்கு வந்து ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்த வர் புலித்தேவன் என்பதைத் தெரிந் தும் அவரைச் சந்திக்கச் சென்றமை.
அங்கு நடந்த பேச்சுக்களை வெளியே சொல்லாமல் இவர்கள் இர கசியமாய் செயற்பட்டமை.
மேற்கூறிய விடயங்கள் எமது சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்துள்ளன.
விடுதலைப் புலிகளால் முன்வைக் கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகத் திட்டவரைவுக்கு இணங்கி புலிகள் கேட்டதை கொடுப்பதற்கு அரசு தீர் மானித்துள்ளது. அதைத் தடுக்கும் ஒரு பிரதான நபராக ஜனாதிபதி செயற் படுவதால் அவரைத் தீர்த்துக்கட்டும் நோக்குடன் இச்சந்திப்பு இடம்பெற்றி ருக்கலாம் என நாம் சந்தேகப்படுகின் றோம்.
ஜனாதிபதியுடன் செயற்படும் முக் கிய உறுப்பினர்களான லக்~;மன் கதிர்காமர், டக்ளஸ் தேவானந்தா, மங் கள சமரவீர, விமல் வீரவன்ஸ, ரில் வின் சில்வா உட்பட எதிர்க்கட்சியின் 20 பேரைக் கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டம் தீட்டி யுள்ளனர் எனப் பாதுகாப்புப் புல னாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
எமது சந்தேகத்தை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் - இப்படி அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளது.
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 01:45 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 01:47 PM
[No subject] - by Paranee - 11-03-2003, 02:53 PM
[No subject] - by Paranee - 11-03-2003, 02:54 PM
[No subject] - by kuruvikal - 11-03-2003, 05:19 PM
[No subject] - by yarl - 11-03-2003, 07:45 PM
[No subject] - by சாமி - 11-03-2003, 07:49 PM
[No subject] - by Mathivathanan - 11-03-2003, 08:23 PM
[No subject] - by yarl - 11-03-2003, 08:28 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 09:08 PM
[No subject] - by yarl - 11-03-2003, 09:12 PM
[No subject] - by yarl - 11-03-2003, 09:15 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 09:19 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 09:24 PM
[No subject] - by yarl - 11-03-2003, 09:36 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 09:46 PM
[No subject] - by kayanmathi - 11-03-2003, 11:58 PM
[No subject] - by AJeevan - 11-04-2003, 12:49 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 05:20 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 06:23 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 08:19 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 08:22 AM
[No subject] - by தணிக்கை - 11-04-2003, 08:48 AM
[No subject] - by Kanani - 11-04-2003, 09:12 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 09:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)